India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2026 தேர்தலுக்காக பாஜக-அதிமுக முன்கூட்டியே கூட்டணி அமைத்தது, அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. 2021 தேர்தலில் திமுக கூட்டணியிடம் தோற்றாலும், அதிமுக வாக்கு விகிதத்தில் மிகப்பெரிய பாதிப்பு இல்லை எனலாம். ஏனெனில் தேர்தல்களில் வெல்கையில் பெரிய வெற்றிகளை அதிமுக குவித்துள்ளது. தோற்றாலும் அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை தன்வசமாக்கியுள்ளது. 2006, 2021 தேர்தலில் 61, 66 தொகுதிகளை வென்றுள்ளது.
61 வயதில் மே.வங்க பாஜக EX எம்பி திலிப் கோஷ் திருமணம் செய்ய இருப்பது, அந்த மாநில அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. ஆர்எஸ்எஸ்-காரரான திலிப் கோஷ் திருமணம் செய்யக்கூடாது என உறுதியாக இருந்தார். தற்போது அந்த முடிவை கைவிட்டு, 51 வயதான தெற்கு கொல்கத்தா பாஜக மகளிர் அணி தலைவி ரிங்கு மஜூம்தாரை நாளை திருமணம் செய்கிறார். 2 பேரும் நடைபயிற்சியில் அறிமுகமாகியுள்ளனர். இதை திருமணமாக்க முடிவு செய்துள்ளனர்.
ஐரோப்பிய கிரிக்கெட் தொடரில் (T10) புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. சிவிட்டாவெச்சியா அணிக்கு எதிரான போட்டியில், மிலன் வீரர் ஜையின் நக்வி, வெறும் 26 பந்துகளில் சதம் விளாசினார். கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். 24 சிக்ஸர், 2 ஃபோர் என 37 பந்துகளில் 160* ரன்களை அடித்தார். 8, 10-வது ஓவர்களில் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசினார்.
தவெக கொடியில் இடம்பெற்றுள்ள யானை படத்துக்கு தடை கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில் கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது எனவும் கூறப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் ஏப்ரல் 29-ம் தேதிக்குள் தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
பெற்றோர் சம்மதம் இல்லாமல் ஓடிப்போய் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு, உண்மையான அச்சுறுத்தல் இல்லாதவரை, போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சம்மந்தபட்ட ஜோடிகள், இந்த சமூகத்தை எதிர்கொள்ள கற்றுக்கொள்ளவும் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. மேலும் உறவினர்களால் பாதிப்பு இல்லை எனக் கூறிய கோர்ட், பாதுகாப்பு கேட்ட ஜோடிகளுக்கு பாதுகாப்பை வழங்க மறுத்து உத்தரவிட்டுள்ளது.
அட்சய திரிதியையில் 5 ராசியினருக்கு பணமழை கொட்டும் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். கடக ராசியினருக்கு வெற்றி, விரும்பிய வேலை கிடைக்கும். தங்கம், வெள்ளி சேரும். மகர ராசியினருக்கு, லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் மூலம் புதிய வருமானம் கிடைக்கும். கும்ப ராசியினர் வியாபாரம், தொழிலில் லாபம் பெறுவர். ரிஷப ராசியினருக்கு வங்கியில் சேமிப்பு உயரும். துலாம் ராசியினர் புதிய சொத்துகள் வாங்குவர்.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள 21.16 ஏக்கர் நிலத்தை, TCS நிறுவனத்திற்கு 99 பைசாவிற்கு ஒதுக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு மாநிலத்திற்கு ₹1,370 கோடி முதலீட்டைக் கொண்டு வரும் எனவும், மேலும் 12,000 வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலத்தில் TCS நிறுவனம் புதிய IT வளாகத்தை அமைக்க உள்ளது.
இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,509 புள்ளிகள் உயர்ந்து 78,553 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50, 414.45 புள்ளிகள் உயர்ந்து 23,852 புள்ளிகளில் நிறைவு செய்தது. ஐடி பங்குகள் சரிவை சந்தித்தாலும், வங்கி, நிதிச்சேவை பங்குகள் ஏற்றம் கண்டன. ஜொமாட்டோ, சன் பார்மா, ICICI, ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்டவை அதிக லாபம் ஈட்டின.
9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதேபோல், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க.
நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் தான் 13 வருடங்களாக காதலித்து வந்த காதலரை கரம்பிடிக்க உள்ளதாகக் கூறி, அவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து கூடிய விரைவில் இவர்களது திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.