India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை சூறாவளி வீசும் என்று IMD எச்சரித்துள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள4 மாவட்டங்களிலும் இன்று அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும், கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்காலில் பலத்த தரைக்காற்று வீசும் எனவும் வார்னிங் கொடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
ஹாலிவுட் படங்களை போல, விசித்திரமான நிகழ்வுகள் ஏனோ அமெரிக்காவில்தான் நடக்கின்றன. அப்படித்தான் நேற்று நள்ளிரவு, நியூயார்க் வான் பகுதியில் 4 லைட்டுகள் திடீரென தோன்றி பறந்தன. அங்கு விமானங்களும் பறக்கவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. அப்படியெனில், அவை ஏலியன்களின் விமானங்களா என கேள்வியெழும்பியுள்ளது. அமெரிக்காவில் ஏலியன் கண்காணிப்பு துறை சமீபத்தில் உருவாக்கப்பட்டது.
சட்டம் ஒழுங்கை காக்க முடியாத திமுக அரசால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். பல்லடத்தில் தாய், தந்தை, மகன் கொலையுற்ற செய்தியறிந்து வேதனையடைந்ததாகக் கூறிய அவர், கடந்த ஆண்டும் பல்லடத்தில், இதே போன்று சம்பவம் நடந்ததை நினைவுகூர்ந்துள்ளார். மேலும், காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த IPL மெகா ஏலத்தில், விற்பனையாகாத வீரர்களை வைத்து ஒரு அணியை உருவாக்கினால், அது இப்படி தான் இருக்கும் போல. வார்னர் (கேப்டன்) பிருத்வி ஷா, மயங்க் அகர்வால், பேர்ஸ்டோவ், டேரில் மிட்செல், சர்ஃபராஸ் கான், சிக்கந்தர் ராசா, ஷர்துல் தாக்கூர், பியூஷ் சாவ்லா, உமேஷ் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான். இந்த் அணியில் வேறு யார் இடம் பெற்றிருக்க வேண்டும்…கமெண்டில் சொல்லுங்க?
வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவானதாக வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இது மாமல்லபுரம் – காரைக்கால் இடையே நாளை பிற்பகல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஃபெஞ்சல் என மாற்றப்பட்டுள்ளது.
EX மினிஸ்டர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுத்துள்ளது. 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, அதிமுகவினர் பரிசுப்பொருள் விநியோகிப்பதாக கிடைத்த தகவலின்பேரில், சோதனை செய்ய வந்த தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இது அவருக்கு சிக்கலாக மாறியுள்ளது.
புத்தாண்டில் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆவதால் பலனடையப் போகும் 3 ராசிகள். 1) கடகம்: அஷ்டம சனி விலகுகிறது. தொட்டதெல்லாம் துலங்கும். அதிக முன்னேற்றம் இருக்கும். குழந்தை பேறு உண்டு. 2) ரிஷபம்: பண லாபம், பதவி உயர்வு, பூர்வீக சொத்து தேடி வரும். 3) மகரம்: ஏழரை சனி விலகுகிறது. இனி முன்னேற்றம்தான். புதிய வீடு கட்டுவீர்கள். மனதில் இதுநாள் வரை இருந்த பாரம் குறையும்.
தமிழர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற வாய்ப்புள்ளது. உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளை பயன்படுத்த சட்டப்பூர்வ அனுமதி உள்ளதாக சட்டத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹவால் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று, மாநில மொழிகளை ஹைகோர்ட்களில் பயன்படுத்த ஆளுநர் அனுமதி அளிக்கலாம் என்றும் கூறியுள்ளார். இது அமலானால் எளிய மனிதர்களும் கோர்ட் விவகாரங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
புயல் காரணமாக நாளை (30.11.2024) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்காக, இம்மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை, தி. மலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புண்டு.
போர் நிறுத்தத்தை அறிவித்த மறுநாளே தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் நடமாட்டத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா மீறியதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. லெபனானில் 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், போர்நிறுத்த அறிவிப்பு மக்கள் மனதில் நிம்மதியை வரச் செய்தது. ஆனால் அந்த நிம்மதி நீடிக்கவில்லை.
Sorry, no posts matched your criteria.