news

News December 3, 2024

சேற்றை வீசியவர்கள் பாஜகவினர்: சேகர்பாபு

image

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியவர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். பாஜக மகளிரணியில் உள்ள விஜயராணியும், அவரது உறவினர் ராமர் என்கிற ராமகிருஷ்ணனும் சேர்ந்து, உள்நோக்கத்துடன் இதை செய்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாததால், பின்வாசல் வழியாக திமுகவை களங்கப்படுத்த பாஜக முயல்வதாகவும் சாடியுள்ளார்.

News December 3, 2024

5 ஓவரிலேயே அபார வெற்றி

image

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் Brian Bennett 21, Marumani 16 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து நடையை (20 ரன்களுக்கு 8 விக்கெட்) கட்டினர். இதனால் அந்த அணி 57 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்பின் களமிறங்கிய PAK 5.3 ஓவரிலேயே 61 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

News December 3, 2024

என்ன செய்யப் போகிறது PSLV C59 ராக்கெட்?

image

ப்ரோபா-3 செயற்கைகோளுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மாலை 4.08 மணிக்கு PSLV C59 ராக்கெட் ஏவப்படுகிறது. பூமியில் இருந்து 60,500 கி.மீ தொலைவில் நிலை நிறுத்தப்படும் இந்த செயற்கைகோள்கள், சூரியனின் புறவெளிக் கதிர்களை ஆய்வு செய்து, உடனுக்குடன் அந்த தரவுகளை அனுப்பும். ராக்கெட்டை ஏவும் இறுதிக்கட்ட பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

News December 3, 2024

US துணை அதிபர் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை !

image

US துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜே.டி.வான்ஸ் தனது மனைவி, குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அமெரிக்க கிறிஸ்தவரான வான்ஸின் மனைவி, இந்திய வம்சாவளி ஹிந்து குடும்பத்தை சேர்ந்தவர். காதலில் இணைந்த பந்தம் இருவரின் குடும்பத்தினரையும் இணைத்துள்ளது. வான்ஸ் தோளில் குழந்தையை தூக்கி வைத்திருப்பதும் Typical இந்திய தந்தைகளின் பழக்கம் என நெட்டிசன்கள் கமென்ட் செய்கின்றனர்.

News December 3, 2024

விரைவில் டாஸ்மாக்கில் அமல்

image

2025 ஏப்ரல் முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம், மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படுவதாக ஐகோர்ட்டில் TN அரசு தெரிவித்துள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தால், ₹45 கோடி வருவாய் கிடைப்பதாகவும் அரசு கூறியது. இதை கேட்ட நீதிபதி, இத்திட்டத்தால் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமை குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டு, வழக்கை பிப்.4க்கு ஒத்திவைத்தார்.

News December 3, 2024

மைக் டைசன் நாக் அவுட் செய்தால் ரூ.6 ஆயிரம் கோடி

image

உலகமே பார்த்த மைக் டைசன்- ஜேக் பால் குத்துச்சண்டை போட்டியில் டைசனின் தோல்வியை அவரது ரசிகர்கள் ஏற்கவில்லை. அவர்களில் ஒருவரான சவுதி பொழுதுபோக்கு அமைச்சர் துர்கி அல்ஷேக், ஜேக் பால் ஒரு ஆளே இல்லை. 3 நிமிடத்திற்குள் நாக் அவுட் முறையில் ஜேக் பாலை தோற்கடித்தால் டைசனுக்கு 700 மில்லியன் டாலர் (ரூ.6 ஆயிரம் கோடி) கொடுப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த முறை ரியல் ஃபைட். மைக் டைசன் ஏற்பாரா?

News December 3, 2024

கவுன்டவுன் ஸ்டார்ட் ஆயிடுச்சு..

image

சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட், நாளை விண்ணில் ஏவப்படுகிறது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்த ‘ப்ரோபா 3’ சாட்டிலைட்டுடன் ராக்கெட் விண்ணில் பாயவுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் நாளை மாலை 4.08 மணிக்கு ராக்கெட் செலுத்தப்படுவதற்கான கவுன்ட்டவுன் இன்று மாலை 3.08-க்கு தொடங்கியுள்ளது. சூரியன் குறித்த ஆராய்ச்சியில் இது புது மைல் கல்லாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

News December 3, 2024

BREAKING: முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு

image

ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக அதிகனமழை கொட்டித் தீர்த்ததால், விழுப்புரம் மாவட்டம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி முதல் மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 3, 2024

இன்று பொன்முடிக்கு.. நாளை திமுகவுக்கு: அண்ணாமலை

image

புயல் பாதிப்புகளை பார்வையிடச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வீசியது குறித்து அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், திமுக அரசு மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியின் வெளிப்பாடாகவே இந்தச் சம்பவத்தை பார்க்க வேண்டும். திமுகவுக்கு நாளை என்ன நடக்கப் போகிறது என்பதற்கான ஒரு மென்மையான நினைவூட்டல்தான் பொன்முடி சம்பவம் என அண்ணாமலை கூறியுள்ளார்.

News December 3, 2024

வங்கிக் கணக்கில் பொங்கல் பணம்.. சூப்பர் யோசனை

image

பொங்கல் பரிசுத்தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் என்று அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை யோசனை கூறியுள்ளது. 2025 பொங்கல் பரிசுத்தொகையை, ரேஷன் கடைகளில் வழங்குவதற்கு பதில், குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மகளிர் உரிமைத்தொகை போல், பொங்கல் பணத்தையும் வங்கிக் கணக்கில் செலுத்துவது குறித்து டிச.19க்குள் அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!