news

News December 3, 2024

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,000.. ஸ்டாலின் அறிவிப்பு

image

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகளுடன் இன்று அவர் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

News December 3, 2024

RAIN ALERT: 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.

News December 3, 2024

சிவகார்த்திகேயனுக்கு பிறகு சிம்பு..?

image

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் 25ஆவது படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். அதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மற்றொரு படத்தை இயக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அப்படத்தில் சிம்பு நடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

News December 3, 2024

திரைப்பட விமர்சனங்களுக்கு தடை விதிக்க மறுப்பு

image

திரைப்படங்கள் வெளியான 3 நாள்களுக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிடத் தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. விமர்சனங்களால் திரைப்படம் தோல்வியடைவதாகக் கூறி தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணையில், கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறக்க முடியாது என்று கோர்ட் கூறியுள்ளது. அவதூறு பரப்பினால் போலீசாரிடம் புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

News December 3, 2024

உலுக்கிய ஃபெஞ்சல்: 1500 கி.மீ வரை எதிரொலித்த தாக்கம்

image

வங்காள விரிகுடாவின் தென்மேற்கில் உருவான ஃபெஞ்சல் புயல் கடும் பாதிப்புகளை உண்டாகியுள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், இன்று மாலையில் இருந்து புயலின் வீரியம் படிப்படியாக குறையும் என IMD தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்கள் மட்டுமின்றி, புயலின் மையத்தில் இருந்து 1500 கி.மீ தொலைவில் இருக்கும் ஒடிஷா மாநிலத்திலும் பாதிப்புகளை உண்டாக்கி இருக்கிறது.

News December 3, 2024

‘ஜெயிலர் 2’ விரைவில் வர்றார்… வெயிட் பண்ணுங்க

image

‘ஜெயிலர் 2’ படத்தின் ப்ரொமோ ஷூட்டிங் இன்று நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதன் தொடர்ச்சியாக 2ஆம் பாகத்தை உருவாக்க படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில், ரஜினியின் பிறந்தநாளான டிச. 12ஆம் தேதி இப்படத்தின் சிறப்பு ப்ரொமோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

News December 3, 2024

PM – CM தொலைபேசியில் பேசியது என்ன?

image

தமிழக மக்களைத் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என PM மோடியிடம் கேட்டுக்கொண்டதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொலைபேசி வாயிலாக புயல் பாதிப்பு குறித்து கேட்ட பிரதமரிடம், மத்திய குழுவை உடனடியாக அனுப்பவும், ஏற்கனவே அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவும் கேட்டுக்கொண்டதாக Xஇல் குறிப்பிட்டுள்ளார்.

News December 3, 2024

EPS, ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு துரைமுருகன் பதிலடி

image

சாத்தனூர் அணையை முன்னறிவிப்பின்றி திறந்ததே விழுப்புரம், கடலூரில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு காரணமென இபிஎஸ், டாக்டர் ராமதாஸ் ஆகியோர் குற்றஞ்சாட்டியிருந்தனர். இதற்கு பதிலளித்துள்ள துரைமுருகன், அணையை திறக்கும் முன்பு 5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மனசாட்சியை துறந்து அவதூறுகளை பரப்புவதாகவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

News December 3, 2024

முதலீட்டாளர்களின் எண்ணிக்கை உயர்வு

image

பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த அக்டோபர் மாதத்தில் 13 லட்சம் அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களின் எண்ணிக்கை செப்டம்பரில் 10.37 கோடியாக இருந்த நிலையில், அக்டோபரில் 10.50 கோடியாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1.80 கோடி பேர், உ.பி.யில் 1.20 கோடி பேர், குஜராத்தில் 94 லட்சம் பேர் முதலீட்டாளர்களாக உள்ளனர்.

News December 3, 2024

6வது வீரராக களமிறங்குகிறாரா ரோஹித்?

image

ரோஹித் ஷர்மா அணிக்கு திரும்பியுள்ள நிலையில், அணியில் Playing XIல் நிச்சயமாக மாற்றம் இருக்கும். நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் ரோஹித், 6வது வரிசையில் களமிறங்க வேண்டும் என இந்திய அணி முன்னாள் தேர்வாளர் தேவாங் காந்தி தெரிவித்திருக்கிறார். அணி சரியான கலவையில் இருப்பதால், ஏற்கனவே 6வது வரிசையில் இறங்கிய ரோஹித்திற்கு இது கடினமானதாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். இது சரியானதாக இருக்குமா?

error: Content is protected !!