India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும், ஓய்வூதியமும் ஜனவரி 1, 2026-ல் இருந்து உயரவுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆலோசிக்க 8வது ஊதியக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் படி, 2.86 Fitment Factor அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்படலாம். உதாரணத்திற்கு, உங்களுடைய சம்பளம் ₹18 ஆயிரமாக இருந்தால் ₹51 ஆயிரம் வரை உயரலாம்.

90 நிமிடங்கள் பேசாமல், போன் நோண்டாமல், தூங்காமல் சும்மா உட்கார்ந்துட்டு இருந்தால், நீங்கதான் வெற்றியாளர். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தாங்களே ‘ரீசார்ஜ்’ செய்து கொள்ள தென்கொரியாவில் ‘Space Out’ என்ற போட்டி நடத்தப்படுகிறது. கொஞ்சம் சும்மா இருந்தாலும், Over thinking-ஆல் பலருக்கும் நெகட்டிவ் எண்ணங்கள் தோன்றும். அதனை வெல்வதே இப்போட்டியின் நோக்கம். போட்டிக்கு யார் ரெடி?

பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு சுயதொழில் தொடங்க ₹1.40 லட்சம் வரை மகிளா சம்ரிதி யோஜனா திட்டம் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனை 3.5 ஆண்டுக்குள்  திருப்பி செலுத்தினால் போதும். கடன் பெற விரும்புவோரின் ஆண்டு குடும்ப வருமானம் ₹3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <

சமூக ஒற்றுமைக்காக தன்னை அர்ப்பணித்த உன்னத மனிதர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி விழாவையொட்டி, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில், முத்துராமலிங்க தேவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். கரூர் துயர சம்பவம் தொடர்பான வீடியோவுக்கு பிறகு முதல் முறையாக அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணிக்கும் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கும் இடையேயான அரையிறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் நவி மும்பை மைதானத்தில் மாலை 3 மணி அளவில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 20% உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அது இரவில் வெறும் 4% ஆக குறையும் என்றும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மழை பாதிப்பு இருக்காது என்ற நிலையே உள்ளது. இன்று இந்திய அணி வெற்றி பெறுமா?

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதிமுக ஆட்சியை அமைக்க வேண்டும் என பசும்பொன்னில் OPS, TTV, செங்கோட்டையன் ஒன்றாக சபதம் ஏற்றுள்ளனர். மேலும், புதிய கூட்டணியை உருவாக்கவுள்ளதாக அறிவித்த TTV, சசிகலா எப்போதும் எங்களுடன் தான் இருப்பார்; காலதாமதத்தால் எங்களுடன் சேர்ந்து அவரால் இங்கு வரமுடியவில்லை. துரோகத்தை வீழ்த்த வேண்டும் என்பதால் 3 பேரும் ஒன்றாக இணைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

பசும்பொன் நினைவிடத்தில் தேவருக்கு டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக இணைந்து மரியாதை செய்தனர். குறிப்பாக, மூன்று பேரும் ஒன்றாக இணைந்துவிட்டோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில், மூன்று விதமான மாலைகளை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின் ஒன்றாக இணைந்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர். இன்னும் சற்றுநேரத்தில் 3 பேரும் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர்.

தமிழகத்தின் நலத்திட்டங்கள், பல மாநிலங்களுக்கும் உதாரணம். அப்படி, TN-ஐ போல கேரளாவிலும் மகளிருக்கு ₹1000 வழங்கப்படும் என CM பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அரசின் எந்த திட்டத்திலும் பயனாளியாக இல்லாத மகளிர், திருநங்கைகள் 31.34 லட்சம் பேருக்கு இந்த தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, இளைஞர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் ₹1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சையில்லாத அதிசய சிகிச்சையை US விஞ்ஞானி சென் சூ கண்டறிந்துள்ளார். பன்றி இதய திசுக்களில் ஆய்வு செய்து கொண்டிருந்த அவர், எதேச்சையாக Ultrasound-ன் துடிப்பினை மாற்றியபோது, திசுக்கள் நொறுங்கியுள்ளன. அவரின் இந்த தற்செயலே தற்போது ‘Histotripsy’ என்ற கல்லீரல் புற்றுநோய் சிகிச்சை முறையாக மாறியுள்ளது. தற்போது சிறுநீரகம், மார்பகம், மூளை புற்றுநோய்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை ஒட்டி, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் EPS மரியாதை செய்தார். பின்னர் பேட்டியளித்த அவர், தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை மத்திய உள்துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். KAS, OPS ஒரே காரில் பயணித்தது தொடர்பான கேள்விக்கு, அது பற்றி தனக்கு எதுவும் தெரியவில்லை என்றும், தெரிந்ததும் பதில் அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
Sorry, no posts matched your criteria.