India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சர்வதேச வர்த்தகத்தில் US டாலரின் ஆதிக்கத்தை ஒடுக்க, BRICS நாடுகள் மாற்று கரன்சியை பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில், டாலருக்கு பதிலாக வேறு கரன்சியை பயன்படுத்தும் நாடுகளின் பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் எனவும், US உடனான வர்த்தகத்தில் இருந்து விடைபெற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், US டாலருக்கு மாற்று இல்லை என்றும் கூறியுள்ளார்.
டிசம்பர் 1ஆம் தேதியான இன்று சர்வதேச எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. எய்ட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோயில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள விழப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் அமைந்துள்ளது. 90% எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமே நோய் பரவுகிறது. ஆகையால், செக்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி எய்ட்ஸ் நோயை ஒழித்திடுவோம்.
தமிழ்நாடா இல்லை காய்ச்சல் நாடா என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு, சுகாதாரத்துறை செயல்பட்டு வருவதாக சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். மருந்து, மாத்திரைகளுக்கு கட்டுப்படாத ஒரு புதிய வகை நோய் கிருமி பச்சிளம் குழந்தையில் இருந்து, பெரியவர்கள் வரை வேகமாக பரவி வருவதாக எச்சரித்த அவர், அதற்கு அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சாடியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நடைபயிற்சி சென்ற மூவர் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மலையப்பன், நிர்மலா, செல்லம்மாள் என்ற மூவர் இன்று காலை சாலையோரம் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமான வந்த ஆம்னி வேன் அவர்கள் மீது மோதியது. அதில், மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வேன் ஓட்டுநர் மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 4ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக வேளச்சேரியில் பலத்த காற்றால் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த சக்திவேல் மரணமடைந்தார். அதேபோல், மண்ணடியில் ATM-ல் பணம் எடுக்க சென்ற போது வடமாநில இளைஞர் மின்சாரம் தாக்கி பலியானார். மேலும், வியாசர்பாடியில் இசைவாணன் என்பவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
‘ஆடை’ படத்தின் க்ளைமேக்ஸில் வரும் ப்ராங் போர்ஷன் மற்றும் கற்பு தொடர்பான வசனங்களை தவிர்த்திருந்தால், அது நல்ல படமாக அமைந்திருக்கும் என இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். சர்வைவல் படத்தை, போஸ்டரை பார்த்து ரிவெஞ்ச் டிராமா என நம்பி ரசிகர்கள் ஏமாந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இப்போது எடுத்திருந்தால், க்ளைமேக்ஸில் அட்வைஸ் பண்ணி போர் அடிக்க வைத்திருக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவில் கிளை, மண்டல், மாவட்ட தலைவர்களை தேர்வு செய்ய உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. அக்கட்சி விதிகளின் படி, 33% நிர்வாகிகள் பெண்களாக இருக்க வேண்டும். ஆனால், பல இடங்களில் தகுதியான பெண்கள் இல்லை எனக் கூறி, அந்த இடத்தில் ஆண் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், பெண் நிர்வாகிகளை தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அதை காலியாக விட்டுவிடுமாறு அக்கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
புயல் கரையை கடந்த பின்னரும் அது வலுவிழக்காமல் இருப்பதால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில், புதுமையான கற்பித்தல் முறைகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு அரசு சிறப்புப் பயிற்சி அளிக்க உள்ளது. இதற்காக 6 – 8ம் வகுப்பு வரை அறிவியல் பாடம் கற்பிக்கும் 500 ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி தரப்படுகிறது. இதில், எதிர்காலத்தில் மாணவர்கள் அறிவியல் துறை சார்ந்த தொழிலை தேர்வு செய்வதை ஊக்கப்படுத்தவும் அறிவுறுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் காலை 10 மணி வரை தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.