India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை மளமளவென சரிந்துள்ளது. பங்குனி உத்திரம், தமிழ் புத்தாண்டு காரணமாக கடந்த வாரத்தில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்தது. இந்நிலையில், கடந்த வாரத்தில் ₹1500-க்கு விற்பனையான பிச்சிப்பூ இன்று(ஏப்.17) ₹500-க்கும், ₹800க்கு விற்பனையான மல்லிகை பூ ₹300-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஜாதிமல்லி, அரளி, சம்பங்கி, ரோஜா, கனகாம்பரம் ஆகியவற்றின் விலையும் குறைந்துள்ளது.
நெல்லை நாங்குநேரியில் மாணவர் சின்னத்துரையை தாக்கிய விவகாரத்தில் 2 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. சின்னத்துரையை அழைத்து தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத 4 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டு வழிப்பறி செய்த பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீஸ் தேடி வருகிறது.
பிரபல ஹாலிவுட் நடிகை <<15593985>>மிஷேல் டிராக்டன்பர்க்<<>> (39) மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. நீரிழிவு நோய் பாதிப்பே மரணத்திற்குக் காரணம் என மருத்துவ அறிக்கை கூறுகிறது. தனது 3 வயதிலேயே விளம்பரங்களில் நடித்துப் பிரபலமான மிஷேல், 100க்கும் மேற்பட்ட படங்கள், சீரிஸில் நடித்துள்ளார். கடந்த பிப்.26-ம் தேதி நியூயார்க்கில் உள்ள வீட்டில் சடலமாக கிடந்த மர்மம், இன்று வெளியான மருத்துவ அறிக்கையின் மூலம் நீங்கியுள்ளது.
இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயரை BCCI பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளிவருகின்றன. ஆனால், இந்த செய்தி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. BGT தொடரில், இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததை தொடர்ந்து இந்த ஆக்ஷன் எடுக்கப்பட்டுள்ளது. இவருடன் பீல்டிங் பயிற்சியாளர் திலீப், கண்டிஷனிங் பயிற்சியாளர் சோஹம் தேசாய் ஆகியோரும் நீக்கப்படுவதாக கூறப்படுகிறது.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு இபிஎஸ் மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியிலுள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினர். அப்போது முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், தங்கமணி, கே.சி. கருப்பண்ணன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தங்கம் விலை <<16125169>>இன்று<<>> கிராமுக்கு ₹105 அதிகரித்துள்ளது. கடந்த 8-ம் தேதி 1 கிராம் ₹8,225க்கும், சவரன் ₹65,800க்கும் விற்பனையானது. கடந்த 10 நாள்களில் ஜெட் வேகத்தில் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சமாக 1 கிராம் ₹8,920க்கும், சவரன் ₹71,360க்கும் விற்பனையாகிறது. அமெரிக்கா-சீனா இடையே நிலவும் வரிப்போர் காரணமாக வரும் நாள்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
வர்ஷா பொல்லம்மா ரீசண்ட் இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகின்றது. கறுப்பு கலர் மினி கவுன் ஒன்றில் க்யூட்டாக சிரித்தபடி போஸ் கொடுத்ததை விட, அந்த போஸ்டுக்கு அவர் கொடுத்திருந்த கேப்ஷன் தான் செம வைரல்.‘Pant எங்கன்னு முட்டாள்தனமா கேக்காதீங்க.. அவர் LSG-ல இருக்காரு’ என வர்ஷா மென்ஷன் பண்ண, நெட்டிசன்கள் சிரித்து வருகின்றனர். ‘96’, ‘பிகில்’ போன்ற தமிழ் படங்களில் வர்ஷா நடித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டையில் உள்ள தீரன் சின்னமலை சிலையின் கீழுள்ள உருவப் படத்திற்கு மலர் தூவி முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதில், அமைச்சர் முத்துச்சாமி, கொங்கு ஈஸ்வரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தினர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.17) ₹840 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,920-க்கும், சவரன் ₹71,360-க்கும் விற்பனையாகிறது. இது வரலாறு காணாத புதிய உச்சமாகும். அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ₹110-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,10,000-க்கும் விற்பனையாகிறது.
விஜய் சங்கர் குறித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சீக்கா. CSK வீரர் விஜய் சங்கர் மெதுவாக விளையாடுகிறார் என விமர்சனக் கணைகள் ஏவப்படும் நிலையில், மற்ற வீரர்களுக்கு Drinks கொண்டு செல்லத்தான் அவர் தேவை என சீக்கா தன் பங்குக்கு சாடியுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள், உங்கள் கமெண்ட்ரிக்கு அவர் எவ்வளவோ மேல் என கமெண்ட் செய்து வருகின்றனர். சீக்கா கருத்து பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
Sorry, no posts matched your criteria.