news

News October 30, 2025

சமத்துவத்துக்காக தேவர் செய்த அர்ப்பணிப்பு: PM மோடி

image

இந்தியாவின் சமூக, அரசியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய உயர்ந்த ஆளுமை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என PM மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நீதி, சமத்துவம் மற்றும் ஏழைகளின் நலனுக்கான தேவரின் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது எனவும், வரும் தலைமுறைகளுக்கு அது ஊக்கமளிக்கும் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும் தேவர், ஆன்மீகத்தின் வழியில் கண்ணியம், ஒற்றுமை & சுயமரியாதைக்காக நின்றவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News October 30, 2025

சம்பளம், பென்ஷன் உயரும்… HAPPY NEWS

image

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும், ஓய்வூதியமும் ஜனவரி 1, 2026-ல் இருந்து உயரவுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆலோசிக்க 8வது ஊதியக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் படி, 2.86 Fitment Factor அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்படலாம். உதாரணத்திற்கு, உங்களுடைய சம்பளம் ₹18 ஆயிரமாக இருந்தால் ₹51 ஆயிரம் வரை உயரலாம்.

News October 30, 2025

90 நிமிடங்கள் ஒன்னுமே செய்யாமல் இருக்க முடியுமா?

image

90 நிமிடங்கள் பேசாமல், போன் நோண்டாமல், தூங்காமல் சும்மா உட்கார்ந்துட்டு இருந்தால், நீங்கதான் வெற்றியாளர். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தாங்களே ‘ரீசார்ஜ்’ செய்து கொள்ள தென்கொரியாவில் ‘Space Out’ என்ற போட்டி நடத்தப்படுகிறது. கொஞ்சம் சும்மா இருந்தாலும், Over thinking-ஆல் பலருக்கும் நெகட்டிவ் எண்ணங்கள் தோன்றும். அதனை வெல்வதே இப்போட்டியின் நோக்கம். போட்டிக்கு யார் ரெடி?

News October 30, 2025

பெண்களுக்கு ₹1.40 லட்சம் தரும் அரசு திட்டம்

image

பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு சுயதொழில் தொடங்க ₹1.40 லட்சம் வரை மகிளா சம்ரிதி யோஜனா திட்டம் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனை 3.5 ஆண்டுக்குள் திருப்பி செலுத்தினால் போதும். கடன் பெற விரும்புவோரின் ஆண்டு குடும்ப வருமானம் ₹3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. பல பெண்களின் வாழ்க்கையை உயர்த்தும், SHARE THIS.

News October 30, 2025

கரூர் துயரத்திற்கு பின் விஜய்யின் முதல் PHOTO

image

சமூக ஒற்றுமைக்காக தன்னை அர்ப்பணித்த உன்னத மனிதர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி விழாவையொட்டி, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில், முத்துராமலிங்க தேவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். கரூர் துயர சம்பவம் தொடர்பான வீடியோவுக்கு பிறகு முதல் முறையாக அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது.

News October 30, 2025

அரையிறுதியை அச்சுறுத்துமா மழை?

image

உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணிக்கும் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கும் இடையேயான அரையிறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் நவி மும்பை மைதானத்தில் மாலை 3 மணி அளவில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 20% உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அது இரவில் வெறும் 4% ஆக குறையும் என்றும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மழை பாதிப்பு இருக்காது என்ற நிலையே உள்ளது. இன்று இந்திய அணி வெற்றி பெறுமா?

News October 30, 2025

BREAKING: கூட்டணியை அறிவித்த டிடிவி, ஓபிஎஸ்

image

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதிமுக ஆட்சியை அமைக்க வேண்டும் என பசும்பொன்னில் OPS, TTV, செங்கோட்டையன் ஒன்றாக சபதம் ஏற்றுள்ளனர். மேலும், புதிய கூட்டணியை உருவாக்கவுள்ளதாக அறிவித்த TTV, சசிகலா எப்போதும் எங்களுடன் தான் இருப்பார்; காலதாமதத்தால் எங்களுடன் சேர்ந்து அவரால் இங்கு வரமுடியவில்லை. துரோகத்தை வீழ்த்த வேண்டும் என்பதால் 3 பேரும் ஒன்றாக இணைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

News October 30, 2025

ஒன்றாக இணைந்தனர் OPS, KAS, TTV

image

பசும்பொன் நினைவிடத்தில் தேவருக்கு டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக இணைந்து மரியாதை செய்தனர். குறிப்பாக, மூன்று பேரும் ஒன்றாக இணைந்துவிட்டோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில், மூன்று விதமான மாலைகளை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின் ஒன்றாக இணைந்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர். இன்னும் சற்றுநேரத்தில் 3 பேரும் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர்.

News October 30, 2025

TN-ஐ போல, கேரளாவிலும் மகளிருக்கு ₹1000!

image

தமிழகத்தின் நலத்திட்டங்கள், பல மாநிலங்களுக்கும் உதாரணம். அப்படி, TN-ஐ போல கேரளாவிலும் மகளிருக்கு ₹1000 வழங்கப்படும் என CM பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அரசின் எந்த திட்டத்திலும் பயனாளியாக இல்லாத மகளிர், திருநங்கைகள் 31.34 லட்சம் பேருக்கு இந்த தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, இளைஞர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் ₹1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 30, 2025

அறுவைச் சிகிச்சையில்லா புற்றுநோய் சிகிச்சை!

image

புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சையில்லாத அதிசய சிகிச்சையை US விஞ்ஞானி சென் சூ கண்டறிந்துள்ளார். பன்றி இதய திசுக்களில் ஆய்வு செய்து கொண்டிருந்த அவர், எதேச்சையாக Ultrasound-ன் துடிப்பினை மாற்றியபோது, திசுக்கள் நொறுங்கியுள்ளன. அவரின் இந்த தற்செயலே தற்போது ‘Histotripsy’ என்ற கல்லீரல் புற்றுநோய் சிகிச்சை முறையாக மாறியுள்ளது. தற்போது சிறுநீரகம், மார்பகம், மூளை புற்றுநோய்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!