news

News April 16, 2025

யார் இந்த பி.ஆர்.கவாய்?

image

<<16117348>>சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக B.R.கவாய் பதவியேற்கவுள்ளார்<<>>. 1960ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் அமராவதி நகரில் பிறந்த இவர், பம்பாய் ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். பின்னர், 2019ஆம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இவரது குடும்பத்தினர் அம்பேத்கரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு புத்த மதத்திற்கு மாறியவர்கள்.

News April 16, 2025

கம்ப்யூட்டர் சயின்ஸில் இந்த கோர்ஸுக்கு தான் மவுசு ஜாஸ்தி!

image

AI, டேட்டா சயின்ஸ் துறை ஆண்டுக்கு 55% வளர்ச்சியடையும் சூழலில், B.tech Artificial Intelligence & Data Science படிப்புக்கே அதிக டிமாண்ட். 4 வருட கோர்ஸில், Artificial neural networks, Data analytics ஆகியவை கற்பிக்கப்படும். JEE தேர்வுகளின் மூலம் இந்த கோர்ஸில் சேரலாம். பிரஷருக்கு குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ₹4 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்புவோர், இதுதான் பெஸ்ட்.

News April 16, 2025

ஜூன் 3-ல் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்

image

மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஜூன் 3-ல் விரிவுபடுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம், 3 மாதங்களில் விரிவுபடுத்தப்படும் என உதயநிதி தெரிவித்திருந்தார். அதன்படி, ஜூன் 3-ம் தேதி கலைஞர் பிறந்த தினத்தில் விரிவுபடுத்தப்படும், ஜூலையில் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தாெகை அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

News April 16, 2025

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி கவாய்

image

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை (B.R.Gavay) நியமிக்க, மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்துள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம் மே 13ஆம் தேதியோடு நிறைவடைகிறது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின், சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்கவுள்ளார்.

News April 16, 2025

திருப்பதிக்கு போகும் பக்தர்களே.. கவனிச்சிக்கோங்க!

image

ஜூலை மாதத்தின் ₹300-க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் புக்கிங், ஏப்ரல் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும் என தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. மேலும், அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ஏப்ரல் 23 அன்று காலை 10 மணிக்கு கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், முதியவர்கள் – ஊனமுற்றோருக்கான டிக்கெட்டுகள் ஏப்ரல் 23 ஆம் தேதி, மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2025

வசூலை சோஷியல் மீடியா முடிவு செய்யாது: பூஜா

image

சோஷியல் மீடியாவுக்கும் ரியாலிட்டிக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது என மிக அழகாக கருத்து தெரிவித்திருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. இன்ஸ்டாவில் தன்னை ஃபாலோ செய்யும் 3 கோடி பேரும் தியேட்டர்களுக்கு வருவதில்லை என கூறிய பூஜா, வசூலை வாரி குவிக்கும் பல சூப்பர்ஸ்டார்களுக்கு 50 லட்சம் பேர் கூட ஃபாலோயர்ஸ் இல்லை என உதாரணத்துடன் சொல்லியிருக்கிறார். பூஜா சொல்வது உண்மை தானே? கமெண்ட் செய்யுங்கள்!

News April 16, 2025

தொடர் விடுமுறை: 2,322 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

வரும் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என்பதால், விடுமுறை. அதேபாேல், சனி, ஞாயிறும் விடுமுறை வருகிறது. இந்த 3 நாள்கள் தொடர் விடுமுறைக்கு மக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால் 2,322 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 575 பஸ்கள், வெள்ளி, சனிக்கிழமையில் தலா 450 பஸ்கள் இயக்கப்படும் என கூறியுள்ளது.

News April 16, 2025

சாதிப் பெயர்களை நீக்குக: ஐகோர்ட் அதிரடி

image

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதே போல் பள்ளிப் பெயர்களில் நன்கொடையாளர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும், சாதி இருக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. அரசு நடத்தும் சீர்திருத்தப் பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி போன்ற பெயர்களை மாற்றி அரசுப் பள்ளி என பெயர் சூட்டவும் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

News April 16, 2025

ஒரே நைட்டில் ஓஹோன்னு வாழ்க்கை!

image

சிலி நாட்டில், Hinojosa(62) என்பவர் வீட்டை சுத்தம் செய்தபோது, ஒரு சீட்டு கிடைத்துள்ளது. அது அவரின் தந்தை 1960களில் வங்கியில் டெபாசிட் செய்த ₹1.4 லட்சத்தின் பாஸ்புக். வங்கி மூடப்பட்டாலும், ‘State Guarantee’ என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, வங்கி திவாலானாலும் பணத்திற்கு அரசு பொறுப்பு. முதலில், அதிகாரிகள் மறுக்க, கோர்ட் வரை சென்று ₹10.27 கோடியை வாங்கி விட்டார் Hinojosa. என்ன ஒரு லக்!

News April 16, 2025

நாதகவிலிருந்து சாட்டை துரைமுருகன் விலகல்?

image

நாதக கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருப்பவர் சாட்டை துரைமுருகன். அவரின் யூடியூப் சேனலில் தொடர்ந்து வெளியிட்ட பல்வேறு பதிவுகளும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. இந்நிலையில், தனது சமூகவலைதள பக்கத்தில் நாதக கொள்கை பரப்பு செயலாளர் என்று இருந்ததை கண்டென்ட் கிரியேட்டர் என சாட்டை துரைமுருகன் திடீரென மாறியுள்ளார். இதனால் அவர் நாதகவிலிருந்து விலகிவிட்டதாக தகவல் பரவி வருகிறது.

error: Content is protected !!