India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாள் முழுவதும் அயராது உழைத்த பிறகு 8 மணி நேர தூக்கம் என்பது மிகவும் அவசியமானது என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், தூங்க செல்லும் முன்பாக சில தவறுகளை செய்வதால் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படுகிறது. தூங்க செல்லும் முன்பாக செய்யக்கூடாத 5 முக்கிய தவறுகளை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்த்து நண்பர்களுக்கும் தவறாமல் பகிரவும்.

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹90,600-க்கு விற்பனையான நிலையில், இன்று(அக்.30) ₹200 குறைந்துள்ளது. இன்றைய தினம் காலையில் சவரனுக்கு ₹1,800 குறைந்தது, ஆனால் மாலையில் மீண்டும் ₹1,600 அதிகரித்தது. ஆனாலும் கூட நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் 22 கேரட் கிராமுக்கு ₹25, சவரனுக்கு ₹200 குறைந்துள்ளது. இந்திய பங்குச்சந்தையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவே தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

ஈரான் சபாஹர் துறைமுகம் மீதான அமெரிக்க தடைகளில் இருந்து இந்தியாவிற்கு 6 மாதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சபாஹர் துறைமுகமானது இந்தியா – ரஷ்யா – ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சர்வதேச வழித்தடமாகும். இதில் இந்தியா பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளது.

53-வது CJI-ஆக நியமிக்கப்பட்டுள்ள <<18152053>>சூர்யகாந்த்<<>>, ஹரியானாவில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். 1984-ல் வழக்கறிஞராக பணியை தொடங்கியவர். இமாச்சல் தலைமை நீதிபதியாகவும், ஹரியானா & பஞ்சாப் ஐகோர்டில் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றியவர். வரும் நவ., 24 முதல் 2027 பிப்., 9-ம் தேதி வரை CJI-ஆக பணியாற்ற உள்ளார். அரசியல், தேர்தல் நடைமுறை சார்ந்த பல முக்கிய வழக்குகள் இவரது பணிக்காலத்தில் விசாரிக்கப்பட உள்ளது.

விஜய் ஆண்டனி நடித்த ‘சக்தித் திருமகன்’ படத்தின் கதை தன்னுடையது என கூறி, அதற்கான சில ஆவணங்களை இணைத்து சுபாஷ் சந்தர் என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள அப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு, 2014-ல் இருந்தே எழுதப்பட்ட கதை என தெரிவித்துள்ளார். மேலும், இன்னொருவர் கதையை திருடி எழுத வேண்டிய இயலாமை தனக்கில்லை என்றும் கூறியுள்ளார்.

<<18130099>>கேரளாவில் <<>>ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட பிரதான கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடங்கியுள்ளது. அந்த வகையில், முதல் Enumeration Form அம்மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு வழங்கப்பட்டுள்ளது. SIR நடவடிக்கை வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் பணி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் ASEAN மாநாடு நடைபெற்றது. இதை தொடர்ந்து, நவ.1-ம் தேதி ASEAN பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டமைப்பின் பிளஸ் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று அவர் மலேசியா புறப்படுகிறார். ADMM-Plus மாநாட்டில், பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுவதாக சித்தா டாக்டர்கள் சொல்றாங்க. ➤2 ஸ்பூன் வெந்தய விதைகளை தண்ணீரில் ஊற வையுங்கள் ➤அதை தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளுங்கள் ➤ அந்த பேஸ்ட்டை Scalp, தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும் ➤பிறகு வெதுவெதுப்பான நீர் & ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள். பலருக்கு பயனளிக்கும் SHARE THIS.

மழை காரணமாக கடந்த 22-ம் தேதி விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 1-ம் தேதி(சனிக்கிழமை) பள்ளிகள் இயக்கும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். கடந்த 22-ம் தேதி அன்று தொடர் மழை காரணமாக 17 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வீடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மற்ற மாவட்டங்களில் இருந்தும் விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட்(SC) தலைமை நீதிபதியாக சூரியகாந்தை நியமனம் செய்து, ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக உள்ள பி.ஆர்.கவாய், வரும் 23-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக உள்ள சூரியகாந்தை புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்து, கவாய், கடந்த வாரம் ஜனாதிபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
Sorry, no posts matched your criteria.