India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
12th fail படத்தின் மூலம் பிரபலமடைந்த ஹிந்தி நடிகரான விக்ராந்த் மாசே, 2025ல் படங்களில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்திருக்கிறார். “இது வீட்டிற்குத் திரும்புவதற்கான நேரமாக உணர்கிறேன்” என வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளார். இன்னும் 2 படங்களே நடிக்க இருப்பதாகவும் கூறிய அவர் தி சபர்மதி ரிப்போர்ட், ஹசீன் தில்ரூபா போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.
சர்வதேச அளவில் ‘விக்’ ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியர்களின் தலைமுடியில் உருவான விக்கை வாங்கவே அமெரிக்கா, ஆப்ரிக்கா உள்ளிட்ட பல நாட்டினர் பெரிதும் விரும்புகின்றனர். கருமை, தடிமன், மிருதுவான தன்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. உலகளவில் விக் சந்தை மதிப்பு ₹33,600 கோடியாகும். இதில் இந்தியாவின் பங்கு 88%ஆக உள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,150க்கும், சவரன் தங்கம் ரூ. 57,200க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை ரூ.60 குறைந்து ரூ.7,090க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் தங்கம் ரூ.480 சரிந்து ரூ.56,720க்கு விற்கப்படுகிறது. 1 கிராம் வெள்ளி ரூ.100க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்துக்கும் மாற்றமின்றி விற்பனையாகிறது.
திருவண்ணாமலையில் மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் பணியை விரைவுபடுத்த இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். நேற்று மாலை நடைபெற்ற நிலச்சரிவால், மண்குவியல் மூடியதில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருவதாக அவர் கூறியுள்ளார். விரைந்து செயல்பட்டு 7 பேரையும் உயிருடன் விரைவில் மீட்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
1) ஃப்ரெட்ரிக் க்ரான்ஸ்டெட் எந்த உலோகத்தை கண்டுபிடித்தார்? 2) இயேசு கிறிஸ்துவின் தாய் மொழி எது? 3) இந்தியாவின் முதல் பெண் மின்சார பொறியாளர் யார்? 4) முயலின் அறிவியல் பெயர் என்ன? 5) POTA என்பதன் விரிவாக்கம் என்ன? 6) வெப்பக்கதிர் வீச்சை அளக்க உதவும் கருவி எது? 7) அஞ்சுகம் என்ற சொல் எதைக் குறிக்கும்? 8) தென் கொரியாவின் தேசிய மலர் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.
கடந்த முறை KKRக்கு கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணிக்கு மாறிவிட்டார். இதனால் KKR கேப்டனை தேடி வருகிறது. ஆண்ட்ரே ரஸல், வெங்கடேஷ் ஐயர் ஆகியோரின் பெயர்கள் அடிப்படுகின்றன. அதே நேரத்தில் KKR அணியில் இணைந்துள்ள அஜிங்க்யா ரஹானே கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை. KKRக்கு யார் சரியான கேப்டன், நீங்க சொல்லுங்க?
2023 – 24ஆம் நிதியாண்டிற்கான ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிச. 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. CBDT வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச பரிவர்த்தனைகளைக் கொண்ட வரி செலுத்துவோர் மற்றும் 92E பிரிவில் அறிக்கை சமர்ப்பிப்போர் வரும் 15ஆம் தேதிக்குள் வரி கணக்கைத் தாக்கல் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நவ.30 உடன் காலக்கெடு முடிந்த நிலையில், 15 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மழையால் பாதித்தவர்களுக்கு, பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இன்று தலைமைச் செயலக அதிகாரிகளுடன் CM ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஃபெஞ்சல் புயல் பாதிப்பை பார்வையிட மத்திய குழுவை அனுப்பும்படி மத்திய அரசிடம் வலியுறுத்துவது குறித்தும் முடிவெடுக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹6000 நிவாரணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்கு மிக கனமழையை கொடுத்துவரும் ஃபெஞ்சல் புயல், இன்று காலை மேலும் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. நேற்று காலை புயலாக இருந்த ஃபெஞ்சல், படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகியிருக்கிறது. இது மேலும் கேரளா நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை, குளிர் காலங்களில் சளி பிடித்து, இருமல் அதிகரிக்கும். இதனால் தொண்டை வலி ஏற்படும். இதனைத் தவிர்க்க சில டிப்ஸ் * வெதுவெதுப்பான உப்பு நீரில் வாயை கொப்பளியுங்கள் * தொண்டை ஈரப்பதத்திற்கு சூடான சூப் எடுத்துக் கொள்ளலாம் * துளசி/வெற்றிலைச் சாறு தேனுடன் கலந்து குடிப்பது தொண்டைக்கு இதமாக இருக்கும் * மது மற்றும் காஃபின் பானங்களை தவிர்க்கவும் * தண்ணீர், பாலில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அருந்தலாம்.
Sorry, no posts matched your criteria.