India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக பலியானோரின் எண்ணிக்கை தற்போது 5ஆக உயர்ந்துள்ளது. வேளச்சேரியில் சூறைக்காற்றால் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த சக்திவேல் என்பவர் மரணமடைந்தார். மண்ணடியில் ATM-ல் பணம் எடுக்க சென்ற வடமாநில இளைஞர் ஒருவர், வியாசர்பாடியைச் சேர்ந்த இசைவாணன் என்பவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், அரக்கோணத்தை சேர்ந்த 9 வயது சிறுவனும் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
நாடு முழுவதும் JIO நெட்வாெர்க் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JIO சிம் பயனாளர்களால் இன்று மாலை முதல் அவுட்கோயிங் அழைப்பு மேற்கொள்ளவோ, இணையதள சேவையை பயன்படுத்தவோ முடியவில்லை எனக் கூறப்படுகிறது. உங்கள் பகுதியில் JIO நெட்வொர்க் சேவை கிடைக்கிறதா? கீழே உங்கள் கமெண்ட்ஸ் பதிவிடுங்கள்.
திருவண்ணாமலை, மலையடிவாரம் வ.உ.சி., நகரில், தொடர் கனமழையால், 3 வீடுகள் பூமிக்குள் புதைந்துள்ளன. அந்த வீடுகளில் பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 7 பேர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். புதைந்த வீடுகளுக்கு மேல் பெரிய பாறை ஒன்று உருளும் நிலையில் உள்ளதால், மீட்புப் பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து கோவை திரும்பிய அண்ணாமலை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றார். அவர் பேசுகையில், நான் லண்டன் சென்று திரும்பிய 3 மாதக்காலத்தில் ஒரு SUCCESSFUL ACTOR அரசியலுக்கு வந்திருக்கிறார். ஒரு FAILED ACTOR துணை முதல்வர் ஆகிவிட்டார். 10 அரசியல் தலைவர்களின் ஃபோட்டோக்களை வைத்தால் யாரும் விமர்சிக்க மாட்டார்கள் என நினைத்து, ஒரு புது அரசியல் கட்சி வந்திருக்கிறது என பேசினார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் PAK வென்றது. புலவாயோ நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய PAK 165/4 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் உஸ்மான் கான், தயப் தாஹிர் ஆகியோர் தலா 39 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து விளையாடி ZIM அணி, பாக். பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல்
108 ரன்களில் ஆட்டமிழந்தது. தயப் தாஹிர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுகளை மதிப்பதில்லை என்று CM ஸ்டாலின் கூறினார். இதற்கு பதிலளித்துள்ள இபிஎஸ், பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில், மக்கள் பிரச்சனையை உரிய நேரத்தில் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம். உரிய முறையில் செயல்பட்டு பிரச்சனையை தீர்ப்பது அரசின் கடமை. ஆனால், இங்கிருக்கிற முதலமைச்சரோ, பிரச்சனையை தீர்க்க முடியாத, கையாலாகாத, திராணியற்ற முதலமைச்சர் என இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
ஃபெஞ்சல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்துள்ளதாக வானிலை மையம் (MET) தெரிவித்துள்ளது. காலையில் புயலாக இருந்த நிலையில், பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்தது. இந்நிலையில், தற்போது தாழ்வு மண்டலமாக குறைந்து உள்ளதாகவும், விழுப்புரத்தில் இருந்து அது 20 கி.மீ., புதுச்சேரியில் இருந்து 30 கி.மீ., கடலூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருப்பதாக MET குறிப்பிட்டுள்ளது.
மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏ நரேஷ் பல்யானுக்கு போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. ரவுடி கபில் சாங்வான் என்பவரிடம், கட்டுமானப் பணி மேற்கொள்ளும் ஒருவரை மிரட்டி, தனக்கு பணம் பறித்து தருமாறு அவர் பேசிய ஆடியோ வெளியானது. இந்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட அவரை, 2 நாள் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
கன்னட நடிகை சோபிதா சிவானா (30) தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சாலேஸ்பூரை சேர்ந்த அவர், திருமணத்திற்கு பிறகு ஹைதராபாத்தில் 2 ஆண்டுகளாக தங்கியிருந்து வாய்ப்பு தேடி வந்தார். இந்நிலையில் ஹைதராபாத் வீட்டில் சடலமாக கிடந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கன்னட மொழியில் ஏடிஎம், ஜேக்பாட் உள்ளிட்ட படங்களில் சோபிதா நடித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புயல் காரணமாக பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்வது, மின்சாரம் துண்டிப்பு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் மின்சார வாரியத்தின் உதவிக்கு என்ன செய்வது என சிலருக்குத் தெரியாமல் இருக்கும். அவர்களுக்கு மின்சார வாரியம் உதவி எண்ணை அறிவித்துள்ளது. 94987 94987 என்ற எண்ணை பதிவிட்டு, உதவி தேவையெனில் அழைக்கவும் என மின்சார வாரியம் கூறியுள்ளது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.