news

News December 6, 2024

பிரிவினை கட்சியா நாம் தமிழர்?

image

சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎஸ் நிகழ்ச்சி ஒன்றில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாத கட்சி என்று பேசினார். இது, சீமான் மற்றும் கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் அரசியல் கட்சி குறித்து இவ்வாறு பேசியிருப்பது அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாம் தமிழர் குறித்து உங்களது கருத்து என்ன?

News December 6, 2024

பொதுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்

image

10, +1, +2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் டிச. 17ஆம் தேதிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அரசு சேவை மையங்களில் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

News December 6, 2024

வாடகை கொடுக்கவே கஷ்டப்பட்டோம்

image

பிரபல தொகுப்பாளினி மணிமேகலை புதிதாக வீடு வாங்கியது குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில், திருமணமான முதல் ஆண்டில் ₹10,000 வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டதாகவும், தற்போது சென்னையின் முக்கியப் பகுதியில் பிரீமியம் அப்பார்ட்மென்ட் வாங்கி இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். வீடு வாங்குவது தங்கள் கனவாக இருந்ததாகவும், அதை கடவுள் பரிசாக வழங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

News December 6, 2024

‘பிட்காயின்’ மதிப்பு ₹84 லட்சமாக உயர்வு… காரணமென்ன?

image

கிரிப்டோகரன்சி மெய்நிகர் நாணயங்களில் ஒன்றான, ‘பிட்காயின்’ மதிப்பு, முதன் முறையாக ஒரு லட்சம் டாலரை (₹84 லட்சம்) கடந்துள்ளது. கிரிப்டோ ஆலோசனை கவுன்சில் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்திருப்பதே இந்த மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணமென சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதும், இந்த மின்னணு கரன்சிகளின் மதிப்பு மேலும் பல மடங்கு உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 6, 2024

விரும்பிய பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கலாம்: UGC

image

UG, PG பட்டப்படிப்புகளில் முந்தைய பாடப்பிரிவு அல்லாமல், எந்த பாடப்பிரிவையும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம் என UGC அறிவித்துள்ளது. +2, UG பட்டப்படிப்புகளில் அறிவியல் சார்ந்த பிரிவை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் உயர் கல்வியில் அதே பாடப்பிரிவில் மட்டுமே சேர முடியும். இந்த விதிமுறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தன் விருப்பத்திற்கு ஏற்ப வேறு பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

News December 6, 2024

2வது BGT டெஸ்ட்: எப்போது, எதில் நேரலையில் காணலாம்

image

BGT தொடரின் 2-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்குகிறது. இந்த பகலிரவு ஆட்டத்தில் Pink நிற பந்து உபயோகிக்கப்படுகிறது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியை டிஸ்னி ஹாட்ஸ்டார் நேரலை செய்கிறது. முதல் டெஸ்டின் வெற்றியை மீண்டும் தொடரும் முன்னைப்பில் இந்தியாவும், இப்போட்டியில் வெற்றி பெற்று முன்னிலையை சமன் செய்யும் முனைப்பில் ஆஸி.யும் உள்ளது. எந்த அணி வெல்லும் என நினைக்குறீர்கள்…

News December 6, 2024

அமெரிக்காவில் நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கை

image

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நள்ளிரவு (இந்திய நேரப்படி) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (7.0 ரிக்டர்) ஏற்பட்டது. இதனால், அந்நாட்டின் மேற்கு கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நேரப்படி காலை 10.44 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இரு தினங்களுக்கு முன் ஹைதரபாத்தில் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் இன்று அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது.

News December 6, 2024

வேகமெடுக்கும் சபரிமலை ரயில் பாதை திட்டம்

image

சபரிமலை ரயில் பாதை திட்டம் தொடர்பாக டிச. 17ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனைக் மேற்கொள்கிறார். பக்தர்களின் நீண்ட கால கனவான இத்திட்டத்திற்கு 392 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தி தரும்படி மாநில அரசுக்கு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியது. ஆனால், 24 ஹெக்டேர் மட்டுமே மாநில அரசு கையகப்படுத்தி உள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தை விரைவுப்படுத்த 3 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

News December 6, 2024

JOB ALERTS: ரயில்வேயில் 1,785 வேலைவாய்ப்பு

image

ரயில்வேயில் (தென் கிழக்கு பிரிவு ) 1,785 காலி இடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டு உள்ளது. இந்த வேலைவாய்ப்பு அப்ரன்டிஸ் அடிப்படையிலானவை ஆகும். கல்வி தகுதி 10, 12ம் வகுப்பில் 50% தேர்ச்சி ஆகும். வயது வரம்பு 15-24 ஆகும். வேலையில் சேர விரும்புவோர் www.rrcser.co.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு இந்த மாதம் 27ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News December 6, 2024

உதயநிதி திமிரின் உச்சத்தில் இருக்கிறார்: ஜெயக்குமார்

image

ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் இறுமாப்பில் ஸ்டாலினும், உதயநிதியும் திமிரின் உச்சத்தில் செயல்பட்டு வருகிறார்கள் என்று ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால் அப்பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதற்கு திமுக அரசின் நிர்வாக தோல்வியே காரணம்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!