India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனமழை மற்றும் பெரு வெள்ளத்தில் இருந்து இன்னும் மீளாத விழுப்புரம் மாவட்ட கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள சேத மீட்புப் பணிகளை முடித்தபின்னர் திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், மீட்புப் பணிகளை துரித கதியில் நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
சப்தமாதர்களில் நடுநாயகமாக திகழ்கிறாள் வாராஹி தேவி. வாராஹிக்கு உரிய வெள்ளிக்கிழமையில் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று, அவருக்கு ரோஜா மாலை சாத்தி, நெய் விளக்கேற்றி சந்நிதியை 12 முறை வலம் வந்து வழிபடுங்கள். ‘லூம் வாராஹி லூம் உன்மத்த; பைரவீம் பாதுகாப்பாம் ஸ்வாஹா’ எனும் இந்த வாராஹி காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லி வேண்டினால் கேட்டவை அனைத்தும் கிட்டும் என்பது நம்பிக்கை.
தமிழ், தெலுங்கு படங்களில் தடம் பதித்த நடிகர் ஃபகத் பாசில் அடுத்து பாலிவுட் உலகில் காலடி எடுத்து வைக்கவுள்ளார். அவர் நடிக்க உள்ள ஹிந்தி படத்தை, ‘ஜப் வி மெட்’, ‘ராக்ஸ்டார்’, ‘ஹைவே’ உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்க உள்ளார். இந்தப் படத்தில் அனிமல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை திரிப்தி டிம்ரி அவருக்கு கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
✍அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல. அது அறிவின் மாயையே ஆகும். ✍நாம் வேடிக்கையானவர்களாக இல்லாவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும். ✍மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்தி கூர்மை. ✍அமைதியான மனிதர்கள் சத்தமான மனங்களைக் கொண்டவர்கள். ✍துன்பமான நேரத்தில் சிரிக்கும் நபர், அநேகமாக ஒரு பலிகடாவை வைத்திருக்கலாம். ✍இயற்கை நோக்கம் இல்லாத பயனற்ற எதையும் செய்யாது.
டெல்லி சட்டப்பேரவை சபாநாயகரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராம் நிவாஸ் கோயல் (76) தேர்தல் அரசியலை விட்டு விலகியுள்ளார். இது தொடர்பாக அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “வயது காரணமாக தேர்தல் அரசியலில் இருந்து விலக விரும்புகிறேன். ஆம் ஆத்மி கட்சியில் தொடர்ந்து பணியாற்றுவேன். நீங்கள் வழங்கும் எந்தப் பொறுப்பையும் நிறைவேற்ற முயற்சிப்பேன்” என்று கூறியுள்ளார்.
தமிழக முதல்வராக ஓபிஎஸ் பதவி வகித்தபோது, அவர் அமைச்சரவையில் EPS அமைச்சராக இருந்தார். பின்னர், EPS முதல்வராக இருந்தபோது அவர் அமைச்சரவையில் ஓபிஎஸ் துணை முதல்வராக இருந்தார். அதே பாணியில், மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தற்போது துணை முதல்வராகவும், அவர் அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்த பட்நவிஸ் தற்போது முதல்வராகவும் பதவியேற்று உள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்தை கீழே கமெண்ட் பண்ணுங்க.
▶டிச. – 06 ▶கார்த்திகை – 21 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சஷ்டி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை ▶முகூர்த்தம்: இல்லை ▶சந்திராஷ்டமம்: திருவாதிரை & புனர்பூசம் ▶நட்சத்திரம்: திருவோணம்.
ஒடிசா உள்ளிட்ட இடங்களில் உள்ள 27 நிலக்கரி தொகுதி சுரங்கங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது அரசுக்கு ஆண்டுக்கு ₹1,446 கோடி வருவாய் வரும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். 11வது சுற்று நிலக்கரி சுரங்க ஏலத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், “நிலக்கரி இறக்குமதியை படிப்படியாக குறைக்க வேண்டும். அத்துடன், தொழில்நுட்பத்தில் தேவையான மாற்றங்களைச் செய்ய அரசு பல பணிகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.
பருவமழை காலத்தில் பெய்யும் கனமழையால் ஏற்படும் வெள்ளத்துக்கு வழக்கமாக சென்னையும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுமே பாதிக்கப்படும். இதனால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் இந்த மாவட்ட மக்கள் பீதியில் இருப்பார்கள். ஆனால் இந்த மழைகாலம், தமிழகத்தின் அனைத்து பகுதியையும் ஒருவழி பண்ணிவிட்டது. கோவை, திருப்பூர், மதுரை, சென்னை, விழுப்புரம், கடலூர், ஈரோடு என்று சுற்றி வந்து அனைத்து பகுதியிலும் கதகளி ஆடிவிட்டது.
கடவுள், மதம், சாதி ஆகியவற்றின் பெயரால் ஒடுக்கப்பட்ட நாட்டின் பூர்வகுடி மக்களின் வாழ்வு உயர வட்டமேசை மாநாட்டில் வாதாடிய குரல் அற்றவர்களின் குரலுக்கு சொந்தக்காரர் அம்பேத்கர். பெரும்பான்மை மக்களின் சமூக விடுதலைக்காக சட்ட அமைச்சர் பதவியை துறந்த பெருந்தகை. நமக்கு உரிமை அளித்த அரசியலமைப்பை வடிவமைத்த அண்ணலின் 68ஆவது நினைவு நாளில் அவர் ஏற்படுத்திய சமூக புரட்சியை நினைவில் ஏந்துவோம்.
Sorry, no posts matched your criteria.