news

News October 30, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News October 30, 2025

ராகுல் பேசும்போதெல்லாம் தாமரை மலர்ந்தது: அமித்ஷா

image

ஓட்டுக்காக PM மோடி டான்ஸ் கூட ஆடுவார் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த பேச்சுக்கு தேர்தலில், ராகுல் விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். மோடியின் தாயாரை ராகுல் அவமதித்தார், பலமுறை இழிவான முறையில் பேசியுள்ளார் என்றும் கூறினார். ஆனால், ராகுல் இவ்வாறு இழிவாக பேசும் ஒவ்வொரு முறையும் தாமரை மலர்ந்துள்ளது என்று அமித்ஷா தெரிவித்தார்.

News October 30, 2025

Cinema Roundup: டிஸ்னியின் ‘zootopia 2’ தமிழில் ரிலீஸ்

image

*அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் மிருணாள் தாகூர் இணைந்துள்ளதாக தகவல். *டிஸ்னியின் ‘zootopia 2’ தமிழில் வரும் நவ.28-ம் தேதி ரிலீசாக உள்ளது. *‘பென்ஸ்’ படத்தில் ராகவா லாரன்ஸிற்கு ஜோடி இல்லையாம். *‘பியார் பிரேமா காதல்’ பட இயக்குநர் இயக்கி, நடிக்கும் படத்தில் ‘குடும்பஸ்தன்’ நாயகி நடிக்கிறாராம். *ராகவா லாரன்ஸின் சொத்து மதிப்பு ₹100 கோடி என தகவல்.

News October 30, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News October 30, 2025

பணி நியமன விவகாரம்.. சிபிஐ விசாரணை கோரும் அன்புமணி

image

நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமன முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என அன்புமணி தெரிவித்துள்ளார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் கரப்ஷன், கமிஷன் கலாச்சாரத்தை திமுக அரசு கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார். அமலாக்கத்துறை ஆதாரங்களின் அடிப்படையில், தமிழக போலீஸ் உடனடியாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

News October 30, 2025

டெக்னாலஜி ஸ்டார்ட்அப்களுக்கு ₹10,000 கோடி: பியூஷ் கோயல்

image

FFS திட்டத்தின் மொத்த நிதியையும் (₹10,000 கோடி), அடுத்த ஆண்டில் டெக்னாலஜி சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஒதுக்க உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வெளிநாட்டு சார்பு நிலையை குறைத்து, உள்நாட்டு தொழில்நுட்ப தயாரிப்புகளை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்தியாவை கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்ற பயன்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

தமிழ்நாட்டுக்கு SIR அவசியம்: ஜெயக்குமார்

image

வாக்காளர் பட்டியலில் உண்மைத்தன்மை வேண்டுமென்றால் TN-க்கு SIR அவசியம் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக ஆய்வின்படி, 2023-ல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தொகுதியிலேயே இல்லாத 40,000 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் பூத் லெவல் ஆபிசர், கட்சிகளின் ஏஜெண்ட் இணைந்து செயல்பட்டால் வெளிப்படைத்தன்மையுடன் வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்றும் அவர் பேசியுள்ளார்.

News October 30, 2025

ராசி பலன்கள் (30.10.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News October 30, 2025

டெங்குவை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது: EPS

image

TN-ல் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாக EPS சாடியுள்ளார். டெங்கு எதிரொலியாக TN முழுவதும் கூடுதல் மருத்துவ முகாம்களை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று X-ல் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உள்ளாட்சிகளில் தூய்மை பணியாளர்களை கொண்டு சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News October 30, 2025

₹441 லட்சம் கோடி.. உலகின் NO.1 நிறுவனமான Nvidia

image

உலகின் முதல் $5 டிரில்லியன் (₹441 லட்சம் கோடி) சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக Nvidia உருவெடுத்துள்ளது. அதுவும் முதல் $4 டிரில்லியன் மதிப்பு கொண்ட நிறுவனமாக உருவெடுத்த 3 மாதங்களில் இந்த சாதனையை படைத்துள்ளது. கிராஃபிக்ஸ் சிப் தயாரிப்பில் இருந்து AI சிப் தாயாரிப்புக்கு மாறியதில் இருந்து Nvidia-ன் பங்குகள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, 2022-ல் OpenAI தொடங்கியது முதல் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது.

error: Content is protected !!