India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
PBKS, RCB அணிகள் மோதும் இன்றைய IPL போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டுள்ளது. இதில், PBKS கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் டாஸ் வென்று RCB அணியை பேட்டிங் செய்யப் பணித்தார். புள்ளிப்பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடங்களில் இருக்கும் அணிகள் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் வெல்லும் அணி இரண்டாவது இடத்தை பிடிக்கும்.
பிஹார் தேர்தலுக்கு முன்பு மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பாஜக திட்டமிட்டு இருப்பதாகவும், அண்மையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் முர்முவை இதுதொடர்பாக பிரதமர் மோடி சந்தித்துப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அதுபோல மத்திய அமைச்சரவை மாற்றப்படுகையில் அண்ணாமலைக்கு இடமளிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. நாளையே இந்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
விஜய் டிவியில் கலக்கி வரும் பாலா தற்போது தமிழ் திரையுலகில் கலக்கப்போகிறார். தொகுப்பாளராக செயல்பட்டு வரும் பாலா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இப்போது கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ‘ரணம்’ படத்தை இயக்கிய ஷெரீஃப்பின் புதிய படத்தில் அவர் நாயகனாக களமிறங்குகிறார். படத்தின் போஸ்டரை ராகவா லாரன்ஸ் X -தளத்தில் வெளியிட்டுள்ளார்.
நம்மில் பலரும் BED-ல் ஈர டவலைப் போட்டுவிட்டு கண்டுக்காமல் சென்று விடுகிறோம். ஆனால் இதனால் கிருமி உண்டாகி, BED-லிலும், படுக்கை விரிப்பிலும் வேகமாக பரவும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமில்லை, நமது உடலிற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கூறுகின்றனர். வெளியில் இருந்து வந்து கால்களை சுத்தம் செய்யாமல் படுக்கைக்கு செல்வதும் உடல்நலனை பாதிக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.
தமிழக முன்னாள் முதல்வர் OPS, கோவை கணபதி பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி அங்கே வந்த அவர், இரண்டு நாள்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு வாரத்திற்கும் மேல் தங்கியிருந்து சிகிச்சை பெற்று இன்று அவர் தேனி புறப்பட்டுச் சென்றார்.
கலை, சமூகம், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக விளங்குவோருக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. தமிழகத்தில் நடிகர் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்மபூஷணும், கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகளை இம்மாத இறுதியில் குடியரசுத் தலைவர் வழங்குகிறார்.
இந்திய ஆஞ்சியோபிளாஸ்டியின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் மாத்யூ சாமுவேல் களரிக்கல் (70) காலமானார். சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கேரள மாநிலம், கோட்டயத்தில் பிறந்த அவர், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்று விளங்கினார். அவரது திறமையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை 2000ம் ஆண்டில் வழங்கி கவுரவித்தது.
ஜோதிராவ் & சாவித்ரிபாய் பூலே குறித்து உருவாகியிருக்கும் பாலிவுட் படமான ‘பூலே’வுக்கு CBFC கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்த அனுராக் காஷ்யப், CBFCயில் இருக்கும் பிராமணர்களை கடுமையாக சாடியிருந்தார். அதில் ஒருவர், பிராமணர்கள் உங்களை விட மேல் என்று கமெண்ட் செய்ய, கடுப்பான காஷ்யப், நான் பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன் என்று கமெண்ட் செய்தார்.
மே மாதம் ராகு கிரகம் கும்ப ராசிக்கும், கேது சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி இடப்பெயர்ச்சி ஆகின்றனர். சனி பகவானை அதிபதியாக கொண்ட கும்ப ராசியில் ராகு பெயர்ச்சி ஆவது மேஷம், மிதுனம், கடகம், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பண லாபம், முன்னேற்றம், வெளிநாட்டுப் பயணம் என பல நல்ல விஷயங்கள் நடக்கலாம் என கூறுகின்றனர்.
இன்று உலகளவில் கொண்டாடப்படும் IPL 2008-ல் இதே நாளில் தான் தொடங்கியது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் முதல் போட்டி நடைபெற்றது. அன்று கேப்டனாக அறிமுகமான பலர் இன்று பயிற்சியாளர்களாகவும், கமெண்டேட்டர்களாகவும் மாறிவிட்டனர். அன்றும் இன்றும் கேப்டனாக இருப்பவர் தல தோனி மட்டுமே. 18 ஆண்டுகளாக சென்னை அணியை தோளில் சுமந்து வருகிறார் தோனி.
Sorry, no posts matched your criteria.