news

News December 8, 2024

இந்தியாவுக்கு ₹2,940 கோடி கடன் வழங்க ஒப்புதல்

image

இந்தியாவுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ₹2,940 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், கதி சக்தி திட்டம் மற்றும் தேசிய சரக்கு கையாளுகை கொள்கையை செயல்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் சரக்கு, சேவை ஏற்றுமதியை ₹168 லட்சம் கோடியாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான உதவிகளை வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது.

News December 8, 2024

சிரியாவில் புரட்சி.. அதிபர் சென்ற விமானம் மாயம்?

image

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் HTS கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் அங்கிருந்து தப்பிச்சென்ற அதிபர் பஷார் அல் ஆசாத் பயணித்த விமானம் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டமாஸ்கஸ் எல்லைப் பகுதியில் பஷார் ஆசாத்தின் தந்தை சிலையை உடைத்த கிளர்ச்சியாளர்கள், ஜெயிலில் இருந்து முக்கிய கைதிகளையும் வெளியேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சிறிது நேரத்தில் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளது.

News December 8, 2024

ஆந்திர விபத்தில் 4 பேர் பலி

image

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் அதிகாலை நடைபெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அட்டங்கியில் இருந்து நார்கட்பள்ளிக்கு சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், நான்கு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 8, 2024

அடேங்கப்பா! 3வது இடத்தில் இந்தியா.. எதில் தெரியுமா?

image

2024ம் ஆண்டு அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலை சர்வதேச நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், 185 கோடீஸ்வரர்களுடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 21% அதிகமாகும். அதேபோல், அவர்களின் கூட்டுச்சொத்து மதிப்பும் நடப்பாண்டில் 42.1% அதிகரித்து ₹76 லட்சம் கோடியாக உள்ளது. 835 கோடீஸ்வரர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 427 கோடீஸ்வரர்களுடன் சீனா 2வது இடத்திலும் உள்ளன.

News December 8, 2024

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்

image

பிரதமர் மோடியை குறிவைத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்படவுள்ளதாக மும்பை போலீசாரின் வாட்ஸாப் நம்பருக்கு மெசேஜ் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ISI அமைப்பைச் சேர்ந்த இருவர் இந்தியாவில் முகாமிட்டுள்ளதாகவும், ஆயுதங்கள் நாட்டிற்குள் வந்துவிட்டதாகவும் மெசேஜ் வந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்து மெசேஜ் வந்தது கண்டறியப்பட்டு போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

News December 8, 2024

சென்னை வந்தே பாரத் ரயிலில் சிக்கி தவித்த பயணிகள்

image

சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கதவு திறக்காமல் போனதால், இறங்க வேண்டிய 15க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதவித்துள்ளனர். ரயில் புறப்பட, ஓட்டுனருக்கு தகவல் கூறி, கொடைரோடு ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு ரயில்வே சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணம் தானா என கூறப்படுகிறது. புதுசு தான் ரயிலூ..?

News December 8, 2024

புஷ்பா ராஜா..? ராக்கி பாயா?

image

சின்ன வயதில் இருந்து ஒரே விஷயத்திற்காக ஏங்கி அதனை நோக்கி பயணிப்பவர்களே இருவரும். ஒருவர் அம்மாவுக்கு செய்த சத்தியம். இன்னொருவர் வீட்டு பெயருக்காக. இருவரையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. 2ஆம் பாகத்தில், இருவருமே பெரிய அரசியல்வாதியுடன் மோதுகிறார்கள். காசுக்காக எந்த தூரத்திற்கும் போவார்கள். அம்மாவை மதிப்பவர்கள், மனைவிக்கு அடக்கமானவர்கள். இன்னும் லிஸ்ட் நீளம்…உங்களை கவர்ந்தவர் யார்..?

News December 8, 2024

அடம் பிடிக்கும் ஷிண்டே.. MH அரசியலில் புது குழப்பம்!

image

MHஇல் CM பதவியேற்பு விழா முடிந்து 4 நாள்கள் ஆகியும் அமைச்சரவை குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல கண்டிஷன்களை போட்டுத் தான் ஃபட்னவிஸுக்கு CM பதவியை ஷிண்டே விட்டுக்கொடுத்ததாகத் தெரிகிறது. அதில், Dy CM, உள்துறை தனக்கு வேண்டும் என்பதும் அடங்கும். ஆனால், உள்துறையை தன் வசம் வைத்திருக்க CM விரும்புவதால் ஷிண்டே தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News December 8, 2024

தி.மலையில் பக்தர்கள் மலையேறுவதில் சிக்கல்?

image

தி.மலையில் மண் சரிவில் சிக்கி 7 பேர் பலியான நிலையில், அங்கு புவியியல், சுரங்கத்துறை வல்லுனர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அருணாச்சலேஸ்வரர் கோயிலின் பின்புறம் முலைப்பால் தீர்த்தம் வழியாக மலையேறி சென்ற இக்குழு மண்ணின் தரம், பாறைகளின் நிலை குறித்து ஆய்வு செய்து வருகிறது. டிச.13 தீபத்திருவிழா நடைபெற உள்ள நிலையில், ஆய்வுக்கு பின்னரே பக்தர்களை மலையேற அனுமதிப்பதா, வேண்டாமா என முடிவு செய்யப்பட உள்ளது.

News December 8, 2024

விமானத்தில் வரும் முருங்கை. எகிறும் விலை

image

சென்னையில் முருங்கைக்காயின் விலை கிலோவுக்கு ₹400ஆக உயர்ந்து விற்பனையாகிறது. இதற்கான காரணம் மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது. இந்தாண்டு, தமிழகத்தில் முருங்கையின் விளைச்சல் குறைவாக இருப்பதால், மகாராஷ்டிரா குஜராத் மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது. ரயிலில் வரும்போது வாடி விடுவதால் விமானத்தில் முருங்கையை எடுத்து வருவதாகவும், அதனால் விலை உயர்ந்திருப்பதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.

error: Content is protected !!