India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலக பாரம்பரிய தினம் (ஏப்.18) என்பது நமது கலாச்சார பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது. இந்த நாள் சர்வதேச நினைவுச்சின்னங்கள் மற்றும் பாரம்பரிய இடங்களின் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் பெரிய கோயில், மகாபலிபுரம் கோயில், தாஜ்மஹால், அஜந்தா குகைகள், கோனார்க் சூரியக் கோயில் போன்ற அற்புதமான வரலாற்று நினைவுச்சின்னங்களை இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் RCB – PBKS இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேற முடியும். இதனால், இப்போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியம். ஆனால், சின்னசாமி ஸ்டேடியம் RCB-க்கு சொந்தமானது என்பதால், வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், PBKS வலுவாக இருப்பதால், சூழல் எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம்.
➤1912 – கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்.
➤2021 – கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலக அளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியது
➤1955 – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நினைவுநாள்
➤சிம்பாப்வேயில் விடுதலை நாள்
➤உலக பாரம்பரிய தினம்
வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருப்பது, இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராக உள்ளதாக சு.வெங்கடேசன் குற்றம் சாட்டினார். இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் முயற்சிப்பதாக கூறிய அவர், எதிர்காலத்தில் கிறிஸ்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினரின் சொத்துக்களையும் கைப்பற்றும் அபாயகரமான ஆரம்பமாகவும் இச்சட்டம் உள்ளது என விமர்சித்தார்.
“நாடோடிகள்” திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை அபிநயா தனது காதலர் கார்த்திக்-ஐ திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்தின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன் ❤️ பறக்க விடுகின்றனர்.
MI- SRH இடையேயான போட்டியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. MI-ன் SKY, SRH நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மாவின் பாக்கெட்டுகளை சோதனை செய்தார். சமீபத்தில் PBKS-க்கு எதிராக சதம் அடித்த பிறகு அபிஷேக் “THIS IS FOR ORANGE ARMY” என பேப்பரில் எழுதப்பட்ட வாசகத்தை காண்பித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதேபோல், எதுவும் எழுதி கொண்டு வந்திருக்கிறாரா என SKY சோதனை செய்தது, மைதானத்தில் சிரிப்பை ஏற்படுத்தியது.
▶‘பொய்’ சொல்லி தப்பிக்க நினைக்காதே, உண்மையை சொல்லி மாட்டிக்கொள்; ஏனென்றால் பொய் வாழவிடாது; உண்மை சாக விடாது. . ▶எழுந்து நில் ! விழித்தெழு ! இலக்கை அடையும் வரை நிறுத்தாதே ▶மனதிற்கும் மூளைக்கும் இடையேயான மோதலில், மனம் சொல்வதை கேளுங்கள் ▶ தன்னலமற்றவனாகவும் பொறுமையுடையவனாகவும் இருந்தால் வெற்றி உனது
பொன்முடி மீது CM ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும் என கூட்டணி கட்சி எம்பியான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். ஒரு பேராசியர் இப்படி மோசமாக பேசியிருக்க கூடாது. அவரின் கட்சி பதவியை மட்டும் பறித்தது பத்தாது என்பது பலரின் கருத்து. அது நியாயமான ஒன்றுதான். அதையே நானும் கூறுகிறேன் எனத் தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்பரம் பேச்சால் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமலின் ‘இந்தியன் 2’ திரைப்படம் படுதோல்வி அடைந்ததால், ‘இந்தியன் 3 ’ கிடப்பில் போடப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், திடீர் திருப்பமாக Lyca நிறுவனம் அப்படத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட சுபாஸ்கரன் இன்று மதியம் சென்னை வரவுள்ளார். இந்த சந்திப்பின்போது அன்பு & அறிவு இயக்கத்தில் ₹250 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள ‘KH 237’ படம் குறித்தும் கமல் பேச உள்ளாராம்
‘தமிழ்நாடு விண்வெளி கொள்கை 2025’ திட்டத்திற்கு CM ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் ₹10,000 கோடி அளவிலான முதலீடுகளை ஈர்க்க உள்ளதாகவும், தமிழ்நாட்டில் விண்வெளித் துறைக்கு தகுதியான பட்டதாரிகளையும், ஊழியர்களையும் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.