India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤1732 – லண்டனில் ராயல் ஓபரா திறக்கப்பட்டது. ➤1842 – நியூயார்க் பில்ஹார்மோனிக்கில் முதல் இசை நிகழ்ச்சி நடந்தது. ➤1928 – மொழியியல் அறிஞர் நோம் சோம்ஸ்கி பிறந்த நாள். ➤1941 – பேர்ள் துறைமுகம் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியது. ➤1988 – யாசர் அரபாத் இஸ்ரேலைத் தனிநாடாக அங்கீகரித்தார். ➤1995 – நாசா அனுப்பிய கலிலியோ விண்கலம் வியாழனை அடைந்தது. ➤2010 – மனித உரிமை செயற்பாட்டாளர் பான் இயூ தெங் மறைந்த நாள்.
நடிகை ரஷ்மிகா மந்தனா தான் கதாநாயகியாக நடித்த ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தை நடிகர் விஜய் தேவரகொண்டா குடும்பத்துடன் திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள பிரபல மாலில் தேவரகொண்டாவின் அம்மா மாதவி, சகோதரர் ஆனந்த் ஆகியோர் அவருடன் சேர்ந்து வந்ததைக் கவனித்த ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கூச்சல் போட்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன
ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப்பின் லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி ஜப்பானிடம் தோல்வியடைந்தது. டெல்லியில் நடந்த இறுதி லீக் போட்டியில் IND அணி, ஜப்பானை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜப்பானிடம் IND அணி 15-48 என்ற கணக்கில் வீழ்ந்தது. இதுவரை நடந்த 3 போட்டியில் ஒன்றில் மட்டும் வென்று, புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடம்பிடித்த இந்திய அணி, அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் & தீவிரவாதிகள் இடையே மீண்டும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. கிழக்கு இம்பாலில் சாந்திகோங்பால், யைங்காங்போக்பி உயோக் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரம் இந்த சண்டை நீடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சண்டையில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மைதேயி, குகி பழங்குடியினர் சார்ந்த தீவிரவாதக் குழுக்களும் தாக்குதலில் ஈடுபடுவதால் உயிா்ச் சேதம் தொடர்கதையாக உள்ளது.
▶குறள் பால்: பொருட்பால். ▶குறள் இயல்: குடியியல். ▶அதிகாரம்: குடிசெயல்வகை.. ▶குறள் எண்: 121 ▶குறள்: கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல். ▶பொருள்: உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை இடைவிடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை இந்த உலகில் வேறு எதுவும் கிடையாது.
முரசொலி மாறனுக்குப் பிறகு, டெல்லியில் திமுகவின் அரசியல் முகமாக இருந்தவர் TR பாலு. MP தேர்தலுக்குப் பின், கட்சியின் முக்கியப் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிலை தலைகீழாகி மாறிவிட்டதாக தெரிகிறது. INDIA கூட்டணியின் சார்பில் டிச.3இல் நடந்த சமூக நீதி மாநாட்டில், அவருக்கு முறையான அழைப்புக்கூட இல்லை. இதனால், தலைமை மீது அவர் வருத்தத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் கடந்த 10 ஆண்டுகளில் பில்லியனர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக, UBS சுவிஸ் வங்கி ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் ஆண்டறிக்கையில், “2014இல் 1,757ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை 2024இல் 2,682ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் அவர்களின் எண்ணிக்கை 153இல் இருந்து 185ஆக அதிகரித்துள்ளது. அவர்களின் சொத்து மதிப்பு 905.6 பில்லியனாக உயர்ந்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
இன்று (டிச.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
<<14805831>>பிங்க்<<>> பந்தினை IND அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது ஏமாற்றமளித்தாக கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “IND பந்துவீச்சாளர்கள் 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் AUS அணிக்கு அழுத்தம் கொடுக்க தவறிவிட்டனர். AUS அணியின் வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் IND அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது துரதிஷ்டவசமானது” என அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இன்று (டிச.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.