India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘அமரன்’ படத்தில், இதுதான் தனது போன் நம்பர் என சாய் பல்லவி எழுதி கொடுக்கும் காட்சி நீக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட நம்பர், வாகீசன் என்ற கல்லூரி மாணவருடையது என்பதால், அவருக்கு தொடர்ந்து போன் வருவதாக புகார் தெரிவித்து இருந்தார். ஆனால், இதற்கு படக்குழு எவ்வித பதிலையும் அளிக்காததால், ₹1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன் காரணமாக, OTT வெர்ஷனில் அந்த காட்சி நீக்கப்பட்டுள்ளது.
பண்டிகைகளை பள்ளிகளில் கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இவ்விழாக்கள் பள்ளி வேலை நேரத்தில் நடைபெறக் கூடாது. ஒவ்வொரு பள்ளியிலும் கல்வியாண்டின் துவக்கத்திலேயே மாணவர்களின் கற்றல் – கற்பித்தல் நிகழ்வுகளுக்கு இடையூறு ஏதுமில்லாமல் இலக்கிய மன்ற விழாக்கள், கல்வி வளர்ச்சி நாள் விழா உள்ளிட்டவை நடத்த வேண்டும் உட்பட பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. <
IAS, IPS, IFS, IRS உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் UPSC மெயின்ஸ் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முதல்நிலை தேர்வான ப்ரிளிம்ஸ் கிளியர் செய்த 14,627 பேர் செப்., மெயின் தேர்வு எழுதினர். இதில் வெற்றி பெறுபவர்கள் இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவர். தேர்வு முடிவுகளை www.upsc.gov.in, www.upsconline.nic.in தளத்தில் தேர்வர்கள் தெரிந்துக்கொள்ளலாம்.
ப்ரித்வி ஷா கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது முன்னாள் கோச் ராஜு, ஷாவின் துயரக் கதையை பகிர்ந்துள்ளார். வறுமையான குடும்பத்தில் பிறந்த ப்ரித்வி, கடுமையான கஷ்டங்களை சந்தித்து இந்திய அணியில் இடம்பெறும் அளவிற்கு முன்னேறியதாக ராஜு தெரிவித்துள்ளார். சிறு வயதிலேயே தாயை பறிகொடுத்ததாகவும், நல்லது, கெட்டதை சொல்லிக் கொடுக்கும் அம்மாவின் அரவணைப்பு அவருக்கு கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் திமுகவை விமர்சித்திருந்த நிலையில், அவர்களுக்கு ஆர்.எஸ். பாரதி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் மன்னராட்சி நடைபெறுவதாக சிலர் கூறுகிறார்கள். மக்கள் தேர்ந்தெடுத்தால்தான் யாராக இருந்தாலும் இங்கு ஆள முடியும். நேற்று முளைத்தவன் எல்லாம் திமுகவுக்கு சவால் விடுகிறான். திமுகவை எதிர்ப்பவன் மண்ணோடு மண்ணாகி விடுவான் என அவர் கூறினார்.
தி.மலை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் நாளை முதல் டிச.16ஆம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு பணி மற்றும் 13ஆம் தேதி தீப திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்த மாவட்டத்திற்கு அரையாண்டுத் தேர்வு ஜன.2ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செல்போனை சிறிது நேரம் பார்த்தாலே சர்ர்ரென சார்ஜ் கம்மியாவதற்கு காரணம் மொபைல் டேட்டாதான் என்கின்றனர் நிபுணர்கள். மொபைல் டேட்டாவை பயன்படுத்தும் போது, சிக்னலை தேடவும், 3G, 4G, 5G-க்கு நொடிகளில் மாறவும் செல்போன் பேட்டரி அதிகம் உழைக்கிறது. ஆனால், WIFI யூஸ் செய்கையில், சிக்னல் தொடர்ந்து கிடைப்பதால் சார்ஜ் நீடிப்பதோடு, செல்போனும் நீண்டகாலம் உழைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெங்களூரைச் சேர்ந்த வருண் ஹசிஜா, ஆண்டுக்கு ₹1 கோடி சம்பளம் தரும் வேலையை விட்டுள்ளார். ஒரு வேலை செய்யும் போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனவும், தான் தாக்கம் ஏற்படுத்தும் அளவு சவாலானதாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அது இல்லாத காரணத்தால் வேலையை விட்டதாக தெரிவித்துள்ளார். வேலை கிடைக்காமல் பலர் இருக்கும் நிலையில், ஒரு கொள்கையுடன் வேலை செய்யும் இவர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சினிமாவில் இருந்து 1 ஆண்டு தற்காலிகமாக விலகியிருக்க ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு செய்துள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அவரது மகள் கதீஜா ரஹ்மான் இது குறித்து விளக்கமளித்துள்ளார். 29 ஆண்டுகால திருமண உறவு முறிந்ததால் ஏற்பட்ட விரக்தியில், ARR இப்படி முடிவு செய்தாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால், இதுபோன்ற ஆதாரமற்ற தேவையில்லாத வதந்தியை பரப்ப வேண்டாம் என கதீஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
INDIA கூட்டணியை தலைமையேற்று வழிநடத்த தயாராக உள்ளதாக மம்தா பேசியதற்கு சமாஜ்வாடி கட்சி ஆதரவளித்துள்ளது. அடுத்தத்தடுத்த தோல்விகளில் இருந்து மீண்டு கூட்டணியை வலுப்படுத்த இது உதவும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. அதேபோல், காங். தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என CPI-யும் கருத்து கூறியுள்ளது. ஆனால் மம்தா பானர்ஜி தலைமைக்கு வர நினைக்கிறார், நாங்கள் அப்படி நினைக்கவில்லை என காங். தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.