India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து மேற்கு மாவட்டங்களை நோக்கி நகர்கிறது. இதனால், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் கோவையில் கல்வி நிலையங்கள் செயல்படவுள்ளன. <<14765603>>விடுமுறை மாவட்டங்களை இங்கு பார்க்கலாம்.<<>>
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிகனமழை கொட்டித் தீர்த்துள்ளது. ஏற்கெனவே பெய்த கன மழையால் பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில், மறு தேர்வு தேதி அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பகல் இரவு ஆட்டமாக நடைபெறவுள்ள 2-வது BGT போட்டி மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. முதல் போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்திய அணி, எந்தெந்த மாற்றங்களை செய்யும் என்பதே கேள்விக்குறி. கேப்டன் ரோஹித் சர்மா உள்ளே வருவதால், டாப் ஆர்டர் நிச்சயமாக மாறும். அதே போல, கில் வலைப்பயிற்சிக்கு திரும்பி விட்டதால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். டீமில் யார் யார் இருக்க போறாங்க…நீங்க சொல்லுங்க?
திருவண்ணாமலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகரில் பாறை உருண்டு மண் சரிந்து வீட்டில் சிக்கியவர்கள் குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அந்த வீட்டில் வசித்துவந்த 7 பேரும் வீட்டின் உள்ளே சிக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் ஏராளமானோர் திரண்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் தாக்கத்தின் காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டத்தின் பள்ளிக் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் இன்று கல்வி நிலையங்கள் செயல்படாது.
புரோ கபடி லீக் போட்டியில் தபாங் டெல்லியுடன் தமிழ் தலைவாஸ் அணி மோதியது. முதல் பாதி 12-12 என சமநிலையில் இருந்தது. 2ஆவது பாதியில் தமிழ் தலைவாஸ் அணியினரை ‘ஆல்-அவுட்’ செய்த டெல்லி அணி 32-21 என்ற கணக்கில் போட்டியை வென்றது. இதுவரை விளையாடிய 14 போட்டியில், 5இல் வென்ற தமிழ் தலைவாஸ் அணி 33 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 43 புள்ளிகளுடன் (6 வெற்றி) 8ஆவது இடத்தில் உள்ளது.
✍உண்மை ஆழமானது; உருவமற்றது. ✍ரத்தம் தோய்ந்த கையைவிட பிறருக்காக இறங்காத இதயம் மோசமானது. ✍ஒழுக்கமுள்ள மனிதன் யாருக்கும் கட்டளையிடுவதில்லை; யாருக்கும் கீழ்ப்படிவதுமில்லை. ✍எதிர்காலத்திற்கு பயப்படாதீர்கள்; கடந்த காலத்திற்காக அழாதீர்கள். ✍ஞானமுள்ளோர் அன்பை விரும்புவர்; அன்புள்ளோர் ஞானத்தை விரும்புவர். ✍காதலின் வலி மிகவும் இனிமையானது. ✍மதத்தின் உடன்பிறந்த சகோதரி சுயநலம்.
▶டிச. – 02 ▶கார்த்திகை – 17 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7.30 PM – 09.00 PM ▶எமகண்டம்: 10:30 PM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: துவிதியை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை ▶முகூர்த்தம்: இல்லை ▶சந்திராஷ்டமம்: பரணி & கார்த்திகை ▶நட்சத்திரம்: கேட்டை.
‘அமரன்’ படத்தை கமல்ஹாசன் தயாரிக்க முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குனர் விஷ்ணுவர்தன்தான் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. 2021இல் இந்தியில் வெளியான ‘ஷெர்ஷா’ என்ற திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். இப்படம் மறைந்த ராணுவ வீரர் பத்ராவின் பயோ-பிக் ஆக வெளியானது.
இந்த படத்தின் வெற்றியை பார்த்துதான் தனக்கு ‘அமரன்’ படத்தை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமே வந்ததாக கமல் கூறியுள்ளார்.
இந்தியாவுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸி. அணியின் பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. 2ஆவது டெஸ்ட் போட்டி பகல்- இரவு ஆட்டமாக நடக்கவுள்ளது. அதில் அவருக்கு பதில், வலது கை வேகப்பந்து வீச்சாளர் போலண்ட் ஆஸி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த ஆஸி.அணிக்கு, 2ஆவது டெஸ்டில் ஜோஷ் விளையாடாதது சரிவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.