India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களின் உரிமைக்காக போராடும் நக்சல்கள் எங்கள் தோழர்கள்தான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர்கள் குரலற்றவர்களுக்கான குரல் என தெரிவித்த அவர், நக்சல் தனிப்பட்ட லாபத்திற்காக போராடுவதில்லை எனவும் கூறியுள்ளார். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் மத்திய இந்தியாவின் பிற வனப்பகுதிகளில் ஆயுதமேந்திய இயக்கங்களைக் குறிப்பிட்டு திருமா இவ்வாறு பேசியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திருவிழாவையொட்டி நாளை(ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். இதனால், மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் நாளை இயங்காது. குடமுழுக்கு விழாவையொட்டி சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். TNSTC சிறப்பு பஸ்களையும் அறிவித்துள்ளது.
‘Download e-PAN Card’ என உங்களுக்கு இமெயில் வருகிறதா? அதனை நம்ப வேண்டாம் என்று PIB Fact Check தெரிவித்துள்ளது. இதுபோன்ற எந்தவொரு மெயிலும் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்படியான மெயில் வந்தால் அதில் உள்ள எந்தவொரு லிங்கையும் கிளிக் செய்திட வேண்டாம். இதனால் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க!
‘கடந்த 2 ஆண்டுகளாக தான் ‘கூலி’ படத்திற்காக மட்டுமே வேலை செய்தேன் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்த 2 வருடங்களில் நண்பர்கள், ஃபேமிலி என எதுவுமே இல்லை என்றார். தனது 36 & 37 வயது இதிலே சென்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ரஜினிகாந்த், நாகர்ஜுனா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆக.14-ல் வெளியாகிறது.
சுக்கிர பகவான் ஜூலை 8-ம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் நுழைவதால் 5 ராசியினருக்கு நிதி நிலைமை மேம்படுமாம். *ரிஷபம்: திடீர் பண ஆதாயம் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு. *மிதுனம்: வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். *கன்னி: புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். *துலாம்: பண ஆதாயம் அதிகரிக்கும். *விருச்சிகம்: தொழில் வளர்ச்சி அடையும். செல்வம் பெருகும்.
கிரெடிட் கார்டு கிடைப்பது இப்போது எளிதாகிவிட்டது. ஆனால், பல வங்கிகளில் ஒரே ஆண்டில் பல்வேறு விதமான கட்டணங்கள் இதற்காக வசூலிக்கப்படுகிறது. இதனால் பலரும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். உங்களுக்காகவே கட்டணம் இல்லாத 4 கிரெடிட் கார்டுகள் உள்ளன. IDFC FIRST கிளாசிக், Amazon Pay ICICI, Bank of Baroda Prime, Axis Bank Neo ஆகியவை கட்டணங்கள் வசூலிப்பது இல்லை. Share it..
இரவு நேரத்தில் போதுமான தூக்கம் இல்லையெனில் அது குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணமாகலாம் என்கின்றன ஆய்வு முடிவுகள். சரியாக தூங்காத போது, தூக்கம்-விழிப்புக்கு காரணமான மெலடோனின், கார்டிசோல் ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கிறது. இதனால் ஆண், பெண் இருபாலருக்கும் செக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பு பாதிக்கப்படுகிறது. மேலும் தூக்கம் குறைவதால் ஏற்படும் உடல் பாதிப்புகளால் ஆண்களின் செக்ஸ் செயல்திறனும் குறையக்கூடும்.
மகாராஷ்டிராவில் சிவசேனாவை இரண்டாக உடைத்தது போல் பாமகவை உடைக்க பாஜக முயல்வதாக கே.செல்வப்பெருந்தகை(KS) குற்றம்சாட்டியுள்ளார். ராமதாஸை சந்தித்த பிறகு திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க செல்வப்பெருந்தகை முயல்வதாக கருத்து எழுந்தது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் – விசிக இரண்டாம் கட்டத் தலைவர்கள் X தளத்தில் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இந்நிலையில், மீண்டும் பாமகவுக்கு ஆதரவான பேச்சு பேசுபொருளாகியுள்ளது.
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து நீண்ட காலம் காத்திருப்பவர்கள் ஏராளம். ஆனால், புது ரேஷன் கார்டு பெற ஈசியான வழி கிடைத்துள்ளது. ஜூலை 15-ல் தொடங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் அளிக்கும் மனுக்களுக்கு 45 நாள்களில் தீர்வு காண CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த முகாம்களில் ரேஷன் கார்டு பெற விண்ணப்பம் அளித்தால் உடனே அரசு ஒப்புதல் வழங்கும் எனக் கூறப்படுகிறது. உடனே முந்துங்கள். SHARE IT.
<<16955086>>தமிழறிஞர் வா.மு.சேதுராமன்<<>> உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதுவரை, CM ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், வைகோ, வேல்முருகன், மல்லை சத்யா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். நாளை அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. சேதுராமனை கௌரவிக்கும் விதமாக அரசு மரியாதை செலுத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு சேதுராமன் குடும்பத்தினர் இன்று நன்றி தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.