India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையில்லாமல், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மதிய நேரத்தில் கடுமையான வேலைகளை செய்ய வேண்டாம். வெயிலில் வேலை செய்பவர்கள் மதியம் ஓய்வு எடுக்க வேண்டும். குறிப்பாக, வெப்ப அலையை எதிர்கொள்ள தேவையான அவசரகால மருந்துப் பொருள்களை அனைத்து தொழிற்சாலைகளில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், புதிதாக தொடங்கப்படவுள்ள தொழில்கள் மற்றும் தொழிற்சாலை விரிவாக்கம் குறித்தும் ஆலோசனை நடைபெறலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சத்யராஜ் மகள் திவ்யா திமுகவில் இணைந்த நிலையில், மகன் சிபிராஜ் தவெகவில் இணையவுள்ளதாக பேச்சு அடிப்பட்டது. அதுகுறித்து தற்போது பேசியுள்ள அவர், நான் விஜய்யின் தீவிர ரசிகன், அவ்வளவு தான்.. தவெகவில் இணையப் போவதாக வெளியாகும் செய்தி வெறும் வதந்தி, அதில் எந்தவொரு உண்மையும் இல்லை. ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்; எனக்கு அரசியல் ஆர்வம் & அறிவு கிடையாது என கூறியுள்ளார்
DC அணிக்கு எதிரான போட்டியில் RR தோல்வியடைந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த சஞ்சு சாம்சன், பாதியிலேயே, மைதானத்தில் இருந்து வெளியே போனதுதான். 31 ரன்கள் எடுத்திருந்தபோது retd hurt முறையில் வெளியேறாமல் இருந்திருந்தால், ரன் குவிப்பில் ஈடுபட்டிருப்பார். இதனால், சூப்பர் ஓவர் வந்திருக்க வாய்ப்பில்லை; ராஜஸ்தானும் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருந்திருக்கும்.
பொன்முடியின் பேச்சால், அவரின் மீது பெண்கள் கோபத்தோடு இருக்கின்றனர்; திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படுவதற்கு அவர் மாதிரியான ஆட்களே போதும் என்று பாஜக துணைத் தலைவர் ராமலிங்கம் விமர்சித்துள்ளார். மேலும், பொன்முடிக்கு சேரும் பெருமையெல்லாம், முதல்வர் ஸ்டாலினையும் சேரும் என சாடிய அவர், இதுபோன்ற விவகாரங்களை திசை திருப்பவே திமுக, அதிமுக – பாஜக கூட்டணியை விமர்சிப்பதாகவும் கூறியுள்ளார்.
இறை பக்தி என்பது வாழைப் பழம் போன்றது. வாழைப் பழத்தில் இருக்கும் தோல் சனாதனம். அதற்குள் இருக்கும் பழம்தான் இறைவன் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார். இதற்கு அதிமுகவின் கே.பி.முனுசாமி, அமைச்சர் சொல்லும் உவமை முழுமையாக தவறு. சனாதனத்திற்கும், இறைவனுக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. இறைவனும், சனாதனமும் ஒன்று என்றால், இவ்வளவு பெரிய விவாதமும் நீதிமன்ற வழக்குகளும் தேவையில்லை என்று பதிலடி கொடுத்தார்.
* 1966 நடிகர் விக்ரம் பிறந்த தினம்
* 1975 இந்தியாவின் 2-வது குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் காலமானார்.
* 1946 பிரான்சிடம் இருந்து சிரியா சுதந்திரம் பெற்றது.
* 1983 SLV ராக்கெட் இந்தியாவால் ஏவப்பட்டது. இது இந்தியாவில் விண்வெளி யுகத்தை தொடங்கியது.
* 1756 தீரன் சின்னமலை பிறந்த தினம்
* உலக ஹீமோபிலியா தினம்
கடந்த ஜனவரியில் நடந்த ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரின் 5-வது போட்டியில் இருந்து வெளியேறியது குறித்து ரோஹித் மனம் திறந்துள்ளார். அந்த போட்டியில் தான் சரியாக விளையாடாததால், 4 போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட கில்லுக்கு வாய்ப்பு வழங்க கோரி பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுவிடம் கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். அணிக்கு என்ன தேவையோ அதையே அனைவரும் செய்ததாகவும் கூறியுள்ளார்.
கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால், பலரும் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால், சுற்றுலாவின்போது எவ்வற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது பலருக்கு தெரியவில்லை. குறிப்பாக, செல்லும் இடங்களின் பாரம்பரியம், உள்ளூர் பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும். காடு, மலை சார்ந்த பகுதிகள் எனில், பறவைகள், பிற உயிரினங்களின் வாழ்வியலில் குறிக்கிடக் கூடாது. குறிப்பாக, செல்ஃபி எடுத்தல் போன்றவை தவிர்க்கவும்.
சைவம் மற்றும் வைணவம் மதங்களை பெண்களுடன் ஒப்பிட்டு, அமைச்சர் பொன்முடி மிக மோசமாக பேசினார். இது அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அவர் மன்னிப்பும் கோரினார். ஆனாலும், அவரை பதவி நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பொன்முடியை பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கறிஞர் ஐகோர்டில் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Sorry, no posts matched your criteria.