India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்குவதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் ஏப். 30 வரை அடையாள எண்ணை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் குறைந்த அளவிலான விவசாயிகளே அடையாள எண்ணை பெற்றுக் கொண்டுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த எண்ணை பெறாத விவசாயிகள் மத்திய அரசின் சலுகைகளை இழக்க நேரிடும். SHARE IT.
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் போலீசில் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை மிரட்டல் விடுத்த வதோதராவைச் சேர்ந்த மயங்க் பாண்டியாவை போலீஸ் கைது செய்தது. அவரிடம் விசாரித்தபோது, இன்ஸ்டகிராமில் ஃபாலோயர்ஸை அதிகரிக்க இப்படி செய்ததாக கூறி இருக்கிறார். மனநோயால் பாதிக்கப்பட்ட அவர் 2014 முதல் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாவதற்கு முன்பே, அமித் ஷா தனது X பக்கத்தில் NDA கூட்டணி அமையும் என கூறியிருந்தார். கடந்த ஏப்.11 ஆம் தேதி சென்னை வந்தபோது அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என தெரிவித்திருந்தார். அப்போது எந்த ரியாக்ஷனும் தராத இபிஎஸ், இப்போது கூட்டணி மட்டுமே, ஆட்சியில் பங்கு இல்லை என தெளிவுப்படுத்தியுள்ளார்.
சென்னையில் அண்மையில் பேசிய அமித் ஷா, தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சியமைக்கும் எனக் கூறியிருந்தார். இதன்மூலம் அதிமுக அமைச்சரவையில் பாஜகவும் இடம்பெறும் என கூறியிருந்தார். இதனால் அதிமுகவினர் அதிருப்தியில் இருந்த நிலையில் இன்று பேசிய இபிஎஸ், அதிமுக அரசில் பாஜகவுக்கு இடமில்லை எனக் கூறினார். இது பாஜக, அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
1 சவரன் தங்கம் 4 மாதங்களில் ₹13,320 அதிகரித்துள்ளது. ஜன.1-ல் 1 கிராம் ₹7,150ஆகவும், 1 சவரன் ₹57,200ஆகவும் விற்கப்பட்டது. பிப். 1-ல் 1 கிராம் ₹7790, 1 சவரன் ₹62,320-ஆக விற்கப்பட்டது. மார்ச் 1-ல் 1 கிராம் ₹7,940, 1 சவரன் ₹63,520ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 கிராம் ₹8,815, 1 சவரன் ₹70,520ஆக அதிகரித்துள்ளது. படிப்படியாக விலை அதிகரித்து தங்கம் புதிய உச்சம் தொட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழைக்கும், ஈரோடு, சேலம், தர்மபுரி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் பேரவையில் அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். ஆனால், அதன் மீது விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதன் காரணமாகவே பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம் என இபிஎஸ் தெரிவித்தார். இதற்கு முந்தைய காலங்களில், அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அனுமதியளிக்கப்பட்டதாகவும், தற்போது ஏன் மறுக்கிறார்கள் என தெரியவில்லை என கூறினார்.
பிரபல மலையாள நடிகை வின்சி அலோசியஸ், மலையாள முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடமும், மற்றொரு நடிகையிடமும் அத்துமீறி நடந்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். படத்தில் இருந்து விலக நினைத்த போது, டைரக்டரும், தயாரிப்பாளரும் மன்னிப்பு கேட்டதால், வேறு வழியின்றி அப்படத்தில் நடித்ததாக தெரிவித்தார். வின்சி அலோஷியஸ் ஜன கண மன, சவுதி வெள்ளக்கா போன்ற படங்களில் நடித்துள்ளார். அந்த நடிகர் யாராக இருக்கும்?
சட்டப்பேரவையில் இருந்து இபிஎஸ் தலைமையிலான அதிமுக MLA-க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். கே,என்.நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகிய 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், சபாநாயகர் அப்பாவு அதனை நிராகரித்தார். இதைத் தொடர்ந்து, பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‘OG’ படத்தில் சிம்பு Firestorm என்ற பாடலை பாடியுள்ளார். இது குறித்து இசையமைப்பாளர் தமன், ‘Mass Rampage coming soon’ என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, தமன் இசையில் விஜய்க்காக சிம்பு பாடிய ‘தீ தளபதி’ பெரிய ஹிட்டான நிலையில், அது போன்ற ஒரு வெறித்தனமான பாடலாக இதுவும் இருக்குமா?
Sorry, no posts matched your criteria.