India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கல் சிறப்புத் தொகுப்போடு சேர்த்து மக்களுக்கு ₹1000 ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆண்டுதோறும் பொங்கலுக்கு அரிசி, பருப்பு, கரும்பு, சர்க்கரை ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதோடு சேர்த்து ₹1000 அளிக்கப்பட்டால், ஜனவரி மாதம் மகளிர் உரிமைத் தொகையுடன் சேர்ந்து குடும்பத்திற்கு ₹2000 கிடைக்கும்.
ஆடைகளுக்கு GST உயர்த்தினால் ஒரு லட்சம் பேருக்கு வேலை பறிபோகும் என இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. GST-யை 12%இல் இருந்து 28%ஆக உயர்த்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியானால் சிறு, நடுத்தர நிறுவனங்களைப் பாதிக்கும் என அச்சங்கம் கவலை தெரிவித்துள்ளது. அதேநேரம், ₹1,000 வரையிலான ரெடிமேட் ஆடைகளுக்கான 5% GST-யை ₹1,500ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் முடித்து திங்கட்கிழமை முதல் அவை செயல்படும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேநேரம், விடுமுறை நாள்களை ஈடு செய்யும் விதமாக புதுச்சேரியில் இன்று பள்ளிகள் செயல்படவுள்ளன.
எப்போதும் காலையில் செய்யும் சில வேலைகள் நம்மை நாள் முழுக்க உற்சாகமாக இருக்க செய்யும். அவற்றில் சில, * உங்களின் காலை கடன்களை முடியுங்கள் * நாளில் மேற்கொள்ளவுள்ள வேலையை பட்டியலிடுங்கள் * உடற்பயிற்சி செய்யுங்கள் * உங்களுக்கு பிடித்த மெல்லிய இசையை கேளுங்கள் * மாணவர்கள் காலையில் படித்தால், நினைவாற்றல் கூடும் * எழுந்தவுடன் தண்ணீர் அருந்துங்கள், அது உடலின் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக்கும்.
தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது. திருமாவளவனை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விடாமல் கூட்டணி தடுக்கிறது என்று விஜய் பேசியதும், மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா பேசியதும் சர்ச்சைக்கான முக்கிய கருப்பொருளாக மாறியுள்ளன. இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
”திமுகவிடம் நான் கேட்க வேண்டியதை நான் நேரடியாகவே கேட்பேன். ஆதவ் அர்ஜூனாவை இயக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். திமுகவை ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அவரை திருமாவளவன் பின்னாலிருந்து இயக்குவதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. முன்னதாக, ஆதவ் அர்ஜூனா பேசியது அவரது சொந்தக் கருத்து என்று திருமா கூறியிருந்தார்.
ஐபிஎல் அணிகளின் மிகவும் மதிப்புமிக்க அணிகளின் பட்டியலை BRAND FINANCE வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் இடத்தில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 122 மில்லியனுடன் முதலிடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 119 மில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. அதைத் தொடர்ந்து RCB (117M), KKR (109M), SRH (85M), RR (81M), DC (80M), GT (69M), PBKS (68M) மற்றும் LSG (60M).
மகாவிஷ்ணுவின் கையில் உள்ள சுதர்சனச் சக்கரத்தை ஸ்ரீசக்கரத்தாழ்வார் என்று விஷ்ணு புராணம் போற்றுகிறது. அரங்கனுக்கு உகந்த சனிக்கிழமைகளில் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று, சக்கரத்தாழ்வாருக்கு துளசி சாத்தி, நெய் விளக்கேற்றி சந்நிதியை 12 முறை வலம் வந்து ‘ஓம் சுதர்ஸனாய வித்மஹே ஜ்வாலா சக்ராய தீமஹி தன்னோ: சக்ர ப்ரசோதயாத்’ என்ற ரதாங்க மந்திரத்தை சொல்லி வேண்டினால் கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தமிழகம் இன்னும் மீளவில்லை. அதற்குள், வங்கக் கடலில் இன்று புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது. இதன் காரணமாக, வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஆனால், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலினி பாண்டே. பாலிவுட்டில் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் கதாநாயகனாக அறிமுகமான ‘மகாராஜ்’ படத்தில் இவர் ஆபாசமாக நடித்து இருந்ததாக சர்ச்சைகள் கிளம்பின. இது குறித்து முதல் முறையாக விளக்கமளித்த அவர், “கதாபாத்திரம் உண்மைத்தன்மையோடு இருக்க வேண்டும் என்று நினைத்து அப்படி நடித்தேன். ஆனால், தற்போது அது எனக்கு நெருடலாக இருக்கிறது” என்றார்.
Sorry, no posts matched your criteria.