India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வலுவிழந்த ஃபெஞ்சல் புயல், மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது சேலம் அருகே மையம் கொண்டுள்ளது. இதனால், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழையும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
’கங்குவா’ திரைப்படத்தின் HD Print இணையத்தில் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், 4 வாரங்களிலேயே ஓடிடியில் வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 13ஆம் தேதி இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், HD Print இணையத்தில் கசிந்துள்ளது படக்குழுவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது..
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக நீலகிரி, கோவை, தர்மபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது. இதனால், ஊட்டி, ஒகேனக்கல், சிறுவாணி செல்லும் சுற்றுலாப் பயணிகள் கவனமாக இருக்கவும்.
கோவை துடியலூரில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு தூங்கிய மாணவி உயிரிழந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு மருத்துவம் படிக்கும் கீர்த்தனா, நேற்றிரவு கடையில் வாங்கிய பரோட்டாவை சாப்பிட்டுவிட்டு தூங்கியிருக்கிறார். காலை படுக்கையில் மயங்கிக் கிடந்த அவரை, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
மகாராஷ்டிர CMஆக வேண்டும் என்ற விருப்பத்தை முன்னாள் CM ஏக்நாத் ஷிண்டே சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். மகாராஷ்டிர மக்கள், தாம் CMஆக வேண்டும் என விரும்புவதாக அவர் கூறியுள்ளார். மகாராஷ்டிர புதிய CM-ஐ தேர்வு செய்ய பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதன்முடிவில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது. பாஜக முடிவை தாம் ஆதரிப்பேன் எனவும் ஷிண்டேவும் கூறியுள்ளார்.
அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், வக்ஃப் வாரிய மசோதா குறித்து விவாதிக்கக் கோரி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அத்துடன், தமிழக வெள்ள பாதிப்பு குறித்து அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்கக் கோரி திமுக எம்.பிக்கள் முழக்கம் எழுப்பினர். தொடர் அமளியில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்ய சபாநாயகர் முயன்றும் தோல்வியடைந்ததால், இன்று நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நியூசி.க்கு எதிரான போட்டியில், இங்கி. 104 ரன்களை 12.1 ஓவரில் சேஸ் செய்துள்ளது. 147 ஆண்டு வரலாற்றில் டெஸ்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரன் சேஸ் செய்யும் போது, ரன் ரேட்டை 8ல் வைத்திருந்த முதல் அணி என்ற பெருமையை இங்கி. பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் நியூசி. 348 ரன்களும், இங்கி. 499 ரன்களும் குவித்தன. 2வது இன்னிங்ஸில் நியூசி. 254 ரன்னில் அவுட்டாக, 103 ரன்களை இங்கி. சேசிங் செய்துள்ளது.
பெரியார் சிலை உடைப்பு குறித்த கருத்து மற்றும் திமுக எம்பி கனிமொழி பற்றி விமர்சித்த வழக்குகளில் பாஜக தேசிய செயலாளர் H.ராஜாவுக்கு வழங்கப்பட்ட ஒரு வருட சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இரண்டு வழக்குகளிலும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னட சீரியல் நடிகை ஷோபிதாவின் suicide note போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், “சாக வேண்டுமானால் சாகலாம்” என எழுதப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஷோபிதாவின் மரணத்திற்கு மனஅழுத்தம் காரணமா? அல்லது நடிப்பிலிருந்து விலகியதா? கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று, தனது வீட்டில் ஷோபிதா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9 மற்றும் 10 என இரண்டு நாள்கள் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இன்று காலை தலைமை செயலகத்தில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது. மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக அரசு தீர்மானம் கொண்டுவரும் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும் சட்டப்பேரவையில் விவாதிக்கப்படவுள்ளது.
Sorry, no posts matched your criteria.