India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் கல்லூரி மாணவிக்கு CEO பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவி, அதே கல்லூரியில் பணிபுரிந்து கொண்டு படித்து வந்துள்ளார். அக்கல்லூரியின் CEO-வான பிரசன்னா, செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்பியதுடன், கல்லூரி வளாகத்தில் பலாத்காரம் செய்யவும் முயற்சித்துள்ளார். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூருவில் நடைபெறவிருந்த RCB, PBKS இடையேயான ஐபிஎல் போட்டி மழையால் தாமதமாகியிருக்கிறது. இன்னமும் மழை தொடர்வதால், போட்டி நடைபெறுமா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் உள்ளனர். இரவு 10.54 மணிக்கு போட்டியை தொடங்கினால் கூட 5 ஒவர் போட்டியாக இது நடைபெறும். அதனை மீறினால், போட்டி கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பிரித்தளிக்கப்படும்.
₹2000-க்கு அதிகமான UPI பரிவர்த்தனைகளுக்கு GST வரி விதிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய நிதியமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. GPay, PhonePe மூலம் ₹2000-க்கு மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று செய்திகள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் நிதியமைச்சகம், அப்படியான திட்டம் ஏதும் இல்லை என்று கறாராக தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பழங்கால நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாணயம் விஜயநகர பேரரசின் மன்னரான 2ம் தேவராயர் காலத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. நாணயத்தின் முன் பகுதியில் யானை ஓடுவது போலவும், மேல் பகுதியில் கன்னட எழுத்தில் ‘ல’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. பின் பக்கத்தில் ‘கன தனய காரு’ என கன்னடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
240 பயிற்சி ஊழியர்களை இன்ஃபோசிஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இதேபோல 300 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அடுத்த கட்ட பணி நீக்கத்தை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Trainee-யான இவர்களுக்கு, திறன் போதவில்லை என நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. பணிக்கு எடுக்கும்போது அவர்களின் திறன் பற்றி தெரியவில்லையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
AP-ஐ சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவுக்கு பெங்களூரில் கால் சென்டர் வைத்துள்ள லூயிசுடன் பழக்கம் ஏற்பட்டது. 3 பேரும் கால்சென்டர் வரும் பெண்களிடம் ஆசைக்காட்டி, நிர்வாண வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு பணம் சம்பாதித்துள்ளனர். இதையறிந்த போலீஸ், 3 பேரையும் கைது செய்து 100 இளம்பெண்கள் நிர்வாண வீடியோவை கைப்பற்றியுள்ளனர். எனவே இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையா இருங்க!
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள், மே 12 அல்லது மே 13-ம் தேதி வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்வுகள் முடிந்த நிலையில், முடிவு எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு முடிவுகள் மே 12, மே 13ம் தேதிகளில் வெளியானது. அதனால் இந்த ஆண்டும் அதே தேதியிலேயே வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. SHARE IT.
30 ஆண்டுகளாக ஒரே அரசு பதவியில் இருப்பவர்களுக்கு போனஸ், ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல் அரசாணை வெளியாகியுள்ளது. TN நிதித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில், 1998ம் ஆண்டு அரசாணை, 2009, 2017ம் ஆண்டு அரசாணைகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அலுவலக உதவியாளர், பணியிட இடமாற்றம் மூலம் பதிவு எழுத்தர் நியமனத்தை துறந்தாலும் போனஸ் உயர்வு உண்டு எனவும் கூறப்பட்டுள்ளது.
நடப்பு IPL சீசனில், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் SRH அணி, புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், கேப்டன் பேட் கம்மின்ஸின் மனைவி பெக்கி கம்மின்ஸ் போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதில், பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு திரும்புவது போன்ற போட்டோக்கள் இருக்கின்றன. அதில், ‘Goodbye India’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை பங்குச்சந்தையில் கடந்த 3 நாட்களில் சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் உயர்ந்துள்ளன. குறிப்பாக, நேற்று மட்டும் ஒரே நாளில் 1,500 புள்ளிகளுக்கும் மேல் உயர்வை சந்தித்தன. இந்த 3 நாள் உயர்வால், மும்பை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்களுக்கு ரூ.18.42 லட்சம் கோடி கிடைத்தது. அதேபோல், மும்பை பங்குச்சந்தையின் முதலீடு மதிப்பு ரூ.419.60 லட்சம் கோடியாக அதிகரித்தது.
Sorry, no posts matched your criteria.