India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக 100-க்கும் அதிக ரன்களை அதிவேகமாக சேஸ் செய்த அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது. நியூசி.க்கு எதிராக அந்த அணி இந்த சாதனையை படைத்துள்ளது. முதலில் களமிறங்கிய நியூசி. இரு இன்னிங்சிலும் முறையே (348 & 254) ரன்களை எடுத்தது. முதல் இன்னிங்சில் 499 ரன்கள் எடுத்த ENG அணி, 104 ரன்கள் டார்கெட்டை 12.4 ஓவர்களில் கடந்து, இந்த புதிய சாதனையை படைத்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், பல இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்வதால் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
ஃபெஞ்சல் புயலால் விழுப்புரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக குற்றம்சாட்டினார்.மேலும், பல விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்காததால், கடந்த 2 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய Prime Minister’s XI அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஆஸி அணி 43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் குவித்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய அணி தரப்பில் கில் 50, நிதிஷ், வாசிங்டன் சுந்தர் தலா 42 ரன்கள் குவித்தனர்.
நமது போராட்டம் நாட்டின் ஆன்மாவுக்கானது என பிரியங்கா காந்தி கூறியுள்ளார். வயநாடு மானந்தவாடி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவின் கட்டமைப்பை அழிக்கும் சக்திக்கு எதிராகவும், மக்களின் தேவைகளுக்கும், உரிமைகளுக்கும் என்றும் தோளோடு தோள் நின்று போராடுவேன் என உறுதி அளித்தார். வயநாடு தொகுதியில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு பிரியங்கா வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் சூழ்ந்திருப்பதால், பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் நலனை கவனத்தில் கொண்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
விமல் நடிக்கும் புதிய படத்திற்கு ‘பரமசிவன் பாத்திமா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இசக்கி கார்வண்ணன் இயக்கும் இப்படத்தில் சாயாதேவி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் தலைப்பை நடிகர் விஜய்சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, கோவையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், திடீரென திசை மாறிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது தி.மலை, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு, நீலகிரி வழியாக மைசூருக்கு சென்று கொண்டிருப்பதாக தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய அணியை கண்டு ஆஸி. வீரர்கள் பயப்படவில்லை என்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலந்து கூறியுள்ளார். எவ்வித பதற்றமும் இன்றி 2ஆவது டெஸ்டில் ஆஸி. அணி சிறப்பாக விளையாடும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், ஒவ்வொரு இந்திய வீரர்களையும் வீழ்த்த தனி திட்டம் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அதை முன்பே கூற முடியாது என்றும், களத்தில் அது எதிரொலிக்கும் என்றும் நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.