India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போயிங் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் டாய்லெட்டில் சிக்கிக் கொண்டுள்ளார். டாய்லெட்டின் தாழ்ப்பாள் பழுதானதால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரித்த USA விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், அனைத்து போயிங் விமானங்களின் பிரச்னைகளை சரி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து ₹29.16 கோடி செலவில் 2,612 விமானங்களின் டாய்லெட் தாழ்ப்பாளை மாற்ற போயிங் முடிவு செய்துள்ளது.
சனி பகவான், வரும் ஜூலை 13-ல் மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் நேர்மறை பலன்கள் அடையும் ராசிகள்: *கன்னி: வேலை, தொழிலில் முன்னேற்றம். காதல், திருமண வாழ்க்கை சிறக்கும். வீடு, வாகன யோகம் *மீனம்: ஆரோக்கியம், ஆற்றல் அதிகரிக்கும். செல்வாக்கு கூடும். வேலை, தொழிலில் முன்னேற்றம் *மகரம்: அதிர்ஷ்டம் சாதகமாகும். வெற்றி கிடைக்கும். வாய்ப்புகள் தேடிவரும், மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும்.
நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நேற்று அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இதில் பேசிய மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளும் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடுவதாக தெரிவித்தார். அதேபோல், நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், ஏப்ரல் 14ஆம் தேதியை அம்பேத்கர் தினமாக அறிவித்தார்.
வங்கி மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்ஷியை கைது செய்ததற்கு 125 ஆண்டு பழமையான ஒப்பந்தமே காரணமாம். சுதந்திரத்திற்கு
முன்பாக இந்தியாவை ஆண்ட பிரிட்டன் 1907 ல் இரு நாட்டுக்கும் இடையே குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதில், பணமோசடியில் சிக்குவோரை பரஸ்பரம் நாடு கடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. அது தான் வங்கியை மோசடி செய்த சோக்ஷியை பிடிக்க உதவியிருக்கிறது.
பிரபல இயக்குநரும் திரைப்பட நடிகருமான <<16108100>>S.S.ஸ்டான்லி(58) காலமானார்.<<>> இவரின் மறைவுக்கு CM ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், இறுதிச்சடங்குகள் முடிவடைந்த பின், இன்று மாலை சென்னை வளசரவாக்கம் மின்மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. நடிகர்கள் நாசர், பிரகாஷ், இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் இறுதிவரை இருந்து அஞ்சலி செலுத்தினர்.
வீட்டில் நெகடிவ் எனர்ஜியும், துரதிர்ஷ்டமும் சேருவதை தடுக்க, சூரியன் மறைந்தபின் இந்த 7 விஷயங்களை செய்யக் கூடாது என்கிறது பாரம்பரிய நம்பிக்கை: *பூக்கள், இலைகளை கிள்ளக்கூடாது *வீட்டை பெருக்கக் கூடாது *நகங்களை வெட்டக் கூடாது *பால், தயிர், உப்பு ஆகியவற்றை தானம் செய்யக் கூடாது *கண்ணாடியில் அளவுக்கு அதிகமாக முகம் பார்க்கக் கூடாது *வடக்கு நோக்கி படுக்கவோ, தூங்கவோ கூடாது *துளசிச் செடிக்கு நீருற்ற கூடாது.
நாட்டின் மொத்த விலை பணவீக்கம், மார்ச் மாதத்தில் 2.05%ஆக குறைந்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் இது 2.38%ஆக இருந்தது. மேலும், உணவுப்பொருட்களுக்கான பணவீக்கம் மார்ச் மாதத்தில் 1.57%ஆக குறைந்துள்ளது. இது பிப்ரவரி மாதத்தில் 3.38%ஆக இருந்தது. பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், RBIயும் வட்டி விகிதத்தை குறைத்து, லோன் வாங்கியோருக்கு நற்செய்தி கொடுத்து வருகிறது.
சிங்கப்பூரில் அடுத்த பொதுத்தேர்தலுக்காக நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது. மே 3-ல் பொதுத்தேர்தல் நடைபெறும் எனவும், ஏப்ரல் 23-ல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரும் தேர்தலிலும் ஆளும் மக்கள் செயல் கட்சியே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. எனினும் கடந்த தேர்தலில் சந்தித்த பின்னடைவை சரி செய்து வலுவான வெற்றியை பதிவு செய்ய ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது.
அஜித் – ஆதிக் கூட்டணியில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின் ஃபேன் பாயான ஆதிக், தரமான சம்பவத்தை செய்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் படம் வெளியான ஐந்தே நாட்களில் ₹100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக ரோமியோ பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நாட்டின் பிரபல விஞ்ஞானி ரஞ்சித் நாயர் (70) டெல்லியில் நேற்று காலமானார். கேம்பிரிட்ஜ் பல்கலை.,யில் படித்த இவர் இயற்பியல் ஆராய்ச்சியில் மட்டுமல்லாமல் தத்துவத்திலும் ஆர்வமுள்ளவராக இருந்தார். இவர் எழுதிய புத்தகங்களில் Mind, Matter and Mystery, The Republic of Science ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்கவை. இந்திய அறிவியல் வளர்ச்சியையும், அதன் வரலாற்றையும் ஆவணப் படுத்துவதிலும் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.