India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2025 – 2026 கல்வியாண்டுக்கான CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் 17.02.2026 அன்று பொதுத்தேர்வானது தொடங்க உள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் இந்திய முப்படைகள் ‘திரிசூல்’ பயிற்சியை தொடங்கியுள்ளன. குஜராத் – ராஜஸ்தான் இடையே, குறிப்பாக ரான் ஆஃப் கட்ச் பகுதியில் 12 நாள்கள் தொடர்ந்து இப்பயிற்சி நடைபெற உள்ளது. குஜராத்தில் உள்ள சர்ச்சைக்குரிய சர் கிரீக் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கும் நிலையில், இந்திய ராணுவம் பயிற்சியை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்லீப்பர் (அ) AC பெட்டிகள் முன்பதிவு செய்யப்பட்டது என்பதால் அதில் அதிக கூட்டம் இருக்காது. ஆனால் General Compartment அப்படி இல்லை. அதிக கூட்டம் இருக்கும். இப்படி அதிக கூட்டம் இருக்கும் பெட்டிகள் நடுவில் இருந்தால், சமநிலையற்ற எடையால் ரயில் வேகமாக செல்லும்போது அசம்பாவிதம் நிகழலாம். அதனால்தான் General Compartment-கள் முதலிலும், கடைசியிலும் வைக்கப்பட்டுள்ளது. இது 1% பேருக்கு மட்டுமே தெரியும், SHARE.

கட்சியிலிருந்து தன்னை நீக்கினால் மகிழ்ச்சி என செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு அறிவிப்பேன் எனவும் கூறியுள்ளார். முன்னதாக, பசும்பொன்னில் OPS, சசிகலா, டிடிவி தினகரனை செங்கோட்டையன் சந்தித்து பேசியிருந்தார். இது தொடர்பாக <<18149318>>பேசிய EPS<<>>, செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்க எவ்வித தயக்கமும் இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாக்குகளை பெற PM மோடி டான்ஸ் கூட ஆடுவார் என <<18139805>>ராகுல்<<>> பேசியதற்கு அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். பிஹார் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், வரலாற்றை திரும்பிப் பார்த்தால், PM மோடியை அவமதிக்கும் போதெல்லாம், காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டது தெரியவரும் என்று தெரிவித்துள்ளார். மேலும், PM மோடி மற்றும் அவரது தாயாரை காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து அவமதித்து வருவதாகவும் சாடியுள்ளார்.

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா நாளை(அக்.31) தொடங்குகிறது. தஞ்சை பெரியகோயில் வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் 2 நாள்கள் அரசு சார்பில் இவ்விழா நடைபெறவுள்ளது. ராஜராஜ சோழனின் சதய விழாவையொட்டி நாளை மறுதினம்(நவ.1) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்களுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி ODI பேட்டிங் தரவரிசையில் 5 இந்திய வீரர்கள் மட்டுமே இதுவரை No.1 இடத்தை அலங்கரித்துள்ளனர். இப்பட்டியலில் லிட்டில் மாஸ்டரான சச்சின் டெண்டுல்கரை விட, இரண்டு வீரர்கள் அதிக புள்ளிகள் எடுத்து NO.1 இடத்தில் இருந்திருக்கின்றனர். யார் அவர்கள் என்பதை அறிய, புகைப்படங்களை SWIPE செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

RRB-யில் காலியாக உள்ள 2,570 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18- 33 வயதுக்குட்பட்ட Diploma, B.E, B.Tech படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். வரும் நவம்பர் 30-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் அப்ளை பண்ண <

இந்திரா காந்தி என்ற பெண், மோடி என்ற ஆணை காட்டிலும் தைரியமானவர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 1971 போரின் போது இந்தியாவை மிரட்ட USA கப்பல்படையை அனுப்பியதாகவும், ஆனால் அப்போதைய PM இந்திரா காந்தி, அதற்கு அச்சப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், PM மோடிக்கு உண்மையில் தைரியம் இருந்தால், போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் சொல்வது பொய் என கூறட்டும் என்றும் சவால் விட்டுள்ளார்.

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியா வீராங்கனை லிட்ச்ஃபீல்ட் அதிரடி சதம் விளாசியுள்ளார். இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்ட அவர் 77 பந்துகளில் சதம் அடித்தார். இப்போட்டியில் லிட்ச்ஃபீல்ட் இதுவரை 18 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்துள்ளார். உலகக் கோப்பையில் இது அவருக்கு முதல் சதமாகும். அவருடைய விக்கெட்டை வீழ்த்தினால் மட்டுமே ரன் வேகத்தை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியும்.
Sorry, no posts matched your criteria.