India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் ஆணையர் இந்த மறுப்பை தெரிவித்துள்ளார். மேலும் பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இந்த 10 இடங்களில் மர்மமான அலறல்கள், மாய உருவங்கள், விவரிக்க முடியாத உணர்வு, தற்கொலைகள் என அமானுஷ்ய நடமாட்டங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது: *டிமான்ட்டி காலனி *பெசன்ட் கார்டன் *புரோக்கன் பிரிட்ஜ் *வால்மீகி நகர் *பெசன்ட் அவென்யூ ரோட் *ECR சாலை *கரிகாட்டுக் குப்பம் *சென்னை கிறிஸ்தவ கல்லூரி (ஒரு அறை) *புளூகிராஸ் ரோட் *திருவண்ணாமலை ஹாண்டட் ஹவுஸ். உங்கள் ஊரில் இப்படிப்பட்ட இடங்கள் இருக்கா?
மாநில சுயாட்சி விவகாரத்தில் முன்னாள் CM கருணாநிதி முதல்முறையாக உயர்மட்ட குழுவை அமைத்தார். 1969-ல் நீதிபதி ராஜமன்னார் ஆணையத்தை அமைத்தார். அதைத் தொடர்ந்து 1984-ல் MGR நீதிபதி சர்க்காரியா ஆணையம் அமைத்தார். அதையடுத்து 2002-ல் ஜெயலலிதா நீதிபதி வெங்கடாசாலையா ஆணையத்தையும், 2010-ல் கருணாநிதி, நீதிபதி பூஞ்சி ஆணையத்தையும் அமைத்தனர். தற்போது மு.க.ஸ்டாலின் நீதிபதி குரியன் ஜோசப் குழுவை அமைத்துள்ளார்.
‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்தின் மகனாக நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாக ‘பிரேமலு’ பட ஹீரோ நஸ்லேன் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நேரத்தில் ‘ஆலப்புழா ஜிம்கானா’ படத்தில் நடித்து வந்ததாகவும், அதன் காரணமாக GBU படத்தில் நடிக்க தேதி ஒதுக்க முடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும், தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ₹100 கோடியை தாண்டி வசூலித்துள்ளது.
EMMY விருது வென்ற பிரிட்டன் நடிகை ஜீன் மார்ஸ் (90) காலமானார். 1970களில் வெளியான அப்ஸ்டேர்ஸ், டவுன்ஸ்டேர்ஸ் சீரிஸ் மூலம் பிரபலமானவர் ஜீன்ஸ் மார்ஸ். லண்டனில் வசித்த அவர் ஞாபக மறதி நோயால் ஏற்பட்ட பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். ஈகிள் ஹேஸ் லேண்டட், ஹவுஸ் ஆப் எலியட் உள்ளிட்ட பல சீரிஸ்களில் நடித்துள்ள அவருக்கு, 1975இல் EMMY விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த உலகத்துல டைட்டானிக் கப்பலை தெரியாதவங்களே இருக்க முடியாது. உலகத்துலயே பெருசாவும், பாதுகாப்பானதாவும் கட்டப்பட்ட இந்த கப்பல், தன்னுடைய முதல் பயணத்துலயே கடல்ல மூழ்கிடுச்சி. அதோட நினைவு தினம் தான் இன்று. 1912ஆம் ஆண்டு, ஏப்ரல் 14ஆம் தேதி இரவு இந்தக் கப்பல் பனிப்பாறை மேல மோதி, ஏப்ரல் 15ஆம் தேதி மொத்தமாக மறைந்தது. இதில், 1,500க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமா இறந்து போனாங்க.
குஷ்பு X-ல் பகிர்ந்துள்ள புகைப்படத்தை பார்த்த பலர் இது உண்மைதானா இல்லை AI வேலையா என எண்ணும் அளவுக்கு உள்ளது. எடை குறைந்து மாடர்ன் டிரெஸில் குஷ்புவை பார்க்கும் போது இளம் நடிகை போல் காட்சியளிக்கிறார். முதல் படத்தில் பார்த்த அ அதே லுக்குடன் 54 வயதிலும் இருக்கிறார் என்றால் என்ன சொல்வது. இதனிடையே அவரை கிண்டல் செய்து பதிவிட்டவர்களுக்கு குஷ்பு தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.
கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு மீண்டும் ஒரு தொடர் விடுமுறை கிடைக்கப் போகிறது. ஆம், வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.18) ‘GOOD FRIDAY’-வை முன்னிட்டு அரசு விடுமுறை வருகிறது. அடுத்த நாள் சனிக்கிழமை. ஆகவே, இந்த வார இறுதியிலும் 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. கோடை விடுமுறையும் தொடங்கப் போவதால், இப்போதே உங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
மகாராஷ்டிராவில் பிறந்ததில் இருந்தே மலம் கழிக்க முடியாத 2 வயது சிறுவனுக்கு, அரிய சர்ஜரி செய்து டாக்டர்கள் குணமாக்கியுள்ளனர். Hirschsprung நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் உடல்நிலை மோசமாகவே, Per-rectal Endoscopic Myotomy (PREM) எனும் சர்ஜரியை டாக்டர்கள் செய்துள்ளனர். இது மலக்குடல் வழியாக கேமரா, கருவிகளை உட்செலுத்தி செய்யப்படுவதாகும். உலகளவில் 13 முறை மட்டுமே இந்த சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.
ஹிமாச்சலில் உள்ள டிரான்ஸ்கிரி பிராந்தியத்தில் வசிக்கும் ‘ஹட்டி’ என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் ஒரு விசித்திரமான வழக்கம் உள்ளது. அதாவது, அச்சமூகத்தை சேர்ந்த ஆணுக்கு திருமணம் முடிந்ததுமே அவனது சகோதரர்கள் எத்தனை பேர் இருந்தாலும், அவர்களுக்கும் அப்பெண் மனைவியாகி விட வேண்டுமாம். வறுமையும், சொத்து பிரிந்துவிடக் கூடாது போன்ற காரணங்களுக்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த காலத்திலுமா இப்படி?
Sorry, no posts matched your criteria.