India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தவெக-அதிமுக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டதாக EPS சொன்னது பற்றி தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், கூட்டணி தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பு நாங்கள் என்ன நிலைப்பாட்டில் இருந்தோமோ அதே நிலைப்பாட்டில்தான் தற்போதும் இருக்கிறோம் என் கூறியிருக்கிறார். இதன்மூலம், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை தவெக தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

22 கேரட் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ₹3,000 குறைந்து சற்று நிம்மதி அளித்த நிலையில், இன்று ₹2,000 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. காலையில் ₹1,080 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ₹920 அதிகரித்துள்ளது. தற்போது, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ₹11,325-க்கும், 1 சவரன் ₹90,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பட்டா நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்வதை எளிமையாக்க அரசு புதிய இணையவழி விண்ணப்ப வசதியை அறிமுகம் செய்துள்ளது. https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2 ஆண்டுகளுக்கு முன் CM ஸ்டாலின் தொடங்கிவைத்த இந்த வசதி, தற்போது மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நில அளவைக்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்திக் கொள்ளலாம். SHARE IT

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இதில், நார்ச்சத்து, வைட்டமின் A உள்ளிட்டவை நிறைந்துள்ளன. சக்கரவள்ளிக் கிழங்கை, வேவவைத்து அல்லது அவித்து சாப்பிடுவது சிறந்தது. இதனால், உடலுக்கு என்னென்ன ஆரோக்கியம் ஏற்படும் என்று, மேலே பகிர்ந்துள்ள போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு கிழங்கு பிடிக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க.

நெல் கொள்முதலின் அடிப்படையே தெரியாமல் EPS பொய் சொல்லிக்கொண்டு இருப்பதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பொய்யும், துரோகமும்தான் EPS-ன் History எனவும் CM சாடியுள்ளார். DMK ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன்(MT) நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், ஆனால் ADMK ஆட்சியில் சராசரியாக 22.70 லட்சம் MT மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

நீதிமன்ற அனுமதி கிடைத்ததும் விஜய்யின் பிரசாரம் தொடங்கும் என தவெகவின் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் அடுத்தகட்ட பிரசாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் ஒருமாதமாக வீட்டிலேயே முடங்கியிருந்த விஜய், விரைவில் மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 பொங்கல் சிறப்புத் தொகுப்புடன், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹5,000 வழங்க TN அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ₹10,000 கோடி வரை செலவாகும் என்பதால், நிதி ஆதாரத்தை தயார் செய்யும் நடவடிக்கையில் நிதித்துறை இறங்கியுள்ளதாம். இதுகுறித்து, CM ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இதன்மூலம் பயனடைய உள்ளனர். SHARE IT

நகராட்சி நிர்வாக துறையில் <<18136226>>2,538 பேரிடம் பணம்<<>> வாங்கி கொண்டு பணி வழங்கியதாக கூறிய ED-ன் புகாரை அமைச்சர் KN நேரு மறுத்துள்ளார். அவரது விளக்கத்தில், *அரசுக்கு களங்கம் ஏற்படுத்த ED பொய் கூறுகிறது. *20.9.2024-ல் முறைப்படி அண்ணா பல்கலை., மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மூலம் முறையாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். *தேர்வர்கள் தரப்பில் யாரும் புகார் அளிக்கவில்லை.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான <<18140028>>முதல் டி20 போட்டி<<>> மழையினால் மீண்டும் தடைபட்டுள்ளது. சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, 9.4 ஓவர்களில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. ஏற்கெனவே மழையினால் ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கல்வி நிதிக்காக, NEP அடிப்படையிலான ‘PM SHRI’ திட்டத்தில் இணைய உள்ளதாக கேரளா அறிவித்தது. இது கேள்விகளை எழுப்பிய நிலையில், ஆளும் LDF-ல் உள்ள முக்கிய கட்சியான CPI-யே கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தையும், CPI-ஐ சேர்ந்த 4 அமைச்சர்கள் புறக்கணித்தனர். இந்நிலையில், ‘PM SHRI’-ஐ செயல்படுத்துவதற்கான வேலைகளை நிறுத்த சொல்லி CM பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sorry, no posts matched your criteria.