India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤மேஷம் – மேன்மை ➤ ரிஷபம் – வெற்றி ➤மிதுனம் – நட்பு ➤கடகம் – போட்டி ➤சிம்மம் – சுகம் ➤கன்னி – தனம் ➤துலாம் – வரவு ➤விருச்சிகம் – முயற்சி ➤தனுசு – உயர்வு ➤மகரம் – கவலை ➤கும்பம் – லாபம் ➤மீனம் – ஜெயம்.
மன்மோகன் சிங் மறைவை தனிப்பட்ட இழப்பாக கருதுவதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். தனது நண்பராக, தத்துவஞானியாக, வழிகாட்டியாக இருந்ததாகவும், ஒரு போதும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் செல்வதாகவும் சோனியா காந்தி கவலை தெரிவித்துள்ளார். மேலும், மன்மோகன் தனது நடத்தையில் மென்மையானவர், ஆனால் சமூகநீதி, மதச்சார்பின்மை உள்ளிட்ட அவரது நம்பிக்கைகளில் மிகவும் உறுதியானவர் எனவும் நினைவு கூர்ந்துள்ளார்.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு, 10-3-2-1 ஃபார்முலா பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். தூங்கப்போவதற்கு 10 மணி நேரத்திற்கு முன் டீ/காஃபி குடிப்பதை தவிர்க்கவும். 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே உணவு சாப்பிட்டிருக்க வேண்டும். 2 மணி நேரத்திற்கு முன்பே பணி செய்வதை நிறுத்துங்கள். மொபைல்/டிவி 1 மணி நேரத்திற்கு முன்பே ஆஃப் செய்யுங்கள். இதை கடைபிடித்தால் நிம்மதியான தூக்கம் வரும்.
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் காலில் மாவுக்கட்டு போட்டது குறித்து ஐகோர்ட் கேள்வி எழுப்பியிருந்தது. இதுகுறித்து காவல்துறை, கைது செய்ய சென்றபோது வீட்டில் இருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது கீழே விழுந்ததில் அவரின் காலில் காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டதாக விளக்கமளித்துள்ளது.
அனைத்து பெண்களும் ஆபத்து காலங்களில் உதவும் “காவல் உதவி” செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என அமைச்சர் கோவி. செழியன் அறிவுறுத்தியுள்ளார். அவசர காலங்களில் செயலியில் சிவப்பு நிற “அவசரம்” என்ற பொத்தானை அழுத்தி, பெண்கள் உதவி பெறலாம். பயனர் விவரம், இருப்பிடம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பெறப்பட்டு உடனே சேவை தரப்படும். கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப் ஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.
கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என ராமதாஸ் குரல் எழுப்பியுள்ளார். பஞ்சாப்பில் ஒரு டன் கரும்பு விலை ₹4,100 வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் ₹3150 மட்டுமே வழங்கப்படுகிறது. இப்படியெல்லாம் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதுதான் திராவிட மாடலின் சாதனையா? என விமர்சித்த அவர், ஒரு டன் கரும்புக்கு ₹5000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
UGC தலைவராக இருந்த போது மன்மோகன் சிங்கிற்கு வந்த ஒரு அழைப்புதான், அவரை அரசியலுக்கு வரவழைத்தது. 1991ல் சோவியத் ஒன்றியம் உடைந்து உலகமே திக்குமுக்காடிப் போயிருந்தது. இந்திய பொருளாதாரம் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து இருந்தது. அப்போது நெதர்லாந்தில் இருந்த மன்மோகனுக்கு, பிரதமர் நரசிம்ம ராவ்வின் செயலாளர் போன் செய்து, நிதி அமைச்சராக தேர்வு செய்துள்ளதாக கூறினார். அன்று முதல் அவர் அரசியல்வாதி ஆனார்.
UPI பயனாளர்களுக்கு RBI நற்செய்தியை அறிவித்துள்ளது. இனி 3ஆம் தரப்பு ஆப்கள் மூலமும், PPI வாலட்களுக்கு பணம் செலுத்தலாம். அதாவது, Phonepe, Paytm வாலட்களுக்கு பணத்தை மாற்றவோ, பெறவோ விரும்பினால், அதற்கு அந்த Appஐ தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. வேறு எந்த UPI ஆப்கள் மூலமாகவும் இதை செய்யலாம். முன்னதாக, வங்கியின் ஆப்கள், வங்கியுடன் இணைக்கப்பட்ட ஆப்கள் மூலம் மட்டுமே இதை செய்ய முடியும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன் ரோஹித்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஃபார்ம் இல்லாமல் அவர் ஆஸி.க்கு எதிரான BGT தொடரில் திணறி வருகிறார். 2வது டெஸ்ட்டில் 9, 3வது டெஸ்ட்டில் 10, 4th Test முதல் இன்னிங்சில் 3 ரன்களில் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், ரோஹித் கேப்டன் பதவியை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது ஓய்வுபெற வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
‘ஜெயிலர் 2’ படத்தில் KGF நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோக, முதல் பாகத்தில் நடித்த மிர்ணாவும், தமன்னாவும் 2ஆம் பாகத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு ஜன.1ஆம் தேதி படம் குறித்த அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோ வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மார்ச் மாதம் ஷூட்டிங்கைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.