India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பல வினோதங்கள் புரிவதே இல்லை. இதுவும் அப்படியானது தான். ஜெர்மனியில் ஒரு வெள்ளை பேப்பர் பெண்ட்டிங்கிற்கு ₹9 கோடி விலையாம். ஜெனரல் 52″ x 52″ என்ற இது வெள்ளை enamel கொண்டு, எண்ணெய் மற்றும் Pigmentsகளை வைத்து வரையப்பட்டு, கண்ணாடி தூசியை உள்ளடக்கி இருக்கிறது. இதனை ஜெர்மனி ஓவியரான ராபர்ட் ரைமன் வரைந்துள்ளார். இது வெள்ளை என்றாலும், பல நிறங்கள் அதன் அர்த்தத்தில் இருக்கிறது என்கிறார் அவர். என்னமோ….
சென்னையில் மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை (21) பலர் பலமுறை அழைத்துச் சென்று பாலியல் உறவில் ஈடுபட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாணவியின் பயத்தை பயன்படுத்திக் கொண்ட வல்லூறுகள், அவ்வப்போது அவரை தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாணவியின் தோழி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
‘புஷ்பா தி ரூல்’ படத்தின் தலைப்புக்கு ஏற்ப இந்திய சினிமாவை ரூல் செய்து வருகிறது. பான் இந்திய படமாக உருவான புஷ்பா முதல் நாளில் மட்டும் உலக அளவில் ரூ.250 கோடி வசூலை வாரி குவித்தது. இந்நிலையில் இப்படம் மூன்று நாள்களில் மட்டும் ரூ.500 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிக வேகமாக ரூ.500 கோடி வசூலித்த படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்துள்ளது.
மதுரை வெளிச்சநத்தம் பகுதியில் விசிக கொடிக்கம்பத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன் அனுமதி பெறாமல் 25 அடி உயர கொடிக்கம்பத்தை 45 அடியாக உயர்த்தியதால், மாவட்ட நிர்வாகம் திருமாவளவன் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருந்தது. இது, ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்காக, திமுக மேற்கொள்ளும் பழிவாங்கல் நடவடிக்கை என பல்வேறு தரப்பிலும் விமர்சனம் எழுந்த நிலையில், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1.54 லட்சம் குடும்பங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருவதாக TN அரசு தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்களின் விவரங்களை ‘இ-கவர்னஸ்’எனப்படும் மின் ஆளுமை முகமை சரிபார்த்து உணவு வழங்கல் துறைக்கு ஒப்புதல் அளித்து வருகிறது. அதன்படி, கடந்த 4 மாதங்களில் பெறப்பட்ட 2.84 லட்சம் புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்களில் 1.54 லட்சம் பயனாளிகளுக்கு கார்டுகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி NZ, AUS அணி பவுலர்களிடம் திணறி வரும் நிலையில், ரோஹித்தின் மோசமான பார்ம் இந்திய அணிக்கு பெரும் தலைவலி ஆக மாறியுள்ளது. கடைசி 12 இன்னிங்ஸில் அவர் முறையே 3, 18, 11, 8, 0, 2, 52, 23, 8, 6, 3, 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 8 முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகியுள்ளார். ஏற்கனவே டி20க்கு விடை கொடுத்த ரோஹித் தற்போது ஓடிஐ, டெஸ்டில் மட்டுமே விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்கல்வி கற்க விரும்பும் ஏழை மாணவர்களுக்காக LIC கொண்டுவந்துள்ள ‘Golden Jubilee Foundation’ திட்டத்திற்கு இன்று முதல் டிச.22க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 10/12/டிப்ளோமாவில் 60% மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டுக்கு ₹20,000 என படிக்கும் காலம் முடியும் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகவல்களுக்கு: https://licindia.in/
டாலரின் மதிப்பை பலவீனப்படுத்த ஆர்வம் இல்லையென மினிஸ்டர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கத்தாரில் நடைபெற்ற தோஹா மாநாட்டில் பங்கேற்ற அவர், பிரிக்ஸ் நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும் என டிரம்ப் பேசியது குறித்து கருத்துக் கூறினார். டிரம்பின் முந்தைய ஆட்சியில் அமெரிக்காவுடன் தாங்கள் நல்ல உறவைக் கொண்டிருந்ததாகவும், பிரிக்ஸ் கரன்சிக்காக எந்தவொரு முன்மொழிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழையை வானிலை ஆய்வாளர்கள் வரைபடமாக வெளியிட்டுள்ளனர். அதன்படி, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதி கனமழை பெய்திருக்கிறது. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் 200 முதல் 300 செ.மீ வரை மழை பதிவாகியிருப்பது வரைபடத்தில் சிகப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வரலாற்றில் அதிக மழையை கொடுத்த ஒரு புயலாக ஃபெஞ்சல் மாறியிருக்கிறது.
ஒருநாள் கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர்தான் முதலில் இரட்டை சதம் அடித்தார். இதையடுத்து, 2ஆவது இரட்டை சதம் அடித்ததும் நமது இந்திய வீரர்தான். அவர் வேறு யாருமில்லை. முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக்தான் அவர். 2011இல் டிசம்பர் 8ஆம் தேதி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 149 பந்துகளில் 219 ரன்கள் விளாசினார். இந்த சாதனை 2014ஆம் ஆண்டு வரை நீடித்தது. ரோஹித் சர்மாவே அந்த சாதனையை முறியடித்தார்.
Sorry, no posts matched your criteria.