India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IPL-ல் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதியின்படி, பந்து பேட்டில் படுவதற்கு முன், கீப்பரின் Gloves ஸ்டம்புக்கு முன்னால் இருந்தால், அது ‘No-ball’. இந்த விதியின் படி, நேற்று MI-யின் ரிக்கெல்டன் கேட்ச் கொடுத்து அவுட்டான போதும், ‘No-ball’ பெற்று தப்பித்தார். SRH-ன் கிளாசனின் Gloves ஸ்டம்புக்கு முன்னால் இருந்தது. இது நியாயமானது கிடையாது என பலரும் விமர்சிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலிய பிரதமர் மெலோனியை புகழ்ந்து தள்ளியது உலக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. வரி விதிப்புக்குப் பின் அமெரிக்கா சென்ற மெலோனி டிரம்ப்பை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மெலோனியை தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியதுடன், இத்தாலியின் சிறந்த பிரதமர் என அடுக்கடுக்காக பாராட்டினார்.
தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்று (ஏப்.18) கிராமுக்கு₹25 உயர்ந்ததால் 1 கிராம் ₹8,945-க்கும், சவரன் ₹71,560-க்கும் விற்பனையாகிறது. கடந்த 1-ம் தேதி ஒரு கிராம் ₹8,510-க்கு விற்பனையான நிலையில், 18 நாள்களில் கிராமுக்கு ₹435 அதிகரித்துள்ளது. இது வரும் நாள்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இமயமலை மானசரோவர் யாத்திரை செல்லும் 500 பக்தர்களுக்கு அரசு வழங்கும் மானியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை வழங்கப்பட்டு வந்த ₹50,000 மானியம் இனி ₹1 லட்சமாக உயர்த்தப்படும் என பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அதே போல், நேபாளம், முக்திநாத் ஆன்மிக பயணத்திற்கான அரசு மானியம் ₹20,000–த்தில் இருந்து ₹30,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப்.18) சவரனுக்கு ₹200 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் ஒரு கிராம் ₹8,945-க்கும், சவரன் ₹71,560-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹110-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,10,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் நகைப் பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க..
இந்த போட்டோ உங்களை உலுக்காமல் இருக்காது. இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்த காசா சிறுவனின் போட்டோ தான் World Press Photo of the Year 2025 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனிய புகைப்படக் கலைஞர் சமர் அபு எலுஃப் எடுத்த போட்டோவில், 2 கைகளையும் இழந்து, முகத்தில் ‘எப்போது இந்த கொடுமை தீருமோ’ என நீங்காத சோகத்துடன் சிறுவன் அமர்ந்திருக்கிறான். உலகின் எதிர்காலத்தை போர்கள் இருட்டில் ஆழ்த்தி விடுகின்றன.
ரோஹித் ஓய்வு பெறப்போகும் நேரத்தில், ரசிகர்களுக்கு மறக்கமுடியாத தருணங்களை கொடுக்க வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார். IPL 2025-ல் ரோஹித்தின் பெர்ஃபாமன்ஸ் சீரானதாக இல்லை எனவும், அவர் பெரிய இன்னிங்ஸ் ஆட தவறுகிறார் என்றும் சேவாக் கூறினார். நடப்பு IPL தொடரில் இதுவரை ரோஹித் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது வருத்தமான விஷயமே. Retire ஆவதற்கு முன், ரோஹித் மிரட்டலான ஒரு இன்னிங்ஸை ஆடுவாரா?
முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுத, மே 7-ம் தேதி வரை <
அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்படக் கூடாது என CM ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தின்போது பொதுவெளியில் பேசும்போது மிகவும் கவனமாகப் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மூத்த அமைச்சர்கள் <<16019356>>துரைமுருகன்<<>>, <<16061152>>பொன்முடி<<>> ஆகியோர் அண்மையில் பொதுவெளியில் மாற்றுத்திறனாளிகள், சைவம், வைணவம், பெண்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது.
பிரபல தொழிலதிபரான சுப்பையா வி ஷெட்டி (92) மாரடைப்பால் காலமானார். கர்நாடகாவை சேர்ந்த இவர் மும்பையில் உள்ள ராமகிருஷ்ணா ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், உடுப்பி ஹோட்டல்கள் தொடங்கி ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியதோடு பல லட்சம் பேருக்கு கல்வி உதவியை செய்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏழைப் பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்துள்ளார். #RIP
Sorry, no posts matched your criteria.