India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்யும் போது, கண்டிப்பாக இந்த தவறுகளை செய்யக் கூடாது:
1. வாங்கி வரும் விநாயகர் சிலையின் தும்பிக்கை வலது புறமாக இருக்கக்கூடாது.
2. விநாயகர் சிலையை தனியாக வைக்காமல், லட்சுமி அல்லது சிவன்- பார்வதி, முருகன் விக்ரகம் அல்லது படத்துடன் சேர்த்து வைக்கவேண்டும்.
3. வீட்டில் விநாயகரை வைத்த பிறகு, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உணவில் சேர்க்கக்கூடாது. SHARE IT.
நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதாவை பிரிந்துவிட்டதாகவும், அவர்கள் ஒன்றாக இல்லை எனவும் செய்திகள் உலா வருகின்றன. இந்நிலையில், வெளியான எந்த செய்தியிலும் உண்மையில்லை என்றும் தனது மகளின் படிப்பிற்காகவே சங்கீதா வெளிநாட்டில் தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே நேற்று, விஜய்- சங்கீதா திருமண நாளை முன்னிட்டு, அவர்களது திருமண போட்டோஸ் சோஷியல் மீடியாவில் வைரலாகி உள்ளன.
உடல் நலக்குறைவால் <<17522156>>அமைச்சர் ஐ.பெரியசாமி<<>>, மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு டாக்டர்கள் குழு, சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் அவர் வீடு திரும்புவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தன்னை தோனிக்கு பிடிக்காததால் தான், தனது கிரிக்கெட் கெரியர் முடிவுக்கு வந்ததாக இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். தோனி அவருக்கு பிடித்த வீரர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்பளித்ததாகவும், தன்னை புறக்கணித்ததற்கான காரணம் இதுவரை தனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதுவரை 12 ODI போட்டிகளில் விளையாடியுள்ள திவாரி 1 சதம், 1 அரைசதம் என 287 ரன்களை எடுத்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை WHO முன்னாள் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் பாராட்டியுள்ளார். வயிறு நிறைய சாப்பிட்டு படிக்க உட்கார்ந்தா மாணவர்களுக்கு படிப்பு நல்லா வரும் எனக் கூறிய அவர், மாணவர்களுக்கான உணவில் தினமும் ஒரு ஸ்பூன் முருங்கை இலைப் பொடியை சேர்க்க வேண்டுமெனவும் இதன் மூலம் ரத்த சோகையை தடுக்க முடியும் எனவும் CM ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்கள் எப்போது பணம் டெபாசிட்டாகும் என காத்திருக்கின்றனர். அவர்களுக்கு அண்ணா பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 15-ல் பணம் டெபாசிட் செய்யப்படவுள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில நாள்களில் இந்த திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பயனர்களின் பட்டியல் வெளியாகவுள்ளது. தற்போது, 1.15 கோடி மகளிருக்கு ₹1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
போலி விளம்பரங்களால் குளறுபடிகளை மறைத்துவிட திட்டமா என நயினார் சாடியுள்ளார். தாராபுரம், பூனாயிருப்பு அரசு துவக்கப்பள்ளிகளில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்ததை CM-க்கு சுட்டிக்காட்டிய அவர், ஏழைக்குழந்தைகள் தானே படிக்கிறார்கள் என்ற அலட்சியத்தோடு உணவு தயாரிக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். காலை உணவின் தரத்தை உயர்த்தாது திட்டத்தை விரிவுப்படுத்துவது பலனளிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் (ஆக.28) அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து 100 மீ. சுற்றளவில் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்றால் போலீஸில் புகாரளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் கடைசி படம் என கூறப்படும் ஜனநாயகனில் இயக்குநர்கள் லோகேஷ், விக்னேஷ் சிவன் ஆகியோர் பத்திரிகையாளர்களாக கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்தது. அந்த வரிசையில் தற்போது படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக வேட்டையனில் ரஜினியுடன் இணைந்தும், ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் உடன் இணைந்தும் அவர் நடனமாடியது நினைவுகூரத்தக்கது.
சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிப்பதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். இது உங்கள் உடல்நலனில் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். டீ, காபியில் இருக்கும் Tannic acid நீங்கள் சாப்பிட்ட உணவில் உள்ள சத்துக்களை உங்கள் உடலில் சேரவிடாமல் தடுத்துவிடும். இதனால் சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் டீ, காபி-ஐ தவிர்த்துவிடுங்கள் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Sorry, no posts matched your criteria.