India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
DCக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து RR கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக வெளியேறியிருக்கிறார். 189 என்ற இலக்கை துரத்திய அவர், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வருகிறார். அவர் 31 ரன்கள் எடுத்திருந்த போது, போட்டியின் 5.3ஆவது பந்தில் காயம் ஏற்பட்டது. விப்ராஜ் வீசிய அந்த பந்து ஃபுல்டாஸாக வந்ததால், அதனை ஓங்கி அடித்தபோது சாம்சனுக்கு வலி ஏற்பட்டு வெளியேறினார்.
2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 2023ஆம் ஆண்டு பள்ளியில் படித்து வந்த சின்னதுரையை வேறு சமுதாய மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய விவகாரம் பூதாகரமானது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் பழகிய சிலர், அவரை தனியாக வரவழைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், படுகாயமடைந்த சின்னதுரை ஆஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு ஓவரில் அதிக பந்துகளை வீசியவர்கள் பட்டியலில் ராஜஸ்தான் வீரர் சந்தீப் சர்மா இணைந்துள்ளார். DC-க்கு எதிரான இன்றைய போட்டியில் 20-வது ஓவரை வீசும்போது 4 வைட், ஒரு நோபாளுடன் சேர்த்து 11 பந்துகளை அவர் போட்டுள்ளார். ஏற்கெனவே முகமது சிராஜ், துஷார் தேஷ்பாண்டே, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசி இந்த பட்டியலில் உள்ளனர்.
சம்மர் சீசன் தொடங்குனாலே மாம்பழம் தானே நியாபகம் வரும். அதிலும், 15,000 வகை மாம்பழம் விளையும் இந்தியாவுல சும்மா விடுவோமா? அதுல மிகவும் சுவையான மாம்பழங்கள் என்னென்னனு பார்க்கலாம். (1) இமாம் பசந்த் (2) அல்போன்சா (3) மல்கோவா (4) செந்தூரா (5) மல்லிகா (6) சேலம் பங்களா (7) பங்கனப்பள்ளி (8) கலபாடி (9) தோத்தாபுரி (10) பாதாமி. இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க.
ஐபிஎல்லில் வேகப்பந்து வீச்சாளர்கள் 4 ஓவர்களை மட்டுமே வீசினாலும், அதுதான் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவதாக ரோஹித் தெரிவித்துள்ளார். ENG-க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஐபிஎல் பவுலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும், பும்ரா, ஷமி ஆகியோர் அணியில் இடம்பெறுவது மிகவும் முக்கியம் எனவும் அவர் கூறியுள்ளார். IND vs ENG மோதும் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர், வரும் ஜூன் 20-ல் தொடங்குகிறது.
நடிகை அபிநயா, தனது நீண்ட நாள் காதலன் வேகசேனா கார்த்திக்கை கரம்பிடித்தார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் படத்திலும் அபிநயா ஹிட் கொடுத்து கவனம் பெற்றுள்ளார்.
அகில இந்திய முஸ்லிம் ஜமாத் என்ற அமைப்பு விஜய்க்கு கண்டனம் தெரிவித்து ஃபத்வா வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழக இஸ்லாமியர்கள் விஜய்யிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. குடிகாரர்கள் மற்றும் சூதாடுபவர்களை இஃப்தார் விருந்துக்கு அழைத்து வந்து, விஜய் பாவம் செய்துவிட்டதாக ஜமாத் குறிப்பிட்டுள்ளது. மேலும், விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
USA துணை அதிபர் ஜேடி வான்ஸ், வரும் 18 முதல் 24-ம் தேதிகளில் இந்தியா மற்றும் இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். இருநாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஜேடி வான்ஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவரது மனைவி உஷா மற்றும் 3 குழந்தைகளுடன் இந்தியா வர உள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து குறித்து பிரதமர் மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஹஜ் புனிதப் பயணத்திற்கு ஆவலுடன் தயாராகி வரும் தமிழகம் உட்பட ஆயிரக்கணக்கான இந்திய இஸ்லாமியர்களுக்கு இந்த செய்தி மிகுந்த வருத்தத்தை உண்டாக்கி உள்ளதாக அவர் தெரிவித்தார். சவுதி அரசிடம் இதுகுறித்து பேசி தீர்வு காண வேண்டும் எனவும் CM ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று ராக்கெட் வேகத்தில் பறந்திருக்கிறது. இன்று ஒரே நாளில் 100 அமெரிக்க டாலர்கள் உயர்ந்திருக்கும் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, 3,322 டாலர்களுக்கு விற்பனையாகிறது. இது, நேற்றைய விலையை விட 3.1% அதிகமாகும். இதனையடுத்து, நாளைய தினம் இந்தியாவில் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹2,000 வரை உயரும் என்று கணிக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.