India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஓட்டுக்காக PM மோடி எந்த நாடகத்தையும் நடத்துவார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பிஹார் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், வாக்குக்காக PM டான்ஸ் கூட ஆடுவார் எனவும், நிதிஷ்குமார் எனும் ரிமோட் கண்ட்ரோலை வைத்து பாஜக பிஹாரை ஆள்வதாகவும் சாடியுள்ளார். மேலும், 20 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் நிதிஷ்குமார் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புக்கு என்ன செய்தார் என்று சொல்ல முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாஸ்து சாஸ்திரங்களின் படி, வீட்டில் துரதிர்ஷ்டம் சேருவதை தவிர்க்க, சூரியன் மறைந்த பிறகு இந்த 5 விஷயங்களை பண்ணக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது ✱நகம் வெட்டக்கூடாது ✱துளசி செடிக்கு நீருற்ற கூடாது ✱பூக்கள், இலைகளை பறிக்கக்கூடாது ✱பால், தயிர், உப்பு ஆகியவற்றை தானம் கொடுக்க கூடாது ✱கண்ணாடியில் அளவுக்கு அதிகமாக முகம் பார்க்க கூடாது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

வரும் 5-ம் தேதி தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என விஜய் அறிவித்துள்ளார். கட்சியின் அடுத்தக்கட்ட நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, விவாதித்து முடிவெடுக்க பொதுக்குழுவை கூட்டுவதாக விஜய் தெரிவித்துள்ளார். கள நிலவரம் தவெகவுக்கு சாதகமாக இருப்பதால், அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும், தீர்க்கமாகவும் எடுக்க வேண்டி உள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாகவே காஃபி குடிப்பதை பலர் பழக்கமாக வைத்துள்ளனர். சிலருக்கு அது Addict. ஆனால் காஃபியை அளவோடு தான் குடிக்க வேண்டும். அதிலும் பெண்கள் சில நேரங்களில் தவிர்ப்பது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். *கர்ப்ப காலத்தில் குடிக்க கூடாது. *தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் காஃபியை தவிர்க்க வேண்டும் *மாதவிடாய் காலத்தில் குடித்தால் மன அழுத்தம் அதிகமாகும் *ரத்தசோகை உள்ளவர்கள் குடிக்க கூடாது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ₹888 கோடி லஞ்சம் பெற்று, 2,538 பணியிடங்களுக்கு நியமனங்கள் நடைபெற்றிருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதனால் விடாமுயற்சியுடன் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை அரசு தகர்த்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். முறைகேடாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு, CM ஸ்டாலின் தான் ஆணைகளை வழங்கியுள்ளதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. கான்பெர்ராவில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 5 ஓவர்களில் 43 ரன்கள் எடுத்த போது மழை பெய்தது. போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட, இந்தியா 9.4 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்திருந்தது. மீண்டும் மழை பெய்திட, வானிலையும் சாதகமாக இல்லாததால் போட்டியை தொடர முடியாது என நடுவர்கள் அறிவித்தனர்.

SIR நடவடிக்கை தொடர்பாக CM ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தவெகவின் CTR நிர்மல் குமார் கூறியிருந்தார். இந்நிலையில் திமுகவின் பூச்சி முருகன், பனையூருக்கு நேரடியாக சென்று N.ஆனந்தை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். வரும் நவ.2-ம் தேதி இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

நடிகை அனுஷ்காவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற படம் ‘அருந்ததி’. 2009-ல் வெளியான இந்த படம் தென்னிந்திய மொழிகளில் சக்கைப்போடு போட்டது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்து, இப்படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளிவந்துள்ளது. ரீமேக் படங்களின் கிங்கான மோகன் ராஜா இயக்கத்தில் இந்த படத்தில் ஸ்ரீலீலா அருந்ததியாக நடிக்கவுள்ளாராம். மிரட்டுவாரா ஸ்ரீலீலா?

தவெக-அதிமுக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டதாக EPS சொன்னது பற்றி தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், கூட்டணி தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பு நாங்கள் என்ன நிலைப்பாட்டில் இருந்தோமோ அதே நிலைப்பாட்டில்தான் தற்போதும் இருக்கிறோம் என் கூறியிருக்கிறார். இதன்மூலம், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை தவெக தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

22 கேரட் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ₹3,000 குறைந்து சற்று நிம்மதி அளித்த நிலையில், இன்று ₹2,000 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. காலையில் ₹1,080 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ₹920 அதிகரித்துள்ளது. தற்போது, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ₹11,325-க்கும், 1 சவரன் ₹90,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.