India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உச்ச நீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது என குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் விமர்சித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அரசமைப்பின் 145வது பிரிவை விளக்குவதுதான் நீதிபதிகளுக்கு இருக்கும் ஒரே உரிமை என்றும், அதை மறுத்து குடியரசுத் தலைவருக்கு நீதிபதிகள் உத்தரவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாம் எங்கு செல்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், மத ரீதியான சர்ச்சை கருத்தை பேசியுள்ளார். வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்கள் மத்தியில் பேசிய அவர், இந்துக்களிடம் இருந்து நாம் வேறுபட்டவர்கள் எனக் குறிப்பிட்டார். நமது மதம், பழக்கவழக்கம், மரபு உள்ளிட்டவை இந்துக்களிடம் இருந்து வேறுபாடானது எனவும், இதனை தங்கள் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் எனவும் அசிம் வலியுறுத்தினார். இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் போன்ற பருப்புகளுடன் பேரீச்சை பழத்தை தினமும் சாப்பிட்டால் உடலில் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என டாக்டர்கள் கூறுகிறார்கள். வேர்க்கடலையில் இருக்கும் ஜிங்க், விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்க உதவுகிறதாம். மேலும், வெங்காயம், பூண்டு இரண்டும் ஆண்மை பெருக்கியாகவும், விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகளின் பட்டியலில் முக்கியமானதாகவும் இருக்கிறதாம். SHARE IT.
SBI, BOI வங்கிகளைத் தொடர்ந்து, <<16115403>>கடன்கள்<<>> மீதான வட்டியை BOM-ம் குறைத்துள்ளது. SBI வங்கி, வீடு, வாகன கடன்கள் மீதான வட்டியை 25 அடிப்படை புள்ளிகள் நேற்று முன்தினம் குறைத்தது. பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி (IOB), இந்தியன் வங்கியும் கடன்கள் மீதான வட்டியை குறைத்தன. இதையடுத்து பேங்க் ஆப் மகாராஷ்டிராவும் (BOM ) தற்போது வட்டியை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.
வக்ஃப் திருத்த சட்டம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக 73 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணையில் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை, எனினும் சில <<16127973>>நிபந்தனைகளை <<>>மட்டும் விதித்துள்ளது. தகுந்த ஆவணங்களுடன் 7 நாட்களில் மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு, 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. ஜூன் 1 வரை அவர்களுக்கு 45 நாள்கள் விடுமுறை உறுதியாகியுள்ளது. அதேபோல் சில தனியார் பள்ளிகள் ஜூன் 4-ம் தேதியும், வேறு சில தனியார் பள்ளிகள் ஜூன் 9-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறியுள்ளன. இதை கணக்கிட்டால் 49-52 நாள்கள் விடுமுறை வருகின்றன. உங்களுக்கு எத்தனை நாள்கள் விடுமுறை?
தானாகவே போன் Reboot ஆகும் அம்சத்தை Google Play Services 25.14 அப்டேட்டில் Android சேர்த்துள்ளது. இது ‘Inactivity Reboot’ என அழைக்கப்படுகிறது. போன் 3 நாளுக்கு யூஸ் செய்யப்படாமல் இருந்தால், தானாகவே ‘Before First Unlock’(BFU) என்ற நிலையை போன் அடையும். கரெக்ட்டான பாஸ்வோர்டை பதிவிட்டால் மட்டுமே, போனை திறக்க முடியும். இல்லையேல், போன் மொத்தமாக Reboot ஆகி விடும்.
தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து அசத்தி வருபவர் பிரித்விராஜ். அவர் இயக்கிய
‘எம்புரான்’ படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் வசூலை வாரிக்குவித்தது. இதனிடையே ‘ஆடுஜீவிதம்’ படத்துக்காக கேரள அரசின் சிறந்த நடிகர் விருது பிரித்விராஜுக்கு கிடைத்துள்ளது. இதேபோல் சிறந்த கதைக்கான விருது ‘காதல் தி கோர்’ படத்துக்கும், சிறந்த படத்துக்கான விருது ‘ஆட்டம்’ படத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
பிரபல கர்நாடக (KTK ) மூத்த வழக்கறிஞர் ஷரத் ஜாவலி (84) காலமானார். ஹாவேரியை சேர்ந்த அவர், பஞ்சாப் EX ஆளுநர் டி.சி. பாவேட்டின் கொள்ளு பேரன். கர்நாடகாவுக்காக 60 ஆண்டுகள், உச்சநீதிமன்ற வழக்குகளில் வாதாடியுள்ளார். அதில் கர்நாடகா மற்றும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இடையேயான காவிரி, கிருஷ்ணா நதிநீர் போன்ற பல்வேறு நதிநீர் விவகார வழக்குகளும் அடங்கும். அவரின் தந்தை ஜாவலியும் வழக்கறிஞர்தான்.
ஜென்சால் நிறுவன நிதிகளை மோசடியாக பயன்படுத்தியதால், அதன் இணை நிறுவனர்களின் கம்பெனியான ப்ளூ ஸ்மார்ட் செயல்பட SEBI இடைக்கால தடைவிதித்துள்ளது. இதனால் EV சவாரி நிறுவனமான ப்ளூ ஸ்மார்ட் தனது சேவையை நிறுத்தியுள்ளது. முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், 90 நாள்களுக்குள் சேவை மீண்டும் தொடங்காவிட்டால், பயனர்களின் வாலட் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.