India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மனசு பாரமா இருக்கும் போது, கொஞ்சம் லேசாக்க ஃபீல் குட் படங்களை பார்த்து ரசிக்கலாம். அப்படி தற்போது OTT-யில் காலம் கடந்தும் பேசப்படும் சில ஃபீல் குட் படங்களை பட்டியலிட்டுள்ளோம். மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்து அந்த படங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த லிஸ்ட்டில் இன்னும் வேறு எந்த படங்களை சேர்க்கலாம்.. கமெண்ட் பண்ணுங்க?

தங்கம் விலை <<18146662>>காலையில்<<>> சவரனுக்கு ₹1,800 குறைந்திருந்த நிலையில், மாலை நேர வர்த்தகத்தில் ₹1,600 அதிகரித்துள்ளது. தற்போது 22 கேரட் 1 கிராம் ₹11,300-க்கும், சவரன் ₹90,400-க்கும் விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது, இ<<18150226>>ந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை<<>> சந்தித்தது உள்ளிட்ட காரணங்களே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா கூறிவருகிறார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவம், வீட்டு வாடகை என பல செலவுகள் இருப்பதாகவும், இதற்காக மாதம் ₹6,50,000 பராமரிப்பு தொகை தேவைப்படுவதாகவும் ஜாய் தெரிவித்துள்ளார். இதனை ரங்கராஜ்தான் வழங்கவேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.

செல்போன் பயனர்களுக்கு SPAM மற்றும் மோசடி அழைப்புகள் பெரிய தொல்லையாக உள்ளது. எனவே, யார் அழைக்கிறார்கள் என அறிய True Caller போன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால், இனி அதன் தேவை இருக்காது. காரணம், TRAI மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம் இணைந்து புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம், Save செய்யாத எண்களிலிருந்து அழைப்பு வந்தால், சிம் பதிவுசெய்யப்பட்ட பெயர் திரையில் காண்பிக்கப்படும்.

TN அரசியலில் சீமானுக்கும் வைகோவுக்கும் மோதல் இருப்பதாக அவ்வப்போது பேசப்படுவது வழக்கம். ஆனால், இவர்கள் இருவரும் ராமநாதபுரத்தில் ஒன்றாக பேட்டியளித்த சம்பவம் கவனத்தை பெற்றுள்ளது. தேவருக்கு மரியாதை செலுத்திய பின் பேட்டியளித்த சீமான் வைகோ காத்துக்கொண்டிருந்ததை பார்த்தார். தனது பேட்டியை நிறுத்திவிட்டு வைகோவுக்கு வழிவிட, இச்சம்பவம் நிகழ்ந்தது. சமீபத்தில் கூட அப்போலோவில் வைகோவை சீமான் சந்தித்திருந்தார்.

பிஹார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, PM மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முசாபர்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஊழலில் திளைத்துபோன குடும்பத்தின் இளவரசர்களான ராகுல், தேஜஸ்வி தான், தேர்தல் களத்தில் தங்களுக்கு எதிரே நிற்பதாக குறிப்பிட்டார். இருவரும் தன்னை திட்டிக்கொண்டே இருப்பதாக கூறிய அவர், ‘பெயருக்காக’ வாழும் அவர்களிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்று விமர்சித்துள்ளார்.

OPS, செங்கோட்டையன், டிடிவி ஆகியோரின் சந்திப்பு திட்டமிட்டது என EPS கூறியுள்ளார். அவர்கள் திமுகவின் B டீம் என விமர்சித்துள்ள அவர், செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை என்றார். அதிமுகவில் இருந்த சில துரோகிகளால்தான் 2021 தேர்தலில் மீண்டும் ஆட்சியை அமைக்க முடியவில்லை என்ற அவர், அந்தியூரில் அதிமுகவின் தோல்விக்கு செங்கோட்டையனும் ஒரு காரணம் என சாடினார்.

மகளிர் ODI WC அரையிறுதி போட்டியில், ஆஸி.,க்கு எதிரான ஆட்டத்தில், இந்தியா முதலில் பவுலிங் செய்ய உள்ளது. டாஸ் வென்ற ஆஸி., அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி, நவ.2-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ளும். இந்திய அணி இதுவரை 2005, 2017 என 2 முறை உலகக்கோப்பை ஃபைனலுக்குள் நுழைந்துள்ளது.

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையின் போது, OPS, சசிகலா, செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்து பேசியது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. OPS, செங்கோட்டையன், TTV தினகரன் ஆகியோரும் சந்தித்து பேசியதோடு, புதிய கூட்டணி அமையும் என்றனர். ஒன்றிணைப்பு விவகாரத்தில் அமைதியாக இருந்த செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவை சந்தித்துள்ளதால் அவரும் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் சமூக, அரசியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய உயர்ந்த ஆளுமை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என PM மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நீதி, சமத்துவம் மற்றும் ஏழைகளின் நலனுக்கான தேவரின் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது எனவும், வரும் தலைமுறைகளுக்கு அது ஊக்கமளிக்கும் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும் தேவர், ஆன்மீகத்தின் வழியில் கண்ணியம், ஒற்றுமை & சுயமரியாதைக்காக நின்றவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.