news

News December 3, 2024

துருவ் ஜூரெலை நீக்கக்கூடாது: ஹர்பஜன் சிங்

image

2வது டெஸ்டில் சுப்மன் கில்லுக்காக துருவ் ஜூரெலை நீக்கக்கூடாது என ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார். முதல் டெஸ்டை போலவே ராகுல் – ஜெய்ஸ்வால் ஓப்பனிங் இறங்க வேண்டும் என்ற அவர், ரோஹித், கோலி அடுத்தடுத்து விளையாட வேண்டும் என்றார். ரோஹித் 3 இடத்தை தவிர, வேறு இடத்தில் ஆடுவது நல்லதல்ல எனவும், அவர் 6 ஆவதாக இறங்கினால், அணிக்கு பயனில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

News December 3, 2024

எதிர்க்கட்சிகளுக்கு பணிந்தது மத்திய அரசு..!

image

நமது அரசியல் சாசனம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு இது. இதையொட்டி, அரசியல் சாசனம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. முதலில் இதற்கு இணங்காத மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் அமளியால் பணிந்தது. மக்களவையில் டிச.13, 14-ம் தேதிகளில், மாநிலங்களவையில் டிச.16, 17-ம் தேதிகளிலும் விவாதம் நடைபெறவுள்ளது. அரசின் முடிவால் நாடாளுமன்றம் இன்று சுமூகமாக நடந்தது.

News December 3, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அலர்ட் விடுத்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெள்ளத்தில் தத்தளிக்கும் கடலூருக்கும் மழை அலர்ட் விடுக்கப்பட்டதால், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News December 3, 2024

ரஜினி கையெழுத்திட்ட கிட்டார் யாருக்கு?

image

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த வார வீக்கெண்ட் எபிசோடுக்கு ‘ரஜினி ஹிட்ஸ்’ என்ற சுற்றை நடத்த ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ குழு முடிவெடுத்துள்ளது. அதன்படி, டிச. 7 மற்றும் 8ஆம் தேதி ஒளிபரப்பாகும் எபிசோடில் போட்டியாளர்கள் அனைவரும் ரஜினியின் ஹிட் பாடல்களை பாடவிருக்கிறார்கள். சிறப்பாக பாடும் குழந்தைக்கு ரஜினி கையெழுத்திட்ட கிட்டார் பரிசாக கிடைக்கும். இந்த சிறப்பு கிஃப்ட் பெறப்போகும் குழந்தை யார்?

News December 3, 2024

9 ஆண்டுகளுக்குப்பின் அதே தவறை செய்த ஸ்டாலின்?

image

2015இல் ஜெ.ஆட்சியின்போது, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மிட்நைட்டில் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக நீர் திறக்கப்பட்டதால், சென்னையே வெள்ளத்தில் தத்தளித்தது. ஆயிரக்கணக்கானோர் வீடு, உடைகளை இழந்தனர். அதைபோலவே தற்போது, சாத்தனூர் அணையிலிருந்து அதிகாலை 4.30க்கு அதிகளவு நீர் திறக்கப்பட்டதால், கடலூர் மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதாக, எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். யாரை குறை சொல்வது?

News December 3, 2024

ஏலம் போகாதவர்.. உலக சாதனை படைத்தார்!

image

IPL ஏலத்தில் விலைபோகாத GTஅணியின் தொடக்க ஆட்டக்காரர் உர்வில் படேல், ‘சையத் முஸ்தாக்’ தொடரில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 6 நாட்களுக்கு முன்பு திரிபுராவுக்கு எதிராக 28 பந்துகளில் சதம் அடித்த அவர் இன்று உத்தரகாண்ட் அணிக்கு எதிராக 36 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் உலக டி20 போட்டியில் 40 க்கும் குறைவான பந்துகளில் 2 சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.

News December 3, 2024

செம்பரம்பாக்கம் போல் சாத்தனூரில் நடந்துள்ளது: PMK

image

சாத்தனூர் அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறந்தது ஏன் என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததை அறிந்த அரசு, முன்பே தண்ணீரைத் திறக்காமல், செம்பரம்பாக்கம் போல் சேர்த்து வைத்து ஒரே நேரத்தில் திறந்ததே 4 மாவட்ட பேரழிவுக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிகாலை 2.45 மணிக்கு மக்கள் தூங்கும் நேரத்தில் எச்சரிக்கை விடுத்ததாக அரசு பொய் கூறுகிறது என்றும் சாடியுள்ளார்.

News December 3, 2024

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹6000 வழங்குக..

image

சாத்தனூர் அணையில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதாகவும், இதன் பிறகே கடலூரில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாகவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹6000 வழங்கப்பட்டதை போன்று, தற்போது ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்க வேண்டும்
எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

News December 3, 2024

சின்ன வயதில் Cuteஆ இருக்கும் இந்த நடிகை யார்னு தெரியுதா?

image

அடடே! இவரே என உங்களை யோசிக்க வைப்பார் இவர். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு படங்களில் அறிமுகமானார். அஜித், விக்ரம், மாதவன் உடன் நடித்தவர் தென்னிந்தியாவிலும் வேகமாக வளர்ந்தார். அண்டங்காக்கா கொண்டைக்காரியாக தமிழகத்தையே ஆடவைத்தவர், திடீரென காணாமல் போனார். எப்படி சும்மா இருப்பது என Wildfire Photographer ஆக தற்போது கையில் கேமராவுடன் சுத்தி வருகிறார். இன்னுமா யார்’னு தெரியல. கமெண்ட்ஸ் பாருங்க…

News December 3, 2024

ஆதரவற்ற நிலையில் வங்கதேச இந்து துறவி!

image

வங்கதேசத்தில் கைதாகியுள்ள இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஆதரவாக ஒரு வழக்கறிஞர் கூட ஆஜராகவில்லை. அவருக்காக வாதாடி வந்த ராமன் ராய் மீது நேற்று இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொலைவெறி தாக்குதலை நடத்தினர். அவர் தற்போது ஐசியுவில் உயிருக்கு போராடி வருகிறார். இந்த பயத்தின் காரணமாக, சின்மோய் தாஸுக்காக ஒரு வழக்கறிஞர் கூட இன்று ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

error: Content is protected !!