India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ₹760 உயர்ந்துள்ளது. நேற்று 1 கிராம் ₹8,720-க்கும், 1 சவரன் தங்கம் ₹69,760-க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் ₹95 உயர்ந்து, ₹8,815-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ₹760 அதிகரித்து, ₹70,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 1 கிராம் ₹35-ம், 1 சவரன் தங்கம் ₹280-ம் குறைந்திருந்தது. இந்நிலையில் இன்று அதிகரித்துள்ளது.
தமிழில் மட்டுமே இனி அரசாணை வெளியிட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும். கற்றாணைக் குறிப்புகள், துறை தலைமை அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் கருத்துரைகளும் தமிழிலேயே இருக்க வேண்டும். அதே போல், பொதுமக்களிடம் இருந்து வரும் கடிதங்களுக்கும் தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும் எனவும் அரசாணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
BSP மாநில தலைவர் ஆனந்தன் மீது பொற்காெடி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். BSP-யிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பாேது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை நடத்துவதாக கூறி கட்சிக்குள் வந்துவிட்டு, தன்னையே ஆனந்தன் நீக்கி விட்டதாக விமர்சித்தார். இதன் பின்னணி குறித்து தெரியவில்லை, கட்சியின் பாெதுக் குழுவை கூட்டி விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் என அவர் கூறினார்.
ஹரியானா, குருகிராமில் கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. 46 வயதான விமானப் பணிப்பெண் ஹோட்டல் நீச்சல் குளத்தில் மயங்கியுள்ளார். உடனே தனியார் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட, ICU-வில் அவரை வெண்டிலேட்டரில் வைத்துள்ளனர். வெளியே அவரது கணவர் பரிதவிக்க, உள்ளே வார்டு ஊழியர்கள் சிலர் அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளனர். டிஸ்சார்ஜ் ஆனதும் இந்த கொடூரத்தை அவர் கூற, போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்பி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி புதிய கட்சியை தொடங்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு பிஎஸ்பி மாநிலத் தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார். அவருடன் நிலவிய கருத்து வேறுபாடால் கட்சியிலிருந்து பொற்கொடி நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஆம்ஸ்ட்ராங் மக்கள் கட்சி என்ற பெயரில் புது கட்சி தொடங்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.
சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஸ்தார் பிராந்தியத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் மாவோயிஸ்ட் கமாண்டர் உள்ளிட்ட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேர் குறித்து தகவல் தெரிவித்தால், ரூ.13 லட்சம் வெகுமதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
1) CM ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை துணை வேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம் 2) நீலகிரி மாவட்ட காங். தலைவர் ராஜ்குமார் சடலமாக மீட்பு 3) நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங். போராட்டம் 4) ஆப்கானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டதால் மக்கள் பீதி 5) IPL: டெல்லி – ராஜஸ்தான் அணிகள் இன்றிரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை.
உடல் மொழி காமெடியால் உலகை ஆண்ட கலைஞர் சார்லி சாப்ளின். 1889-ல் லண்டனில் பிறந்த அவரது இயற்பெயர் சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின். அவரது நடிப்பில் வெளிவந்த முதல் படம் Making a Living. ‘தி சர்க்கஸ்’ படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் என 2 ஆஸ்கர் விருதுகளை அள்ளினார். 1975-ல் இங்கிலாந்து ராணி எலிசபெத் ‘சர்’ பட்டம் வழங்கி அவரை கவுரவித்தார். சார்லி சாப்ளின் என்றால் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?
ஹாலிவுட் நடிகர் நிக்கி காட்(54) இறப்பில் திடீர் திருப்பமாக, அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. மன அழுத்தம் காரணமாக நிக்கி காட் இந்த முடிவை எடுத்ததாக அவரது சகோதரி எலிஸ் தெரிவித்துள்ளார். ஏப். 13-ல் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட அவர், ஏப்.8 ஆம் தேதியே உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. BOILER ROOM, I LOVE YOUR WORK உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நிக்கி காட்.
நேற்று GBU படக்குழுவிடம் ₹5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் இளையராஜா. ரஜினி படத்துக்கே நோட்டீஸ் அனுப்பியவர், அஜித் படத்துக்கு கேட்க மாட்டாரா என்ன? X ட்ரெண்டிங் இதுதான். கன்டென்ட் கிடைக்காமல் இருந்த நெட்டிசன்கள், மீம்ஸை போட்டு வைரலாகி வருகின்றனர். ஒருவேள அவர், இனி நம்ம போன்’ல ரிங்டோன் வெக்குறதுக்கும் காசு கேட்பாரு போலயே! நீங்க பாத்த காமெடியான மீம்ஸ் எது?
Sorry, no posts matched your criteria.