India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IPL 2025 சீசனில் இருந்து முதல் அணியாக CSK அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. தொடர்ந்து, அடுத்தடுத்த சீசனில் CSK பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் வெளியேறுவதும் இதுவே முதல் முறையாகும். இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள CSK, 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தோனி தலைமையிலான இந்த தோல்வி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இன்று (மே 1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பாகிஸ்தானில் நேற்று (ஏப்.30) இரவு 9:58 மணியளவில் 4.4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 50 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. முன்னதாக, அந்நாட்டில் கடந்த ஏப்.12-ல் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.8 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று (மே 1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
CSK-க்கு எதிரான இன்றைய போட்டியில் 191 என்ற இலக்குடன் ஆடிய PBKS அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் கடந்த நிலையில், 18வது ஓவரில் அவுட் ஆக, வெற்றி பெற 1 ரன் மட்டுமே தேவை என்ற நேரத்தில் கடைசி ஓவரில் சூர்யான்ஸ் ஷெட்ஜ் விக்கெட்டை பறிகொடுத்தார். PBKS அணி 2 பந்துகள் மீதமிருந்தபோது 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. MSD-ன் ஃபீல்டிங் மேஜிக் கைகொடுக்காமல் போனதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ரெப்போ விகிதக் குறைப்பின் காரணமாக, வங்கிகள் நிலையான வைப்புத்தொகை மற்றும் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை மாற்ற உள்ளன. ரிசர்வ் வங்கி, மாநிலத்தின் அனைத்து உள்ளூர் வங்கிகளையும் ஒன்றிணைத்து ஒரு பெரிய வங்கியை உருவாக்க உள்ளது. அதன்படி 11 மாநிலங்களில் கிராமப்புற வங்கிகள் பெரிய வங்கிகளாக மாற்றப்படுகின்றன. இதே போல் மே மாதம் மேலும் சில மாற்றங்களும் வருகின்றன.
இன்றைய ஐபிஎல் போட்டியில், CSK அணியை வீழ்த்தி PBKS அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த CSK அணியின் சாம் கரன் 88 ரன்கள் எடுத்தார். இதனால், CSK அணி 19.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதனை சேஸ் செய்ய களமிறங்கிய PBKS அணியின் ப்ரப்சிம்ரன் சிங், ஷ்ரேயஸ் இருவரும் அரைசதம் கடந்தனர். இதனால், PBKS அணி 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி வெற்றிபெற்றது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான பல நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. ஏற்கெனவே 16 பாக்., யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பாக் நடிகர், நடிகைகளின் இன்ஸ்டா பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பலருக்கு தெரிந்த ஹனியா ஆமிரின் இன்ஸ்டா கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஷாருக் கானுடன் நடித்த மஹிரா கானின் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு 19 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த கேரளாவை சேர்ந்த சன்னி தாமஸ்(85) மாரடைப்பால் காலமானார். இவரின் தலைமையில் இந்திய அணி, 108 தங்கம், 74 வெள்ளி, 53 வெண்கல பதக்கங்களை பல்வேறு தொடர்களில் வென்றுள்ளது. இதில் 3 ஒலிம்பிக் பதக்கங்களும் அடங்கும். இவருக்கு 2001-ம் ஆண்டில் இந்திய அரசு துரோணாச்சாரியார் விருது வழங்கி கெளரவித்தது. #RIP
விவாகரத்து, புதிய காதல் என மேரிகோம் பற்றி அடுத்தடுத்து செய்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது வழக்கறிஞர் மூலம் தெளிவான அறிக்கையை மேரி கோம் வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2023-ம் ஆண்டே கணவர் கரங் ஆன்லிரை அவர் விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவிக்கப்படுள்ளது. மேலும் ஹிதிஷ் சவுதி என்பவரை மேரிகோம் காதலித்து வருவதாக வெளியான செய்தியும் மறுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.