India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

UNESCO-வின் தற்காலிக பட்டியலில், இந்தியாவில் இருந்து 7 புதிய தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம், தற்காலிக பட்டியலில் இந்தியாவில் இருந்து மொத்தம் 69 தளங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த 7 தளங்கள், அடுத்த 5-10 ஆண்டுகளில், உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்படலாம். அவை எந்தெந்த தளங்கள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்தது எது?

குழந்தைகளுக்கு போடும் தடுப்பூசிகள் ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்துவதாக X-ல் ஒரு ஆய்வறிக்கை வெளியானது. அதை சுட்டிக்காட்டி, இந்திய பெற்றோர்கள் உஷாராக இருக்க வேண்டும் என ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டிருந்தார். அதில் கமெண்ட் செய்த டாக்டர் சிரியாக், இதுபோன்ற பூமர் அங்கிள் சொல்வதை பெற்றோர்கள் கேட்க வேண்டாம், அந்த ஆய்வறிக்கை தடுப்பூசிக்கு எதிரானவர்களால் பணம் கொடுத்து பரப்பபடுவது என்றும் விமர்சித்துள்ளார்.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும், சர்ஃபராஸ்கான் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என சசிதரூர் சாடியுள்ளார். ரஞ்சி டிராபியில் ரஹானே, பிரித்வி ஷா, கருண் நாயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். மேலும், IPL மட்டுமல்லாமல், அனைத்து உள்ளூர் போட்டிகளையும் மதிப்பீடு செய்து வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஓராண்டில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் 1% வரை குறைந்ததால், கடன் வட்டி விகிதங்களை வங்கிகள் குறைத்து வருகின்றன. குறிப்பாக, அக்டோபரில் பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, IDBI வங்கி உள்ளிட்டவை கடனுக்கான MCLR விகிதங்களை 0.05% வரை குறைத்துள்ளன. அதனால், அந்த வங்கிகளில் வீடு, வாகன கடன் பெற்றவர்களின் EMI நவம்பர் முதல் குறைகிறது. இது சிறிய தொகை என்றாலும், நீண்ட கால கடன் பெற்றவர்களுக்கு பலனாக அமையும்.

நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறையில் ₹888 கோடி மோசடி நடந்துள்ளது திமுக ஆட்சியில் ஊழல் வேரூன்றி இருப்பதை காட்டுவதாக நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். கடந்த 4.5 ஆண்டுகளில் எத்தனை மோசடிகள் நடந்திருக்குமோ என கேள்வி எழுப்பிய அவர், இளைஞர்களின் எதிர்காலத்தை திமுக சூனியமாக்கி வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க CBI விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

நல்லா முடி வளரணும், முகம் பளபளன்னு இருக்கணும் என எண்ணி வீட்டிலேயே பல Home remedy-களை பண்றீங்களா? இதெல்லாம் எவ்வளோ பண்ணாலும், எந்த ரிசல்ட்டும் கிடைச்சிருக்காதே. நீங்கள் நம்பி தினமும் செய்யும் Home remedy-கள் உண்மையிலேயே பயனுள்ளதா இல்லையா என டாக்டர்கள் ரேட்டிங் கொடுத்துள்ளனர். அதனை தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்யுங்கள். விழிப்புணர்வுக்காக அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் தென் கொரிய நடிகர் டான் லீ நடிக்க உள்ளதாக கடந்த சில நாள்களாகவே தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், கொரிய ஊடகம் ஒன்றும் அதை உறுதி செய்துள்ளது. ‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக டான் லீ நடிப்பதாகவும், இதன் மூலம் அவர் இந்திய சினிமாவில் அறிமுகமாக உள்ளதாகவும் கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆவி பறக்கும் இட்லியை, சுடச்சுட எடுத்து வாயில் வைத்து மெல்லுவது ஒரு தனி சுகம். தென்னிந்திய பாரம்பரிய உணவுகளில், இட்லி முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக தமிழகத்தில். அரிசி–உளுந்து மூலம், இட்லி சுவை மற்றும் ஆரோக்கியத்தை தருகிறது. இட்லியில் பல வகைகள் உள்ளன. அவை என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு பிடித்த இட்லி எது? கமெண்ட்ல சொல்லுங்க.

இன்று டிரம்ப் தென்கொரியாவுக்கு உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்றுள்ளார். இந்நிலையில், அவர் செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக வடகொரியா, கடலில் இருந்து நிலத்திற்கு பாயும் ‘க்ரூஸ்’ ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்த சோதனை டிரம்பின் பேச்சுவார்த்தைக்கு விடுத்த மறைமுக மறுப்பாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

‘டியூட்’ படத்தை இயக்குநர் பேரரசு மறைமுகமாக விமர்சித்துள்ளார். எந்த படங்களை எடுத்தாலும், அதன் நோக்கம் நல்லதாக இருக்க வேண்டும் எனவும், கலாச்சார சீரழிவு படங்களை எடுப்பதை விட ஆபாச படங்களை எடுப்பது எவ்வளவோ மேல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கலாச்சார சீரழிவு படங்களை எடுத்து மக்களை கெடுக்க வேண்டாம் எனவும், பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்கிறது என்றும் பொங்கியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.