India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IPL தொடரில் SRH அணிதான் முதலில் 300 ரன்களை விளாசும் என தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. ஆனால், உண்மை என்னவோ வேறு மாதிரியாக உள்ளது. MI vs SRH அணிகளின் மேட்ச்சுக்கு முன்னர், டேல் ஸ்டெய்ன், SRH இந்த போட்டியில் 300 ரன்களை விளாசும் என பதிவிட்டார். மேட்ச்சுக்கு பிறகு, MI வெளியிட்டுள்ள பதிவில், ‘டேல் ஸ்டெய்ன் சொன்னது போல 328 ரன்கள் எடுத்தது (இரு அணிகளின் ரன்களையும் சேர்த்து) என கலாய்த்துள்ளது.
தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு *சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள் *தூய இதயத்தோடு இருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் *உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுக்கொடு.
விதை மற்றும் வெஜிடெபிள் எண்ணெய்களை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் இந்த எண்ணெய்களில் இருக்கும் Linoleic acid என்ற ஒமேகா-6 Fatty acid மார்பகப் புற்றுநோயை 3 மடங்கு வரை அதிகரிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாகவே எண்ணெய் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது தானே!
கொலை மிரட்டல், பண மோசடி உள்ளிட்ட புகார்களில் சிக்கிய திமுக நிர்வாகி பி.தியாகராஜன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்த தியாகராஜன் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வர்த்தகர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளர்களாக இருந்த சக்கரவர்த்தி, தணிகைவேல் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள அண்ணா யுனிவர்சிட்டிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் கிடைத்ததும் மோப்ப நாய் உதவியுடன் அங்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் சல்லடை போட்டு சோதனையிட்டனர். இறுதியில் வெறும் புரளி என தெரியவந்தது. இமெயிலில் மிரட்டல் விடுத்த நபர் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாகவும், அவர் மீண்டும் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் தினமாகவும் கடைப்பிடிக்கிறோம். புனித வெள்ளியில் (Good Friday) இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவைச் சாவையும் நினைவுகூர்கிறோம். பகைவர்களை நேசிக்க சொன்ன இயேசு கிறிஸ்து, மனித குலத்தின் பாவங்களை மன்னிப்பதற்காக சிலுவையில் அறையப்பட்டார்.
MI-க்கு எதிரான மேட்ச்சில் தோற்று, SRH மிக மோசமான ரெக்கார்ட்டை படைத்துள்ளது. வெளி கிரவுண்டில் (கொல்கத்தா, விசாகப்பட்டினம், மும்பை) நடைபெற்ற ஒரு போட்டியிலும் SRH வெல்லவில்லை. வென்ற 2 போட்டிகளும் ஹைதராபாத்தில் நடைபெற்றது தான். மற்ற அனைத்து அணிகளுமே வெளி கிரவுண்டில் ஒரு வெற்றியை பதிவு செய்து விட்டன. பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் ஹைதராபாத்தில் ரன் குவிக்கும் SRH, மற்ற கிரவுண்டில் சோதப்புவது ஏன்?
யுஜிசி நெட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் உதவி பேராசிரியர், JRF, PhD சேர்க்கை ஆகியவற்றுக்கான தகுதித் தேர்வான இது வருடத்திற்கு இருமுறை (ஜூன், டிசம்பர்) மாதத்தில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ஜூன் 2025 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மே 7-ம் தேதி வரை <
‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்ட விரிவாக்க அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புதிதாக விண்ணப்பிக்கும் நபர்கள் இ-சேவை மையங்களிலும், ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்க வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உலக பாரம்பரிய தினத்தையொட்டி இன்று (ஏப்.18) மாமல்லபுரத்தை சுற்றுலாப் பயணிகள் இலவசமாக சுற்றிப் பார்க்கலாம். உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புராதன சின்னங்களை எவ்வித கட்டணமுமின்றி சுற்றிப் பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..
Sorry, no posts matched your criteria.