India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடைசியாக நடந்த 5 ODI போட்டிகளிலும் கோலி 50+ ரன்களை அடித்துள்ளார். இந்நிலையில், இன்றையை NZ-க்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தால், தொடர்ச்சியாக 6 ODI-களில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைப்பார். தற்போது சச்சின், டிராவிட், ரோஹித், ரஹானே ஆகியோருக்கு நிகராக கோலி இருக்கிறார். இந்த பட்டியலில் 9 முறை 50+ ரன்களை அடித்து PAK வீரர் ஜாவித் மியாண்டாட் முதலிடத்தில் உள்ளார்.

<<18833393>>அண்ணாமலை<<>> மும்பைக்கு வந்தால் கால்களை வெட்டுவேன் என ராஜ்தாக்கரே கூறியதை சீமான் கண்டித்துள்ளார். கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்கு பதிலாக கால்களை வெட்டுவேன் என கூறுவதை ஏற்க முடியாது எனவும், அண்ணாமலை தனி நபரல்ல, தமிழ்த்தேசிய இனத்தின் மகன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அரசியல், கொள்கை, கோட்பாடு அனைத்தையும் கடந்து தமிழ் இனத்தின் மகனாக அவருக்கு துணை நிற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பண்பாட்டு பெருவிழாவான பொங்கல் பண்டிகையை வரவேற்கும் திருநாளாக போகி பண்டிகை உள்ளது. பழையன கழிதலும், புதியன புகுதலுமாக நமது முன்னோர்கள் நமக்கு வழங்கியுள்ள இத்திருநாளில், பழைய துன்பங்கள் நீங்கி, புதிய தொடக்கத்தை தொடங்க Way2News வாசகர்களை வாழ்த்துகிறோம். அறுவடை திருநாளின் ஆரம்ப நாளில் அன்பு, சகோதரத்துவம், மனிதநேயம் பொங்கும் பொங்கலை வரவேற்போமாக.

இந்தியா Vs நியூசிலாந்து இடையே 2-வது ODI போட்டி இன்று பிற்பகல் 1:30 மணிக்கு நடைபெற உள்ளது. 3 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில், இன்றைய போட்டியிலும் வென்றால் தொடரை கைப்பற்றும். தொடரை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் நியூசிலாந்து இன்று கடுமையாக போராடும். எனவே பரபரப்பான ஆட்டத்திற்கு பஞ்சமிருக்காது. எந்த அணி வெல்லும் என நினைக்கிறீங்க கமெண்ட் பண்ணுங்க.

தெலங்கானாவில் சமீபத்தில் கிராம பஞ்சாயத்துக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் தெருநாய்களை கொல்வோம் என பல வேட்பாளர்கள் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர். தற்போது வெற்றி பெற்றதும், தெருநாய்களை பஞ்சாயத்து தலைவர்கள் தேடி தேடி கொன்று வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் 500 தெருநாய்கள் கொல்லப்பட்டதாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% கூடுதல் வரிவிதிக்கப்படும் என <<18842996>>டிரம்ப்<<>> அறிவித்துள்ளார். இதனால் இந்திய விவசாயிகள், அரசி ஏற்றுமதியாளர்கள் கடுமையான பாதிக்கப்படுவார்கள் என அஞ்சப்படுகிறது. ஈரான் அதன் மொத்த அரசி தேவையில், மூன்றில் இரண்டு பங்கை இந்தியாவிடம் வாங்குகிறது. ஏற்கனவே கடந்த 2 மாதங்களில் அனுப்பப்பட்ட அரிசிக்கான பணம் இன்னும் வந்து சேரவில்லை என ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

*போகி பண்டிகை. *1761 – 3-ம் பானிபட் போர் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது. இதில் ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. *1974 – திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. *1951 – ஓ. பன்னீர்செல்வம் பிறந்தநாள்.

T20WC: பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, இந்தியாவில் நடைபெறும் போட்டிகளை மாற்ற கோரிக்கை வைத்த வங்கதேசத்திற்கு ஐசிசி, ‘NO மாற்றமுடியாது’ என்று கூறியுள்ளது. போட்டி திட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதால் வங்கதேசம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும்படி ஐசிசி கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், விடாப்பிடியாக வங்கதேசம் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.

‘ஜனநாயகன்’ படம் தாமதமாக வந்தாலும், சரியான நேரத்தில் வெளியாகும் என நம்புவதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். தனது முதல் படத்தில் தொடங்கி தற்போதைய ‘வா வாத்தியார்’ வரையிலும் பல தடங்கலை கடந்தே படங்கள் வெளியாவதாகவும், ஒரு நல்ல கதை தனக்கு தேவையானதை தானே அமைத்துக் கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, நமது கட்டுப்பாட்டில் இல்லாதவை குறித்து கவலைப்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

*சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன. *புண்ணியமும், பாவமும் மனம், சொல், செயல் ஆகிய வழிகளில் நம்மை வந்தடைகின்றன. *எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் வியாபித்திருக்கிறார் என்று அறிதலே கடவுள் பக்தியாகும். *உண்மையைச் சொல் அது உனது மரியாதையை பாதுகாக்கும். *மனதை அடக்க நினைத்தால் அடங்காது. அதை அறிய நினைத்தால் அடங்கும்.
Sorry, no posts matched your criteria.