India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்கப் பள்ளிகள் அனைத்திற்கும் நாளையோடு (ஏப்ரல் 17) தேர்வுகள் நிறைவடைகின்றன. அடுத்த வாரம் இறுதி வரை திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகளை, கோடை வெயிலின் தாக்கத்தினால் ஏப்ரல் 17-ம் தேதியோடு நிறைவு செய்ய அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, நாளை முதல் 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை தொடங்குகிறது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஐபிஎல் அணிகளின் ஓனர்கள், வீரர்களை மோசடி வலையில் வீழ்த்த முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விலை உயர்ந்த பரிசுகளை வழங்கி ஃபிக்ஸிங் உள்ளிட்ட மோசடி செயல்களை செய்யத் தூண்டுவதாகவும், இதனால் விழிப்புணர்வுடன் செயல்படவும் அணிகளுக்கு BCCI அறிவுறுத்தியுள்ளது. மேலும், சந்தேகத்திற்குரிய நபர்கள் யாராவது தொடர்பு கொண்டால் உடனே தெரிவிக்கவும் கூறியுள்ளது.
டாஸ்மாக் ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்கினால், அதன் சங்கிலி என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா என சென்னை ஐகோர்ட்டில் ED கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்கள் தலைமை அலுவலகத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளது. ஆனால், தற்போது டாஸ்மாக் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும், இனி ஒவ்வொரு துறையாக குறிவைக்கப்படும் எனவும் டாஸ்மாக் தரப்பு வாதாடிய நிலையில், விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெற்ற பிள்ளைகளுக்கு சிறு தீங்கு கூட வராமல் பார்த்துக் கொள்வது தாய்தான். ஆனால், புனேவில் 14 வயது சிறுமிக்கு தாயே வில்லியாக மாறி இருக்கிறார். 36 வயதான தாய், வேறொரு இளைஞருடன்(24) முறையற்ற உறவில் இருந்ததை மகள் கண்டுபிடித்து விட்டாள். இதனால், மகளை மிரட்ட அவள் குளிப்பது, உடை மாற்றுவதை வீடியோ எடுத்து தாயே வைரலாக்கியுள்ளார். சிறுமி அளித்த புகாரில் தாயும், அவரது காதலனும் கைதாகியுள்ளனர்.
தனது வேகம் மற்றும் துல்லியமான பந்து வீச்சால் கடந்த சீசனில் அசத்தியவர் மயங்க் யாதவ். இதனால் அவரை லக்னோ அணி ₹11 கோடிக்கு தக்க வைத்தது. ஆனால் காயம் காரணமாக அவர் லக்னோ அணியில் இதுவரை இணையாமல் இருந்தார். காயம் குணமடைந்ததால் தற்போது லக்னோ அணியுடன் மயங்க் இணைந்துள்ளது கூடுதல் பலம் சேர்க்கும். 19-ம் தேதி ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மயங்க் களமிறங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா என்ற கேள்விக்கு பதிலளிக்க பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுத்துவிட்டார். கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் அமித் ஷாதான் பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும் கூட்டணி ஆட்சி குறித்தும் அவரே முடிவெடுப்பார் எனவும் நயினார் நாகேந்திரன் பேசினார். மேலும், கூட்டணி ஆட்சி அல்ல என்று EPS பேசியது குறித்த கேள்விக்கு, அது தொடர்பாக கருத்து கூற இயலாது என்றார்.
வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட் <<16118424>>பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.<<>> வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்கள் தவிர வேறு யாரும் இடம்பெறக் கூடாது என்ற முக்கிய உத்தரவை பிறப்பித்த சில நிமிடங்களில் தலைமை நீதிபதி அமர்வு அதனை நிறுத்தி வைத்தது. நாளை முழுமையான விசாரணைக்குப் பின்னர் உத்தரவுகள் அனைத்தும் பிறப்பிக்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிஸியாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் ‘ரெட்ரோ’, ‘ஜனநாயகன்’ என அடுத்தடுத்து படங்களை கையில் வைத்துள்ள அவர் ‘கூலி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதுகுறித்து பேசியவர் ரஜினி சாருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் ஸ்பெஷல் என தெரிவித்துள்ளார். கூலி படத்தில் தான் ஆடிய நடனம் ‘காவாலா’ போன்று இல்லாமல் வேறு வைப்பில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
திமுக ஆட்சியில் சாதிய மோதல்களும், கொலைவெறித் தாக்குதல்களும், பாலியல் வன்கொடுமைகளும் நடைபெறும் கூடாரமாக பள்ளிக்கூடங்கள் மாறியுள்ளதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். சட்ட – ஒழுங்கு சீர்கெட்டு நிற்பதற்கான சான்றுதான் பாளையங்கோட்டை பள்ளியின் கொலைவெறித் தாக்குதல் என்றும் அவர் கூறியுள்ளார். திமுக ஆட்சியை அகற்றுவதே இதற்கு ஒரே தீர்வு எனவும் சீமான் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா, வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சிக் கொடியேற்றி நயினார் நாகேந்திரன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.
Sorry, no posts matched your criteria.