India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நேதாஜியின் நெருங்கிய நண்பரான நாகலாந்தை சேர்ந்த Poswuyi Swuro (106) நேற்று காலமானார். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் நாகலாந்து நோக்கி முன்னேறியபோது வழிகாட்டியாகவும், நேதாஜியின் மொழி பெயர்ப்பாளராகவும் Poswuyi Swuro செயல்பட்டார். நேதாஜியுடன் தொடர்பு கொண்டவர்களில் இவர் மட்டுமே உயிருடன் இருந்தார். நாகாலாந்தில் கிராம பஞ்சாயத்து தலைவராகவும், கிறிஸ்தவ தேவாலய பாஸ்டராகவும் இருந்துள்ளார். RIP.
இந்தியாவின் முதல் ரயில் சேவை தொடங்கியது எப்போது தெரியுமா? 1853, ஏப்ரல் 16-ம் தேதி தான். 21 குண்டுகள் முழங்க, 3 இன்ஜின்கள், 14 பெட்டிகளுடன் தொடங்கியது. போரி பந்தர்-தானே வரை 34 கி.மீ தூரத்தை 1.15 மணி நேரத்தில் கடந்த ரயிலில் 400 பேர் பயணித்தனர். ரயில்வேயின் 172வது ஆண்டையொட்டி மலரும் நினைவுகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார். அந்த போரி பந்தர் தான் மும்பை CST ரயில் நிலையம்.
சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் சாமிநாதன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை ரூ.4,500-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்கள், எல்லை காவலர்களுக்கும் உதவித் தொகை ரூ.7,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.
WhatsApp ஹேக் செய்யப்பட்டால், முதலில் WhatsApp-ஐ Uninstall செய்யவும் *Android போனில் இருந்து சிம் கார்டை எடுத்து, கீபோர்டு போனில் சொருகவும் *Wifi மூலமாக போனில் மீண்டும் WhatsApp-ஐ Install செய்யவும் *Verification Code-ஐ பெற ஒப்புதல் அளிக்கவும் *கீபோர்டு போனில் வரும் Code-ஐ WhatsApp-ல் இட்டு, Verify செய்யவும் * பிறகு, போனை Restart செய்யும் போது, அக்கவுண்ட் Recover-ஆகி விடும். SHARE IT.
பாஜக இளைஞரணியின் தேசியத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பாஜக இளைஞரணியின் (BYJM) தேசியத் தலைவராக அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. தற்போது அந்த பொறுப்பு கர்நாடக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவிடம் உள்ளது.
சீனாவுக்கு பதிலடி தர 245% அளவுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. தனது நாட்டின் பொருட்கள் மீது இறக்குமதி வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி மிக அதிகமாக சீனாவுக்கு 145% அளவுக்கு இறக்குமதி வரி விதித்திருந்தார். சீனாவும் பதிலடியாக வரி விதித்தது. ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா வரியை 245% உயர்த்த முடிவெடுத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையால் கூட்டம் அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் VIP பிரேக் தரிசன டிக்கெட் (₹500 டிக்கெட்) வழங்கும் நடைமுறையை தேவஸ்தானம் இன்று முதல் பாதியாக நிறுத்தி வைத்துள்ளது. VIP பிரேக் தரிசனத்திற்கான நேரம் குறைக்கப்பட்டு, அதில் சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
தூய்மை பணியாளர்கள் உடையணிந்து யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல், கழிவுநீரை கொட்டிய வீடியோ சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது 15 நாளில் விசாரணை சரியில்லை என கூறி சிபிஐக்கு மாற்ற முடியாது என மனுவை தள்ளுபடி செய்தது.
மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீ, அண்மையில் சமூகவலைதளங்களில் பகிர்ந்த படங்களிலும், வீடியோவிலும் உடல் மெலிந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டார். திரையுலகில் இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை காண்பதற்கு நண்பர்கள் சென்றபோது காணவில்லை. மனநலம் பாதிக்கப்பட்டு எங்கும் சென்று விட்டாரா? எனத் தெரியவில்லை. இதையடுத்து அவரை நண்பர்கள் தேடுகின்றனர்.
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதேபோல், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. நாளை முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் IMD கணித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.