India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாய்ச்சவடால் விட்டு பேசியவர்கள் யாரும் இன்று வரை எதுவும் செய்து காட்டியதில்லை என்று விஜய்க்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். திமுக மீது காலம் காலமாக விமர்சனங்கள் வந்துக் கொண்டிருக்கிறது எனக் கூறிய அவர், நானும் இறுமாப்போடு சொல்கிறேன், கட்டுப்பாடோடு பணியாற்றினால், 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் நிச்சயம் வெற்றிபெறும் என சூளுரைத்துள்ளார்.
தி.மலையில் வரும் 13ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற உள்ள நிலையில், கொப்பரை வைக்கும் இடத்தில் இருந்து 400 அடிக்கு மண் சரிவும், அரைமலை பகுதியில் இருந்து சுமார் 600 அடிக்கு கீழ் மற்றொரு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், மக்கள் யாரும் சிக்கி இருக்கிறார்களா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. சமீபத்தில், மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் திமுகவை விமர்சித்தது திருமாவளவனுக்கு கடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து திருமாவளவன் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். நான் தடுமாறுவதாகவும், கட்சி தள்ளாட்டம் காண்பதாகவும் சிலர் பேசி வருகின்றனர். எங்களுக்கு எந்த தடுமாற்றமும் இல்லை. எங்கள் சுயமரியாதையை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கூறினார்.
எங்களுக்கு எந்த தடுமாற்றமும் இல்லை. சமூக மாற்றத்திற்கான தாக்கத்தை விசிக என்றைக்குமே ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இந்த நேரத்தில் விசிக தொண்டர்கள் உறுதியாக இருக்க வேண்டும். விசிகவை நாடு முழுவதும் விரிவுப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. எதை எந்த நேரத்தில் எப்படி அணுக வேண்டும் என்பது எனக்கு தெரியும். பேராசைக்கு விலை போகிறவன் நான் கிடையாது எனக் கூறினார்.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிகவின் ஆதவ் அர்ஜுனாவும், விஜய்யும் திமுகவை விமர்சித்திருந்தனர். குறிப்பாக, ஆதவ் அர்ஜுனா பேசிய போது, தமிழ்நாட்டில் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனக் கூறினார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய உதயநிதி, “யாரும் பிறப்பால் முதல்வர் ஆகவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆட்சி செய்கிறார். இந்த அறிவு கூட இல்லை அந்த ஆளுக்கு” என ஒருமையில் பேசினார்.
‘புஷ்பா 2’ திரைப்படம் 2 நாளில் ₹400 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. இந்நிலையில், பெரும்பாலான ரசிகர்களை இப்படம் திருப்தி செய்துள்ளதால் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விரைவில் ₹1,000 கோடி கிளப்பில் இணையும் எனக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி (MVA) கூட்டணியில் இருந்து விலகுவதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. நடைபெற்ற மகாராஷ்டிர தேர்தலில் மகாயுதி கூட்டணி ஆட்சியமைத்த நிலையில் காங்கிரஸ் தலைமையிலான MVA கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. அதில், உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த ஒருவர் பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவாக பேசியதால் சமாஜ்வாதி அதிருப்தியில் வெளியேறுகிறது.
திருச்செந்தூரில் யானை தாக்கி உயிரிழந்த பாகன் உதயகுமார் மனைவிக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. கோவிலில் அலுவலக உதவியாளராக பணிபுரிவதற்கான ஆணையை திமுக எம்.பி கனிமொழி அவரிடம் நேரில் வழங்கினார். கடந்த 18ம் தேதி யானை தெய்வானை பாகன், அவரது உறவினரை தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உதயகுமார் மீது மிகுந்த அன்பாக இருந்த யானை, ஒரு வாரத்திற்கு மேல் உணவு உட்கொள்ளாமல் இருந்தது.
மத்திய அரசுப் பணிகளில் சேர்பவர்களது ஆவணங்களை 6 மாத காலத்திற்குள் சரிபார்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 1985ஆம் ஆண்டு ஒருவர் அரசுப் பணியில் சேர்ந்தார். ஆனால், அவர் இந்திய குடிமகன் அல்ல என்று 2010ஆம் ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், ஒருவர் பணியில் சேர்ந்த 6 மாதத்திற்குள் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று SC உத்தரவிட்டது.
1) Climatology – காலநிலை பற்றிய படிப்பு 2) CCI – Competition Commission of India 3) டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் – ரோலோஃப் டீசல் 4) இந்தியாவின் முதல் பெண் பத்திரிகையாளர் – சுவர்ணகுமாரி தேவி 5) கவி ராட்சசன் என போற்றப்பட்ட புலவர் – ஒட்டக்கூத்தர் 6) ரப்பரை பதனிட உதவும் தனிமம் – சல்ஃபர் 7) சூரியக் குடும்பத்தில் அதிக வெப்பமுடைய கோள் – வெள்ளி 8) இந்தியாவில் முதல் CENSUS 1881ஆம் ஆண்டு கணக்கிடப்பட்டது.
Sorry, no posts matched your criteria.