India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புயல், மழை பாதிப்புகளை சுட்டிக்காட்டி அதிமுகவை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், தூங்கி வழிந்த நிர்வாகத்தால் மழைக்காலம் என்றாலே சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த காலம் ஒன்று இருந்தது. அது அதிமுக ஆட்சிக்காலம். ஆனால், இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு ஒரே இரவில் இயல்பு நிலை திரும்பும் காலம் திராவிட மாடல் ஆட்சிக்காலம் எனத் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் கனமழை பெய்து பள்ளி, கல்லூரிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் இருந்து இன்று சென்னை திரும்பிய <<14760713>>அண்ணாமலை <<>>நிருபர்களை சந்தித்தார். அப்போது செந்தில் பாலாஜி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை ஏதோ தியாகி போல திமுக கொண்டாடுவதாக விமர்சித்தார். மேலும், செந்தில்பாலாஜி என்ன நாட்டுக்காக பாடுபட்ட காந்தி மகானா என கேள்வியெழுப்பிய அவர், ஊழல் மலிந்த திமுக இதை செய்வது ஆச்சரியமில்லை என்றும் கூறினார்.
ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் வட மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. சூறைக்காற்று மற்றும் கனமழை காரணமாக பல செல்போன் டவர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பலருக்கு செல்போனில் சிக்னல் கிடைக்காத நிலை உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, அனைத்து செல்போன் நிறுவனங்களும் INTRA CIRCLE ROAMING வசதியை செயல்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் ROAMING-ஐ ஆன் செய்தாலே, சிக்னல் இல்லாவிட்டாலும் பேச முடியும்.
நடிகர் அஜித்குமார் தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். விடாமுயற்சி, குட் பேட் அக்லி என 2 படங்களில் நடித்து வரும் அஜித், அதற்கு மத்தியில் கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக பார்சிலோனாவில் தீவிர பயிற்சியும் எடுத்து வருகிறார். இந்த நிலையில் ‘குட் பேட் அக்லி’ படத்திற்காக, அவர் தனது எடையை 8 கிலோ வரை குறைத்துள்ளார். இது தொடர்பான போட்டோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வாகன பேரணியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கிடையே பேரணியில் பேசிய அவர், வயநாடு மக்களின் அன்பு மற்றும் ஆதரவுக்காக உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றியை தெரிவித்தார். இந்த தொகுதியை முன்மாதிரியான தொகுதியாக கொண்டு வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
புதுச்சேரியில் நாளை பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெங்கால் புயல் காரணமாக புதுச்சேரியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகள், வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து மாணவ- மாணவிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை அங்கு விடுமுறையை மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியா கூட்டணியை உடைக்க பாஜக தொடர்ந்து முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லி நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும், ஒற்றுமையை சீர்குலைக்கவும் பாஜக பல முயற்சி மேற்கொண்டிருப்பதாக விமர்சித்தார். வெறுப்புணர்வுக்கு எதிராக காங்கிரஸ் போராடி வருவதாகவும், இதில் வெற்றி பெற அரசியல் அதிகாரம் அவசியம் என்றும் கூறினார்.
மதுரையில் ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்பு சார்பில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கியதும், மாணவ-மாணவியர் தமிழ் வாழ்த்து பாடினர். அப்போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, தேசிய கீதத்தை பாட வைக்கப்பட்டனர். அதன் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஏற்கனவே, ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ என்ற வார்த்தை விடுபட்டது சர்ச்சையானது.
AUS PM 11 அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா ஓபனிங் இறங்காதது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது. AUSக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ரோஹித் இல்லாததால், ராகுலும், ஜெய்ஸ்வாலும் ஓபனிங் களமிறங்கினர். ஆனால், தற்போது ரோஹித் இருந்தும், அவர்களே களமிறங்கியுள்ளனர். முதல் போட்டியில் இந்த ஜோடி சிறப்பாக விளையாடிய நிலையில், அதையே 2வது போட்டியிலும் மெயின்டெய்ன் செய்யும் எனக் கருதப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.