India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IMDBயில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் சோபிதா துலிபாலா 5ஆம் இடத்தை பிடித்துள்ளார். நாக சைதன்யாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின், சோபிதாவின் பின்னணியை தெரிந்து கொள்ள பலர் இவரை பற்றி தேடியதால், இந்த இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் சமந்தா 8ஆவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் திரிப்டி டிம்ரி, தீபிகா படுகோனே 2ஆம் இடத்திலும், இஷான் கட்டர் 3ஆம் இடத்திலும் உள்ளனர்.
ஜார்க்கண்ட்டில் CM ஹேமந்த் சோரன் தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றது. அவரது JMM கட்சியில் இருந்து 6 பேர், காங்கிரஸில் 4 பேர், RJD-ல் ஒருவர் என 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆளுநர் சந்தோஷ் கங்வார் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அமைச்சரவையில் 50% புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 81 இடங்களில் 56 இடங்களை IND கூட்டணி கைப்பற்றியிருந்தது.
இந்தியா அனுப்பிய PSLV-C59 ராக்கெட் வெற்றிகரமாக செயற்கைக் கோள்களை, நிர்ணயிக்கப்பட்ட சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையம் உருவாக்கிய சூரியனின் வெளிவட்ட பாதையை ஆராயும் 2 செயற்கைகோள்களை இந்தியா வெற்றிகரமாக இன்று மாலை விண்ணில் ஏவியது. விண்வெளி திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியாவின் திறனை இந்த சாதனை காட்டுவதாக இஸ்ரோ பெருமிதம் தெரிவித்துள்ளது.
புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் உயர்க்கல்வி சேர்க்கை பின்பற்றப்படும் என UGC அறிவித்துள்ளது. ஆண்டிற்கு இருமுறை ( ஜூன், ஆக.,மற்றும் ஜன., பிப்.,) உயர்க்கல்வி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். நாடு முழுவதும் உள்ள பல்கலை.கள், கல்லூரிகள் புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும். 12ஆம் வகுப்பில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்து படித்தாலும், நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றால், விரும்பும் படிப்புகளில் சேரலாம்.
தமிழக அரசுக்கு மக்கள் மீதான அக்கறை எப்போது வரும் என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் இருவர் உயிரிழந்தாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக பேசிய அவர், மக்களுக்கு சரியான குடிநீரை கூட வழங்க முடியாத அரசு, மக்கள் நல அரசாக எப்படி இருக்கும் என்றும் சாடியுள்ளார். உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மன்சூர் அலிகான் மகன் துக்ளக் அலிகான், கஞ்சா பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக, துக்ளக் நேற்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் உள்பட 7 பேர் 15 நாள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக, தன் பையன் சிகரெட் அடிப்பான் என்றே தெரியாது எனவும், தவறு செய்தால் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் மன்சூர் கூறியிருந்தார்.
ஆஸி., அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி படுதோல்வி அடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த IND 100 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் 7 பேரின் மொத்த ரன்கள் 18 மட்டுமே. இதன்பின் களமிறங்கிய AUS வெறும் 16.2 ஓவரிலேயே இலக்கை ( 102/5) எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதாவது, IND 206 பந்துகளில் அடித்த இலக்கை AUS 98 பந்துகளிலேயே எட்டியது.
இந்தியா எங்கு சென்று கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை காம வெறியர்கள் விட்டுவைப்பதில்லை. ஆம்! கொல்கத்தாவில் 7 மாத பச்சிளம் குழந்தையை கொடூரமாக ரேப் செய்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. நவ.30 நள்ளிரவு 1:45-க்கு நடைபாதையில் அழுது துடித்துக் கொண்டிருந்த குழந்தையின் அந்தரங்க பகுதிகளில் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தனது அக்காவிற்கு இங்கிலாந்து நாடு அளித்துள்ள அங்கீகாரம் குறித்து SK பூரிப்புடன் பதிவிட்டுள்ளார். கோல்ட் மெடலுடன் MD படிப்பை முடித்த அரசு மருத்துவர் கெளரி மனோகரி(38)யின் மருத்துவ நிபுணத்துவம், பங்களிப்பை பாராட்டி FRCP (Fellow of the Royal College of Physicians) அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனைப் பெற்றவர்கள் வெளிநாட்டில் படித்திருந்தாலும் இங்கிலாந்திலும் மருத்துவம் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக மன்மோகன் இன்று பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. நீதிபதி மன்மோகன் 2008இல் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பின்னர் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
Sorry, no posts matched your criteria.