news

News April 15, 2025

கிரிக்கெட் பேட் அளவு எவ்வளவு இருக்கலாம்?

image

டி20 போட்டிகளில் கூட 200க்கு மேல் ரன்கள் அடிப்பது சர்வ சாதாரணமாகிவிட்ட சூழலில் கிரிக்கெட் பேட்களை அவ்வபோது சோதிப்பது அவசியமாகிறது. ஆகையால்தான், மைதானத்திலேயே பேட்டை சோதிக்கும் முறையை BCCI அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, பேட்டின் அகலம் அதிகபட்சம் 10.8 செமீ, நீளம் அதிகபட்சம் 96.5 செமீ, ஆழம் அதிகபட்சம் 6.7 செமீ, பக்கங்கள் அதிகபட்சம் 4 செமீ மட்டுமே இருக்கலாம்.

News April 15, 2025

நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைக்கிறீர்களா?

image

வேலை காரணமாகவோ, நீண்ட பயணத்தின் போதோ சிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் எவ்வளவு பிரச்னைகள் உண்டாகும் தெரியுமா? தொடர்ந்து நீங்கள் இதுமாதிரி செய்யும்போது, நாளடைவில் அழுத்தம் காரணமாக சிறுநீர்ப்பை தசைகளும், இடுப்பு தசைகளும் வலுவிழக்கும். ​​சிறுநீர்ப் பாதையில் நோய்த்தொற்று ஏற்படும். சிறுநீரகம் செயலிழக்கலாம். கற்கள் உண்டாகும். எனவே, இனிமேல் அடக்கும்முன் கொஞ்சம் யோசிச்சிக்கோங்க!

News April 15, 2025

தங்கையின் இழப்பை நினைத்து உருகிய சிம்ரன்

image

சிம்ரனின் தங்கை மோனலின் 23-வது ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், சிம்ரன் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த 23 வருடங்களில் தங்கையை நினைக்காத நாளே இல்லை எனவும், மோனல் மறைந்திருக்கலாம் ஆனால் யாராலும் மறக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘பார்வை ஒன்றே போதுமே’, ‘பத்ரி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த மோனல், கடந்த 2002-ம் ஆண்டு தனது 21 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

News April 15, 2025

மாநில சுயாட்சியை ஏற்க முடியாது: நயினார்

image

மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற பிரிவினைவாதத்துடன் திமுக அரசு செயல்படுவதாக நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை எனவும், தனி தமிழ்நாடு, தனி கொடி வேண்டும் என CM ஸ்டாலின் நினைப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், மாநில சுயாட்சியை ஏற்க முடியாது எனவும், இந்தியா வல்லரசாக இந்தியா ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

News April 15, 2025

IPL: PBKS அணி ஆல் – அவுட்

image

KKR அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், PBKS அணி 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த PBKS அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும், அடுத்தடுத்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். KKR அணியின் ஹர்ஷித் ராணா அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். KKR அணி 112 என்ற எளிய இலக்குடன் களம் இறங்கவுள்ளது.

News April 15, 2025

நிறை மாத கர்ப்பத்துடன் போட்டோ வெளியிட்ட நடிகை

image

சின்னத்திரை நடிகை தர்ஷனா அசோகன், தனது முதலாம் ஆண்டு திருமண தினத்தில் நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோ வெளியிட்டுள்ளார். நீதானே என் பொன் வசந்தம், கனா, கண்ட நாள் முதல் ஆகிய சீரியல்களில் நடித்த தர்ஷனா, கடந்த ஆண்டு இதே நாளில் அபிஷேக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தனது கர்ப்பம் குறித்த அறிவிப்பை அவர் இன்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

News April 15, 2025

தமிழ்நாட்டுல இவளோ பேருக்கு எய்ட்ஸ் இருக்கா!

image

தமிழகத்தில் 1,57,908 பேருக்கு HIV தொற்று (எய்ட்ஸ்) இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 25,000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். HIV தொற்று, பாலியல் உறவின் மூலம் மட்டுமே அதிகம் பரவுவதால், காண்டம் அணிவது போன்ற பாதுகாப்பான பாலியல் உறவை தேர்ந்தெடுங்கள். HIV தொற்றை குறைப்போம் என்று உறுதி கொள்ளுங்கள்.

News April 15, 2025

சாட்டை யூடியூப் – நாதக தொடர்பில்லை – சீமான்

image

சாட்டை துரைமுருகனின் யூடியூப் சேனலுக்கும், நாதக-வுக்கும் எந்த தொடர்புமில்லை என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள், அனைத்தும் துரைமுருகனின் தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்துள்ளார். அதில் வரும் கருத்துக்களுக்கு நாதக பொறுப்பேற்காது எனவும் சீமான் கூறியுள்ளார். துரைமுருகனின் சமீபத்திய செயல்பாடுகள், உட்கட்சி பிரச்சனைகளின் காரணமாக இந்த அறிக்கை வந்துள்ளது.

News April 15, 2025

அலர்ட்: Toilet-ல் Phone யூஸ் பண்றீங்களா?

image

டாய்லெட்டில் அதிக நேரம் போன் பயன்படுத்துவதால் பல நோய்கள் வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பதால், Posture பிரச்னைகள் வரக்கூடும். குடல், இரைப்பை சார்ந்த நோய்கள், வயிற்றுப்போக்கு, மூல பாதிப்பு ஏற்படும் அபாயங்களும் உள்ளன. மேலும், கழிப்பறையில் உள்ள பாக்டீரியாக்கள் போனில் ஒட்டிக் கொள்வதால், அது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் நோய்களை ஏற்படுத்தும்.

News April 15, 2025

என்னை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை: பொற்கொடி

image

தன்னை கட்சியில் இருந்து நீக்க BSP மாநிலத் தலைவர் ஆனந்தனுக்கு அதிகாரம் இல்லை என பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார். தனது கணவர் கொலை வழக்கில் CBI விசாரணை வேண்டும் என்பதில் ஏன் ஆனந்தன் அக்கறை காட்டவில்லை எனவும், தனக்கு எதிராக அவதூறு செய்தியை பரப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனந்தனுக்கு எதிராக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி புகார் அளித்த நிலையில், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.

error: Content is protected !!