news

News October 29, 2025

ODI-யில் உச்சம் தொட்ட ஹிட்மேன்!

image

ICC வெளியிட்டுள்ள ODI பேட்ஸ்மேன்களின் தரவரிசையில், 781 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா முதல் இடம் பிடித்துள்ளார். நடந்து முடிந்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடரில் அவர் ஒரு சதம், ஒரு அரைசதத்தை விளாசி, தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 38 வயதான ரோஹித் ஓய்வு பெற வேண்டும் என கருத்துக்கள் எழுந்த நிலையில், தனது பேட்டால் விமர்சனங்களுக்கு ஹிட்மேன் பதிலளித்துள்ளார்.

News October 29, 2025

வருமானத்தில் 80% நடிகருக்கு செல்கிறது: செல்வமணி

image

இன்று பல சூப்பர் ஸ்டார்களை, நடிகர்களை உருவாக்கிய தயாரிப்பாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டதாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேதனை தெரிவித்துள்ளார். படத்தின் மொத்த வருமானத்தில் 80% நடிகர்கள் எடுத்து செல்வதால், தயாரிப்பாளர்களால் அடுத்தடுத்து படம் எடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு படம் யாரால் வெற்றியடைகிறது என நடிகர்களுக்கு தெரியவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

News October 29, 2025

விஜய்யுடன் இணைந்து களமிறங்குகிறார்

image

அரசியல் களத்தில் விஜய்க்கு ஆதரவாக அவரது தந்தை SAC களமிறங்குகிறார். அதற்கான முன்னெடுப்பாகவே, N.ஆனந்த் எதிர்ப்பாளர்கள் மூவருக்கு தவெக நிர்வாக குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அந்த மூவரும், விஜய்யின் தந்தை SA சந்திரசேகரின் ஆதரவாளர்கள். கருணாநிதி, MGR, ஜெயலலிதா என 3 முதல்வர்களுடன் SAC பயணம் செய்துள்ளார். இது விஜய்க்கு பக்க பலமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

News October 29, 2025

தீபிகாவை மீண்டும் டார்கெட் செய்கிறதா கல்கி படக்குழு?

image

OTT-ல் ஓடிக்கொண்டிருக்கும் ’கல்கி 2898 AD’ படத்தின் Credits-ல் இருந்து தீபிகா படுகோனின் பெயர் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்வேன் என கூறியதால் கல்கி 2 படத்தின் ப்ராஜெக்ட்டில் இருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கல்கி படக்குழுவின் இச்செயல் குழந்தைத்தனமாக உள்ளது என ரசிகர்கள் சாடி வருகின்றனர்.

News October 29, 2025

யாரை காப்பாற்ற DMK அரசு துடிக்கிறது? அன்புமணி

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் CBI விசாரணைக்கு ஐகோர்ட் ஆணையிட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் 2-வது முறையாக TN அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி, யாரை காப்பாற்ற DMK அரசு முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். TN காவல்துறை செயல்திறனையும், நம்பகத்தன்மையும் இழந்து வருவதாக கூறியுள்ள அவர், மனுவை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளார்.

News October 29, 2025

சமஸ்கிருத எதிர்ப்பால் தமிழ் வளராது: துணை ஜனாதிபதி

image

பிற மொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆதினம் சாந்தலிங்க அடிகளார் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், சமஸ்கிருதத்தை எதிர்ப்பதால் மட்டுமே தமிழ் மொழி வளராது எனவும் கூறியுள்ளார். மேலும், குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News October 29, 2025

மக்கள் நாயகன் காலமானார்.. அமைச்சர் இரங்கல்!

image

தென் மாவட்டங்களில் ‘மக்கள் நாயகன்’ என அழைக்கப்பட்ட <<18127223>>Dr.ராஜசேகர்<<>> மறைவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல் தெரிவித்துள்ளார். ஏழை மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட சேவைகள் நம் அனைவரது மனதிலும் என்றென்றும் நிலைத்து நிற்கும் எனவும் புகழாரம் சூட்டினார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ₹20 – ₹50 வரை மட்டுமே பீஸ் வாங்கி கொண்டு ஏழைகளுக்கு சிகிச்சை அளித்த Dr.ராஜசேகர் மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News October 29, 2025

IND vs AUS: மழை குறுக்கிடுமா?

image

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான T20 போட்டி இன்று தொடங்குகிறது. ODI தொடரை 2- 1 என இழந்த இந்தியா, ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ள நிலையில், மழை அச்சுறுத்தல் உள்ளது. ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் நடைபெறும் போட்டியில், 25% வரை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

News October 29, 2025

அதிமுகவில் இணைந்தனர்.. செந்தில் பாலாஜி அதிர்ச்சி

image

கரூரில் EX அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, MR விஜயபாஸ்கர் இருவரும் மாறி மாறி மாற்றுக்கட்சியினரை தங்கள் வசம் இழுத்து வருகின்றனர். கடந்த 9-ம் தேதி கரூரை சேர்ந்த ADMK நிர்வாகிகள் சிலர் திமுகவில் இணைந்ததாக செந்தில் பாலாஜி தனது SM-ல் பதிவிட்டிருந்தார். உதவி செய்வதாக அழைத்து சென்று திமுக துண்டு போட்டு போட்டோ எடுத்ததாகவும், அவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்ததாகவும் ADMK தரப்பு புதிய போட்டோ வெளியிட்டுள்ளது.

News October 29, 2025

அப்புறம் எதுக்கு இந்த ஆதார்?

image

பேங்க் அக்கவுண்ட் வேலை செய்யாது, ரேஷனில் பொருள் கிடைக்காது என எச்சரிக்கை செய்து, ஆதாரை எல்லா அடையாள சான்றுகளுடனும் இணைக்க வைத்தனர். ஆனால், தற்போது ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே, அதை குடியுரிமை, DOB, வசிப்பிடம் போன்றவற்றுக்கு உறுதியான சான்றாக பார்க்கப்படாது என ECI விளக்கமளித்துள்ளது. அப்போது ஏன் ஆதாரை வலுக்கட்டாயமாக இணைக்க வைத்தீர்கள் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்புகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!