India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்டமுன்வடிவை இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஊராட்சிகள் அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் இடம்பெறுவது உறுதி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் மிக்க அவைகளில் இடம்பெறுவார்கள்.
சிம் கார்டுகளை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே டெலிவரி செய்வதற்காக, டெலிவரி பார்ட்னராக பிளிங்கிட்டை ஏர்டெல் ஒப்பந்தம் செய்துள்ளது. சிம் டெலிவரி சேவை, சென்னை, ஐதராபாத், புனே, மும்பை உள்ளிட்ட 16 முக்கிய நகரங்களில் கிடைக்கும். சிம் கார்டு டெலிவரி செய்யப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட செயல்முறையின்படி, ஆதார் அடிப்படையிலான KYC அங்கீகாரத்தைப் பயன்படுத்தி எண்ணை செயல்படுத்தலாம்.
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, ராமநாதபுரம், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. இருப்பினும், காலை 10 மணிக்கு மேல் வெயிலும் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
> அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது (1862)
> ஜாலியன் வாலா பாக் படுகொலையை கண்டித்து காந்தி ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார் (1919)
> கியூபாவை ஒரு பொதுவுடைமை நாடு என்று பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார் (1961)
> முதலாவது உலக தமிழ் மாநாடு மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது (1966)
ரோகித் சர்மாவை கவுரவிக்க மும்பை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. ஆம்! வான்கடே மைதானத்தில் ஒரு கேலரி-க்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் பெயரை வைக்க, மும்பை கிரிக்கெட் சங்க ஆண்டு பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் முன்னாள் BCCI தலைவர் சரத் பவார் மற்றும் பேட்டிங் ஜாம்பவான் அஜித் வடேகர் ஆகியோரின் நினைவாக மேலும் இரண்டு கேலரிகளுக்கு பெயரிடப்படும் என்றும் MCA உறுதிப்படுத்தியுள்ளது.
▶எப்போதும் புன்னகையுடன் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்வோம், ஏனென்றால் புன்னகையே அன்பிற்கான தொடக்கம் ▶ தனிமையும், தேவையற்றவர் என்ற உணர்வுமே மிகவும் மோசமான வறுமையாகும் ▶ ஓர் எளிய புன்னகை செய்யக் கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் ஒருபோதும் அறிந்திருப்பதில்லை ▶ மற்றவர்களுக்காக வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல ▶உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியவில்லையென்றால், வெறும் ஒருவருக்காவது உணவளியுங்கள்
தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு உள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்ச வெப்பநிலையாக 36 – 37 டிகிரி செல்சியஸ் இருக்கும். அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசௌகரியம் ஏற்படலாம். எனவே, மக்கள் அதிக அளவு தண்ணீர், மோர் போன்றவற்றை குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது சேவை வசதிகளை மேம்படுத்த பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஸ்டேட்டஸ் நேர அளவை உயர்த்தியுள்ளது. அதன்படி, இனி 90 விநாடி வீடியோக்களை ஸ்டேட்டஸாக வைக்கலாம். தற்போது வரை 30 விநாடி வீடியோக்களை மட்டுமே ஸ்டேட்டஸாக வைக்க முடியும். தற்போது இந்த புதிய வசதி BETA பயனர்களுக்கு கிடைக்கும் நிலையில், விரைவில் அனைத்து பயனர்களும் பயன்படுத்தலாம்.
மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கும் சஹால், ஆர்ஜே மஹ்வாஷுடன் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், KKRக்கு எதிரான போட்டியில் சஹால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதுகுறித்து மஹ்வாஷ் தனது இஸ்டாவில், இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோவை பதிவிட்டு, என்ன ஒரு திறமை!, IPL-லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதாக சஹாலை பாராட்டியதுதான் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை. ▶குறள் எண்: 308 ▶குறள்: இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. ▶பொருள்: தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.
Sorry, no posts matched your criteria.