India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃபெஞ்சல் புயலால் கிருஷ்ணகிரியில் 300 ஆண்டு இல்லாத அளவு மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புயல் எதிர்பார்த்ததை விட மிகவும் மெதுவாக நகர்ந்து சென்றதால், பல பகுதிகளில் இதுவரை இல்லாத அளவு அதிக மழை பெய்திருப்பதாக தனியார் வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட இடங்களில் 24 மணிநேரத்தில் 50 சென்டி மீட்டருக்கும் மேல் மழைப் பதிவாகியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தற்போதைய ஜெனரேஷனின் முக்கிய பிரச்னை முடி. தலையில் வளரும் முடி மெல்லியதாக இருப்பதால், அடிக்கடி மொட்டை அடித்தால் வளரும் முடி அடர்த்தியானதாக இருக்கும் என சொல்வார்கள். ஆனால், அது உண்மையா? இதற்காக ஆய்வுகளும் நடத்தப்பட்டுள்ளது. மொட்டையடிக்கும்போது கூந்தல் நேராக வெட்டப்படும். இது வளர வளர கரடுமுரடானதாக இருப்பது போல் தோன்றுமே தவிர முடியின் அடர்த்தியை ஒருபோதும் மாற்றாது.
புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் விரைந்து கிடைக்க வேண்டும் என தமிழக அரசிடம் ம.நீ.ம. தலைவர் கமல் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், தி.மலை நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தது தன் நெஞ்சத்தை உருக்குவதாக குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு இன்று வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதேபோல், தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.
இளைஞர்களிடம் High BP அதிகரித்துள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இது சைலன்ட் கில்லர் என எச்சரிக்கும் டாக்டர்கள், சரியான வாழ்க்கை முறை மூலம் அதன் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் எனக் கூறுகின்றனர். அதன்படி, தினசரி பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது அவசியம். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 30 நிமிட வேக நடைப்பயிற்சி அவசியம். இரவு 8 மணிக்குள் இரவு உணவை உண்ண வேண்டும் என்கின்றனர்.
கனமழை காரணமாக, 6ஆவது மாவட்டமாக ராணிப்பேட்டையிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. முன்னதாக, நீலகிரி, சேலம், தி.மலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,யில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலை., நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல், சேலம், தி.மலை மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டங்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
WI எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் (கிங்ஸ்டன்) முதலில் பேட் செய்த BAN முதல் இன்னிங்சில் 164 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. WI தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீலஸ் 15.5 ஓவர்கள் பந்துவீசி 10 மெய்டனுடன் 5 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதாவது ஓவருக்கு ஒரு ரன்னுக்கும் குறைவோகவே (0.31) விட்டுக்கொடுத்துள்ளார். 47 ஆண்டுகளில் இது தான் மிகவும் சிக்கனமான பந்து வீச்சாகும்.
சூறாவளி காற்று வீசுவதால், தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை வீசும் எனக் கூறியுள்ளது. அதேபோல், அரபிக்கடல் பகுதிகளில் கேரள – கர்நாடக கடலோரப்பகுதி, லட்சத்தீவு பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.