news

News April 16, 2025

ஐபிஎல் போட்டியில் மரண அடி

image

RR அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், DC அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எவ்வளவு அதிரடி என்றால், வெறும் 2 ஓவர்களில் 33 ரன்கள் குவித்திருக்கும் அளவுக்கு அதிரடி. முதல் ஓவரில் McGurk அடித்த 2 பவுண்டரியால் DC 10 ரன்கள் குவித்தது. இரண்டாவது ஓவரில், அபிஷேக் பொரேல் 4, 4, 6, 4 , 4, 1 என 23 ரன்கள் குவித்தார். இந்த ஓவரை வீசியவர் தேஷ்பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.

News April 16, 2025

சீமான் வழக்கு – ‘வீடியோவை பார்த்த பின் உத்தரவு’

image

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை ஐகோர்ட் சீமான் பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால் இதுவரை 100 வழக்குகளாவது தாக்கல் செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் சீமான் பேசிய வீடியோ ஆதாரங்களை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

News April 16, 2025

ஒலிம்பிக்ஸ் கிரிக்கெட் போட்டி.. மைதானம் அறிவிப்பு

image

2028 லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக்ஸ் கிரிக்கெட் போட்டிகள், தெற்கு கலிஃபோர்னியாவின் பொமோனாவில் உள்ள மைதானத்தில் நடக்கும் என ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள இந்த மைதானம், 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 128 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஒலிம்பிக்ஸில் சேர்க்கப்பட்டுள்ளன. மொத்தம் 6 அணிகள் 2028 ஒலிம்பிக்ஸில் மோத உள்ளன.

News April 16, 2025

‘தெகிடி’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்

image

தனியார் விமான பைலட் சாய் ரோஷன் ஷியாம் என்பவருடன் நடிகை ஜனனிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘Now and Forever’ என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். நடிகை ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அந்த ஜோடிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ‘அவன் இவன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஜனனிக்கு, ‘தெகிடி’ படம் கெரியரின் முக்கிய படமாக அமைந்தது.

News April 16, 2025

தர்பூசணியில் எந்த ரசாயனமும் இல்லை – தமிழக அரசு

image

தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய முன்னாள் உணவு பாதுகாப்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க அதிகாரிக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

News April 16, 2025

IPL: DC முதலில் பேட்டிங்

image

இன்றைய IPL போட்டியில், RR அணியுடன் DC அணி மோதுகிறது. இதில், டாஸ் வென்ற RR அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், DC அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார். நடப்பு சீசனில் வலுவான நிலையில் இருக்கும் DC அணி, இப்போட்டியில் வென்றால் முதலிடத்திற்கு முன்னேறும். அதேநேரம், புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் RR அணி, மீண்டு எழ முயற்சி செய்து வருகிறது.

News April 16, 2025

முதலமைச்சர் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம்

image

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முதல் முறையாக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு கவர்னர் வேந்தராக நீடித்துவந்த நிலையில், அதனை மாற்றும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையிலும், சட்டப்போராட்டம் நடத்தி அரசு அதனை வென்றது. இதனையடுத்து, வேந்தராக முதல்வர் இன்று கூட்டத்தை நடத்தினார்.

News April 16, 2025

அந்த டைரக்டர் படத்தில் நடிப்பது ஏன்? VJS விளக்கம்

image

தெலுங்கு மசாலா பட இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது குறித்து VJS விளக்கம் அளித்துள்ளார். தன்னுடைய இயக்குநர்களின் முந்தைய படங்களை வைத்து அவர்களை மதிப்பிடமாட்டேன் எனவும், கதை பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வதாகவும் VJS தெரிவித்துள்ளார். மேலும், இப்படம் இதுவரை தான் நடித்திராத வகையில், முழுமையான ஆக்‌ஷன் படமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

News April 16, 2025

சீமானை கூட்டணிக்கு அழைத்தார் நயினார்

image

நாம் தமிழர் கட்சி, பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். மாறுபட்ட கொள்கைகளை கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய கதைகள் உள்ளன என்று சுட்டிக் காட்டிய அவர், திமுகவை வீழ்த்துவதற்காக சீமான் இதனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை சீமான் ஏற்பாரா!

News April 16, 2025

பெண் என்றால் யார்? கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

பெண்ணாகப் பிறந்தவர்கள் மட்டுமே பெண்களாக அனுமதிக்கப்படுவார்கள் என்ற அதிரடி தீர்ப்பை UK நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஆணாக பிறந்து பெண்ணாக தங்களை உணர்பவர்கள் (திருநங்கை) தங்களுக்கும் பெண்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான வழக்கில், பெண்ணாகப் பிறந்தால் மட்டுமே பெண் என்று கருதப்படுவார்கள் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!