India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குளித்தலை தொகுதி EX MLA <<16112905>>கந்தசாமி<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அண்ணா தலைமையில் திமுக முதல்முதலில் ஆட்சியைப் பிடித்து அரசியல் களத்தில் பெரும் மாற்றத்துக்கு வித்திட்ட 1967 தேர்தலிலும், கருணாநிதி தலைமையில் 1971 தேர்தலிலும் குளித்தலையில் வென்றவர் கந்தசாமி எனக் கூறியுள்ளார். அவரின் குடும்பத்தினர், கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ரேஷன் கடைகளில் ஒரே நாளில் அனைத்து பொருள்களும் கிடைக்கும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ரேஷன் கடைகளுக்கு அரிசி, காேதுமை, பாமாயில், பருப்பு, சர்க்கரை தங்கு தடையின்றி அனுப்பப்பட்டு வருவதாக கூறியுள்ளார். மாதத்தின் முதல்நாளில் இருந்து எந்த நாளில் வேண்டுமானாலும் அனைத்து பொருள்களையும் வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்து இன்று போராட்டம் நடக்கிறது. நாடு முழுவதும் உள்ள ED மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக நடக்கும் இந்தப் போராட்டத்தில், அந்தந்த மாநில MLA-க்கள், MP-க்கள், மூத்தத் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் பங்கேற்கின்றனர். பாஜகவின் பழிவாங்கும் அரசியல் எல்லை மீறுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
ரத்தக் கொதிப்பு (BP) அதிகமானால் நாம் என்ன செய்வோமென்றே தெரியாது. மாத்திரை இல்லாமலே ஆரோக்கியமான உணவுகள் மூலம் அதனை கட்டுப்படுத்தலாம். தக்காளி, கீரைகள், வெள்ளைப் பூசணி, ஓட்ஸ் உள்ளிட்டவை BP-ஐ கட்டுப்படுத்தும். பூண்டு BP-ஐ கட்டுப்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. நார்ச்சத்து, வைட்டமின் சி நிறைந்த பேரிக்காய், ரத்தக் கொதிப்பை சமநிலையில் வைக்கிறது. SHARE IT.
<<16113099>>10-ம் வகுப்பு<<>> மாணவர்களுக்கு நேற்றுடன் பொதுத் தேர்வு முடிவடைந்து, இன்று முதல் (ஏப்.16) விடுமுறை தொடங்கியுள்ளது. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும். அதன்படி பார்த்தால் இந்த மாதம் 15 நாள்கள், மே மாதம் 31 நாட்கள் என சேர்த்து மொத்தம் 46 நாள்கள் வருகிறது. ஜூன் மாதம் 2 அல்லது 3-ம் தேதி திறக்கப்பட்டால் 48 அல்லது 49 நாள்கள் விடுமுறை. என்ன மாணவர்களே ஜாலிதானே?
தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை நாளை கூடுகிறது. சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், அமைச்சரவைக் கூடுவது முக்கியத்துவம் பெறுகிறது. கூட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுத்து, அதுதொடர்பாக சட்டப்பேரவையில் அரசு அறிவிப்பு வெளியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லி-NCR பகுதிகளில், இன்று காலையே வலுவான நடுக்கங்கள் உணரப்பட்டன. தேசிய நில அதிர்வு மையம் (NCS) படி, ரிக்டர் அளவில் 5.9 ஆக உணரப்பட்ட இந்த பூகம்பத்தின் மையப்பகுதி ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பிராந்தியமாகும். தற்போது வரை பெரிதாக சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளிவரவில்லை. தொடர்ந்து ஆசிய கண்டத்தின் நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வர்த்தகப் போரை தொடங்கியிருக்கும் சூழலில், இந்தியாவுடன் நெருக்கம் காட்ட சீனா முயன்று வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் கலை, கலாசாரத்தை இந்திய மக்கள் அறிந்து கொள்வதற்காக விசா நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளது. கடந்த 4 மாதங்களில் 85,000 இந்தியர்களுக்கு விசா வழங்கியுள்ளது. சீனாவின் இந்த திடீர் நெருக்கம் பல சந்தேகங்களை எழுப்புகிறது.
வக்ஃப் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது. AIMIM MP அசாதுதீன் ஒவைசி, AAP தலைவர் அமானத்துல்லா கான், RJD தலைவர் மனோஜ் குமார் ஜா உள்பட 10 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. திமுக, தவெக, YSR காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் முறையிட்டுள்ளன.
பத்ரி, சமுத்திரம் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சிம்ரனின் சகோதரி மோனல். 2002 ஏப்ரல் 14-ம் தேதி திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டார். அப்போது மோனல் எழுதி வைத்த தற்கொலை கடிதத்தில், உண்மையான ஆண்மகனை தாம் பார்க்கவில்லை எனக் கூறியிருந்தார். யாரோ காதலித்து அவரை ஏமாற்றிவிட்டதாக அப்போது கூறப்பட்டது. ஆனால் 23 ஆண்டுகளாகியும் மோனலை ஏமாற்றியது யாரென தெரியவில்லை. மர்மம் நீடிக்கிறது.
Sorry, no posts matched your criteria.