India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அக்டோபர் மாதத்தில் பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, IDBI வங்கி உள்ளிட்டவை கடனுக்கான MCLR விகிதத்தை 0.05 சதவீதம் வரை குறைத்துள்ளன. இதன் விளைவாக, இந்த வங்கிகளில் வீடு மற்றும் வாகன கடன் பெற்றவர்களின் மாதாந்தர தவணை (EMI) நவம்பர் மாதம் முதல் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

லிச்சென்ஸ்டீன் (Liechtenstein) சுவிட்சர்லாந்தின் நாணயத்தையே பயன்படுத்துகிறது. 38,000 பேர் மட்டுமே வசித்தாலும், தனிநபர் ஆண்டு வருமானம் சுமார் ₹1.75 கோடியாம். இது USA, ஜப்பானை விட அதிகம். வரி குறைவு என்பதால், பல முன்னணி நிறுவனங்களும் இங்கு தொழில் தொடங்குகின்றன. மேலும், உயர் கல்வி & தொழில்நுட்பத்தில் முன்னேற்றம், வலுவான வங்கித் துறை ஆகியவற்றால் ஐரோப்பாவின் 2-வது பணக்கார நாடாக லிச்சென்ஸ்டீன் உள்ளது.

சரிந்து கிடக்கும் மார்கெட்டை மீண்டும் உயர்த்தும் வேலையில் சூர்யா இறங்கியுள்ளார். தற்போது இந்திய சினிமாவில் சாமி- கமர்சியல் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அந்த லைனில்தான் ‘கருப்பு’ தயாராகியுள்ளது. அதை தொடர்ந்து, பான் இந்திய அளவில் கவனம் ஈர்த்த தெலுங்கு இயக்குநர் ‘லக்கி பாஸ்கர்’ வெங்கி அட்லூரி, மலையாள இயக்குநர் ‘ஆவேசம்’ ஜீத்து மாதவன் ஆகியோருடனும் கை கோர்க்கிறார். கம்பேக் கொடுப்பாரா சூர்யா?

சர்வதேச மோட்டார்ஷிப் சாம்பியன்ஷிப்பில் Ferrari காரை ஓட்டும் முதல் இந்திய பெண் என்ற பெருமையை புனேவை சேர்ந்த டயானா பூண்டோல்(32) நவம்பர் 2025 முதல் ஜனவரி 2026 வரை Middle East-ல் நடைபெறும் Ferrari Club Challenge தொடரில் அவர் பங்கேற்கிறார். Ex- ஸ்கூல் டீச்சரான டயானா, 2024-ல் the MRF Saloon Cars Championship தொடரில், நாட்டின் முன்னணி ஆண் ரேஸர்களை தோற்கடித்து பட்டம் வென்றிருந்தார்.

நெல் கொள்முதல் குறித்து அரசு பதிலளித்தாலும், எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், வட மாவட்டங்களில் 33 நாள்களாக நெல் கொள்முதல் நடைபெறவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கொள்முதல் சிறப்பாக நடைபெறுவதாக பேசும் CM-க்கு, இதுபற்றி தெரியவில்லையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வட மாவட்டங்கள் வேறு பகுதியில் இருப்பதாக CM நினைக்கிறார் போல என்றும் விமர்சித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் பாலால் அடிபட்ட இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழந்துள்ளார். மெல்போர்னில் உள்ள Ferntree Gully கிரிக்கெட் கிளப்பில் பென் ஆஸ்டின்(17), பயிற்சியில் ஈடுபட்டபோது, பவுலிங் மெஷின் வீசிய பால் அவரின் கழுத்தில் வேகமாக அடித்துள்ளது. ஆஸ்டின் ஹெல்மெட் அணிந்திருந்தபோதும், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், ஆஸ்டின் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு போராட்டம் வெடித்ததால் நாட்டை விட்டு வெளியேறி டெல்லியில் ஷேக் ஹசீனா அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில், டெல்லியில் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருப்பதாகவும், ஆனால் சொந்த நாட்டுக்கு திரும்ப ஆசைப்படுவதாகவும் கூறினார். மேலும், வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சிக்கு தடைவிதித்தது பெரும் அநீதி என்ற அவர், தேர்தல் நியாமான முறையில் நடக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

ரயில்வேயில் காலியாக உள்ள நான்-டெக்னிக்கல் (NTPC) பதவிகளில் 5,810 பணியிடங்களுக்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. அதன்படி சீனியர் கிளர்க், அசிஸ்டென்ட் ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நவ.20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 18-33 வயதிற்குள் இருக்க வேண்டும். இங்கே <

ரஜினி – கமல் இணையும் படத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள லோகேஷ் அடுத்து ‘கைதி 2’ படத்தை இயக்கவுள்ளார். அதே நேரத்தில், ரஜினி- கமலுக்காக எழுதிய ஸ்கிரிப்டை வீணடிக்க வேண்டாம் என KVN தயாரிப்பு நிர்வாகத்திடம் அந்த கதையை லோகேஷ் கூற, அவர்கள் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளனர். தற்போது, இந்த படத்தில் பவன் கல்யாண் மற்றும் பிரபாஸை நடிக்க வைக்கவும் முயற்சி நடந்து வருகிறதாம்.

அதிமுக உடைந்த பிறகு ஓபிஎஸ் – K.A.செங்கோட்டையன் மீண்டும் இணைந்துள்ளனர். அதிமுக இணைப்பு குறித்து EPS-க்கு எதிராக கலகக்குரல் எழுப்பிய செங்கோட்டையன், OPS & TTV-ஐ சந்தித்ததாக கூறப்பட்டது. ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், தேவர் குருபூஜை நாளான இன்று இருவரும் ஒன்றாக இணைந்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பசும்பொன்னுக்கு ஒரே காரில் சிரித்துக் கொண்டே OPS, KAS சென்றனர்.
Sorry, no posts matched your criteria.