India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2025ஆம் ஆண்டு 23 நாள்களை பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. ஜன 1 – புத்தாண்டு, ஜன 14 – தைப் பொங்கல், ஜன 15 – திருவள்ளுவர் நாள், ஜன 16 – உழவர் திருநாள், ஜன 26 – குடியரசு தினம், பிப் 11 – தைப்பூசம், மார்ச் 30 – தெலுங்கு வருடப்பிறப்பு, மார்ச் 31 – ரம்ஜான், ஏப்ரல் 1 – கணக்கு முடிப்பு, ஏப்ரல் 10 – மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 18 – புனித வெள்ளி
மே 1 – மே தினம், ஜூன் 7 – பக்ரீத், ஜூலை 6 – முஹர்ரம், அகஸ்ட் 15 – சுதந்திர தினம், ஆகஸ்ட் 16 – கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 27 – விநாயகர் சதுர்த்தி, செப் 5 – மிலாதுன் நபி, அக் 1 – ஆயுத பூஜை, அக் 2 – விஜயதசமி, அக் 20 – தீபாவளி, டிச 25 – கிறிஸ்துமஸ் ஆகிய நாள்களில் அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
‘தாம் தூம்’ திரைப்படம் ஜனவரி 3ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில், ஜீவா இயக்கியிருந்த இப்படம் வெளியாகி 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆக்ஷன், ரொமாண்டிக் கலந்த இப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. குறிப்பாக, ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் உருவான பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், இப்படம் தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மீண்டும் வெளியாகவுள்ளது.
<
பெண்களின் ஜாதகத்தில் 8ஆம் வீட்டில் ராகு இருந்தால் அதனை மாங்கல்ய தோஷம் என்று சாஸ்திரம் கூறுகின்றது. அத்தகைய தோஷம் உள்ள பெண்கள், சனிக்கிழமையில் விரதமிருந்து ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலுக்கு சென்று செப்பினால் செய்யப்பட்ட கருடனுக்கு மல்லிகைப்பூ மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, அர்ச்சனை செய்து, விளக்கேற்றி, ஸ்ரீகருட காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் RN.ரவி இன்று ஆய்வு செய்யவுள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆளுநர்களே வேந்தர்களாக செயல்படுகின்றனர். இந்நிலையில், சிசிடிவி ஏன் வேலை செய்யவில்லை? கேட் செக்யூரிட்டிகளை கடந்து குற்றவாளி உள்ளே நுழைந்தது எப்படி போன்றவற்றை ஆளுநர் இன்று ஆய்வு செய்கிறார்.
குளிர் காலத்தில் முகப்பருக்கள் வராமல் இருப்பதை தவிர்க்க சில டிப்ஸ் ◦ சருமத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எண்ணெய் சருமமாக இருந்தால் அடிக்கடி முகத்தைக் கழுவவும் ◦ கற்றாழை ஜெல், முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர், சந்தனத்தைக் கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம் ◦ வைட்டமின் சி, வைட்டமின் ஏ நிறைந்த பழங்களை எடுத்து கொள்ளலாம் ◦ தினமும் 2 லிட்டர் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும் ◦ கிரீம்களை தவிர்க்கவும்
தமிழகத்தில் காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, கடலூர், சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், புதுச்சேரியில் மழை பெய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக முன்னாள் தலைவர் விஜயகாந்தின் நினைவு தினத்தை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் பேரணிக்கு தேமுதிக ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், அதற்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நெரிசல் மிகுந்த பகுதியான கோயம்பேட்டில் பேரணி நடைபெற்றால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர். ஆனால், ஏற்கெனவே தேமுதிக தொண்டர்கள் அங்கு கூடியுள்ளனர்.
இந்தியா -ஆஸி., போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மெல்பேர்ன் சென்றுள்ளார். அங்கு டெஸ்ட் அணி கேப்டன் ரோஹித்தை சந்தித்து அவரின் டெஸ்ட் எதிர்காலம் குறித்து கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் WTC 2025 இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறவில்லை என்றால், சிட்னியில் நடைபெறும் 5வது டெஸ்ட் போட்டிதான் ரோஹித் சர்மாவின் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும்.
Sorry, no posts matched your criteria.