India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஒரு பிரச்னை என்றதும், சம்பவ இடத்துக்கு இரவோடு இரவாக செல்லும் பழக்கம் கொண்டவர் CM ஸ்டாலின் என அப்பாவு தெரிவித்துள்ளார். ஆனால் விஜய்யோ இந்த நேரம் தூங்கி இந்த நேரம் எழ வேண்டும், இவ்வளவு தூரம்தான் பயணிக்கணும் என ஷெட்யூல் வைத்து அரசியல் செய்பவர் என பேசியுள்ளார். கரூர் துயரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை விஜய் சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறியது அரசியலில் ஒரு கரும்புள்ளி எனவும் கடுமையாக சாடினார்.

கடந்த சில நாள்களாக மளமளவென சரிந்து வந்த தங்கம் விலை இன்று(அக்.29) திடீரென உயர்வை கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹135 உயர்ந்து ₹11,210-க்கும், சவரன் ₹1,080 உயர்ந்து ₹89,680-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் குறைந்து வரும் நிலையிலும், நம்மூர் சந்தையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்வை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தகங்களை மையமாக கொண்டு படம் எடுப்பது என்பது சாதாரணம் விஷயமல்ல. காரணம் புத்தகம் படிப்பவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் கற்பனைக்கு ஏற்றார்போல அந்த கதைக்கு வடிவம் கொடுத்திருப்பர். அந்த கற்பனைகளுக்கு உருவம் கொடுத்து, மையக்கருவையும் மாற்றாமல் படமாக எடுத்து ஜெயிப்பது கடினமான விஷயம். அப்படி தமிழ் நாவல்களை மையமாக வைத்து, நமது தமிழ் இயக்குநர்கள் எடுத்த சில படங்களை பற்றி அறிய மேலே SWIPE பண்ணி பாருங்க.

சென்னை தி.நகரில் உள்ள நடிகர் பிரபு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், போலீசார் குவிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது. அதேபோல் அமெரிக்க துணை தூதரகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக CM ஸ்டாலின் தொடங்கி, EPS, ரஜினி, விஜய் என பல பிரபலங்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர் கதையாகி வருகிறது.

மனிதர்களுடன் நாம் செலவழிக்கும் நேரம் குறைத்து செல்போன், கணினி உள்ளிட்டவற்றுடன் கடத்தும் நேரம் அதிகரித்துள்ளது. மனித உரையாடல்கள் குறையும் போது வாழ்க்கையின் மீது நம்பிக்கை இழக்கும் இளம் தலைமுறைக்கு தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கின்றன. இதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு வாரமும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை தொடர்பான உரையாடல்களை, ChatGPT-யிடம் நடத்துவதாக அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது.

கருத்தாழமிக்க எளிய தமிழ் சொற்களை பாடல்களில் அமைத்து, அழியா புகழ் பெற்ற கவிஞர் வாலிக்கு இன்று பிறந்தநாள். சினிமா பாடல்களில் அவரின் முத்திரை இல்லாத இடமே இல்லை எனலாம். ‘மின்வெட்டு நாளில் இங்கு, மின்சாரம் போல வந்தாயே’ என்ற வரிகளை எழுதிய போது வாலிக்கு வயது 81. அவருக்குள் காதலும், எழுத்தும் கொஞ்சமும் குறையவில்லை என்பதற்கு இந்த வரிகள் சிறந்த எடுத்துகாட்டு. வாலியின் வரிகளில் உங்களை கவர்ந்தது எது?

ஆடம்பரம் என்பது வெறும் டிசைனர் ஆடைகளை அணிவதோ ஆடம்பரமான காரை வைத்திருப்பதோ மட்டுமல்ல. Handbag-களும் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. அப்படி, உலகின் மிகவும் விலையுயர்ந்த டாப் 6 Handbag-களின் பட்டியலை மேலே கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என அறிய, போட்டோவை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். இவற்றின் விலைக்கு சென்னையில் ஒரு வீடே வாங்கிவிடலாம், ஆனால் பணக்காரர்கள் கையில் தொங்கவிட்டபடி செல்வார்கள்.

OPS அணியின் மாநில மருத்துவ அணி செயலாளர் Dr.கிருத்திகா, நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். NDA கூட்டணியிலிருந்து விலகிய பிறகு OPS தனது அரசியல் முடிவு குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால், அவரது செயல்பாடுகள் திமுகவுக்கு ஆதரவாக இருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில், அவரது அணியை சேர்ந்த பலரும் அதிமுக, திமுக, பாஜக என பல கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

பைசன் படம், அனுபமா பரமேஸ்வரனுக்கு தமிழ் சினிமாவில் புதிய அடையாளத்தை கொடுத்துள்ளது. தனக்கு மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குநருக்கு ஏற்கெனவே அனுபமா நன்றி தெரிவித்திருந்தார். இதனிடையே பைசன் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட போட்டோஸை இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்துள்ளார். இதற்கு, கதையோடு ஒன்றி உறவாடிய அவரின் அர்ப்பணிப்பு போட்டோக்களில் வெளிப்படுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறனர்.

உலக சந்தையில் கடந்த 17-ம் தேதி புதிய உச்சமாக $4,379-க்கு விற்பனையாக 1 அவுன்ஸ் தங்கம் இன்று $3,942 ஆக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை குறைப்பின் தாக்கத்தால் இந்திய சந்தையில் கடந்த 10 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹10,000 குறைந்துள்ளது. குறிப்பாக, USA சந்தையில் தற்போதைய நிலவரப்படி $63 குறைந்துள்ளது. அதனால், நம்மூரிலும் இன்று தங்கம் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.