India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஜனவரியில் PM மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் அவர், நயினாரின் யாத்திரை நிறைவு விழாவிலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பூந்தமல்லி – போரூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை அடுத்த மாதம் PM மோடி தொடங்கி வைக்கவுள்ளாராம். இந்நிகழ்ச்சியில் CM ஸ்டாலினும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

வரும் 18-ம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பங்கேற்கும் தவெக தொண்டர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. *குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்படுவர். *கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்களுக்கு அனுமதி இல்லை. *விஜய்யின் வாகனத்தை பின் தொடர கூடாது. *மரங்கள், மின் கம்பங்களில் ஏறக்கூடாது. *உரிய அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்க கூடாது.

‘ஜனநாயகன்’ படத்தின் 2-ஆவது பாடல் வரும் 18-ம் தேதி வெளியாக உள்ளது. நேற்று வரையிலான பேரமைதி, 18-ம் தேதி பெரும் புயலுக்கான முன்னோட்டம் என குறிப்பிட்டு, தயாரிப்பு நிறுவனம் இதை அறிவித்துள்ளது. ஈரோட்டில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நடைபெறும் அதே நாளில், இப்பாடல் வெளியாக உள்ளது. முன்னதாக, இப்படத்தின் முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’ சமீபத்தில் வெளியாகி, பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான ED-ன் குற்றப்பத்திரிக்கையை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட் நிராகரித்துள்ளது. ED குற்றம்சாட்டுவது போல் இந்த பணமோசடி வழக்கு எந்த விசாரணை அமைப்பின் FIR அடிப்படையிலும் நடத்தாமல், தனியார் (சுப்ரமணியன் சுவாமி) அளித்த புகாரின் அடிப்படையிலானது என கூறி
வழக்கை விசாரிக்க கோர்ட் மறுத்துள்ளது. இதை குறிப்பிட்டு நீதி வென்றதாக காங்., தெரிவித்துள்ளது.

உலகின் அழகான பெண்கள் கொண்ட நாடுகளின் பட்டியலை World of Statistics வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா 12-வது இடத்தை பிடித்துள்ளது. மேலே, டாப் 10-ல் இடம்பிடித்த நாடுகளை, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு எந்த நாட்டு பெண்களை பிடிக்கும்? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.

உத்தரப்பிரதேச உள்ளூர் போட்டிகளில் விளையாடிவரும் பிரசாந்த் வீர்(20) என்ற இளம் வீரரை ₹14.2 கோடிக்கு மினி ஏலத்தில் சிஎஸ்கே வாங்கியுள்ளது. ஜடேஜாவை டிரேட் மூலம் ராஜஸ்தான் அணிக்கு கொடுத்த நிலையில், அவரது இடத்திற்கு ஆல் -ரவுண்டர் பிரசாந்த் வீரை சிஎஸ்கே வாங்கியுள்ளது. இதேபோல், ராஜஸ்தானை சேர்ந்த விக்கெட் கீப்பர் கார்த்திக் சர்மாவையும்(19) ₹14.2 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியுள்ளது.

<<18573575>>100 நாள் வேலைத்திட்டத்திற்கு<<>> பதிலாக, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட VB-G RAM G மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந்நிலையில், இதற்கு NDA கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த புதிய மசோதாவால், மாநிலங்களுக்கு அதிக நிதி சுமை ஏற்படும், நிதிப் பற்றாக்குறை அதிகம் உள்ள ஆந்திராவிற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கவலை தெரிவித்துள்ளது.

✱BSF, CISF, CRPF, ITBP உள்ளிட்ட படைப் பிரிவுகளில் உள்ள 25,487 பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✱கல்வித்தகுதி: 10- வது தேர்ச்சி ✱வயது: 18 – 23 ✱தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்படும் ✱சம்பளம்: ₹21,700 – ₹69,100 ✱விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.31 ✱விண்ணப்பிக்க <

IPL மினி ஏலத்தில், WI ஆல்-ரவுண்டர் அகீல் ஹோசனை ₹2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. ஜடேஜாவின் இடத்தை நிரப்புவதற்கு ஒரு சிறந்த ஆல்-ரவுண்டரை தேடிய CSK, தற்போது அகீல் ஹோசனை அவரது அடிப்படை ஏலத்தொகைக்கு பெற்றுள்ளது. முன்னதாக, ரவி பிஷ்னோயையும் வாங்க CSK முனைப்பு காட்டியது. ஆனால் ₹5 கோடிக்கு பிறகு, ஏலம் கேட்பதை நிறுத்திக்கொண்டது. CSK-வின் இந்த தேர்வு சரியானதா? கமெண்டல சொல்லுங்க

கொல்கத்தாவில் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட விவகாரத்தால், மே.வங்க விளையாட்டுத் துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் எனக் குறிப்பிட்டு திரிணாமூல் காங்., மூத்த தலைவர் குணால் கோஷ் இந்த தகவலை SM-ல் வெளியிட்டுள்ளார். தவறான நிர்வாக மேலாண்மை காரணமாகவே, மெஸ்ஸி நிகழ்ச்சியில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதாக புகார் எழுந்திருந்தது.
Sorry, no posts matched your criteria.